isaiswasan – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sat, 23 Feb 2013 16:27:36 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png isaiswasan – ஓரினம் https://new2.orinam.net 32 32 முகூர்த்த நேரம் https://new2.orinam.net/ta/muhoorthaneram-ta/ https://new2.orinam.net/ta/muhoorthaneram-ta/#comments Thu, 21 Feb 2013 19:03:33 +0000 https://new2.orinam.net/?p=8412 MNeram

 

இன்று:
“சித்தப்பா லேட் ஆச்சி, சீக்கிரமா கிளம்பு” என்றாள் மீனா குட்டி.
“நீ போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு, நான் வந்துட்டேன்” என்று சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு, திலீப் ஷு லேசை அவசரமாய்க் கட்டினான்.
பட்டன் ஸ்டார்ட் வண்டியை தயக்கமின்றி விர்ரென எழுப்பினாள் மீனா.
“தம்பி வரும்போது இன்னைக்கு மறக்காம வெளிய சாப்பிட்டு வந்துடுங்க. நாங்க எல்லாம் செங்கல்பட்டு போறோம்” என்று சொல்லி முடிக்கும் முன் “டேய் அடி வாங்க போற” என்று அதட்டி மீனாவின் முன்று வயதுத் தம்பியை அடக்க முயன்றாள் மீனாவின் அம்மா.
அதற்குள் வண்டி வேகம் பிடிக்கவே, “சரி அண்ணி” என்று உரக்கக் கத்தி விட்டுச் சூடு பிடிக்கப் பறந்தான் திலீப்.

அன்று:
“சார் சார், ப்ளீஸ் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க” என்று குரல் கேட்டது. சாதரணமாய் வண்டியை நிறுத்த மாட்டான் திலீப் என்றாலும், அதைச் சொன்ன கண்களுக்கு அடிபணிவதை விட அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கூர்மையான பார்வை, அதை விட கூர்மையான மீசை, உறுதியான இரும்பு எலும்புகளின் மேல் இறுக்கமாய் போர்த்திய கருப்புத் தோலின் மீது ஆழுக்குச் சட்டை.
“பிச்சைக்காரனா?” என்று திலீப் வியந்திருக்கையில், “சார் சார், நீங்க பாம்பு ஹௌசு பக்கம் போறதா இருந்தா, என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிட்டு போங்க சார். பஸ் மிஸ் ஆயிடிச்சி. லேட்டா போனா முதலாளி என்ன வேலைய வுட்டு தூக்கிருவாறு சார். என்னைக்காவது உங்க பைக்கு ரிப்பேர் ஆனா, என்ன கூப்பிடுங்க, ப்ரீயா பண்ணித் தர்றேன் சார்” என்று முத்து சொன்ன பண்ட மாற்றை விட, அவன் கண்களுக்கு மீண்டும் அடி பணிந்தான் திலீப்.

இன்று:
“மிஸ்டர் திலீப், உங்க எக்ஸ்ப்ளனேஷனேல்லாம் சரிதான். இந்த ‘பக்கி’ சாப்ட்வேர நாம கிளையண்டுக்கு அனுப்பினா, அடுத்த டேர்முக்கு நமக்கு ப்ராஜெக்ட் கிடைக்கிற சன்செஸ் ரொம்பக் கம்மி” – இது மேனேஜர்.
“சார், பர்ஸ்ட் இது நம்ம ப்ராஜெக்டே இல்லை. சிங்கப்பூர் ஆபிஸ் இதை தெரியாத்தனமா சைன் பண்ணி, எக்குத்தப்பா மாட்டிக்கிட்டதால, நைசா நம்ம தலைல கட்டிட்டாங்க. அவங்க கேக்கர அவுட்புட் வேணும்னா, இன்னும் ஆறு மாசமாவது ஆகும். ஒரு வாரத்துலல எல்லாம் முடிக்க முடியாது சார்” என்று உறுதியாகச் சொன்னான் திலீப்.
“சரி இன்னைக்கு எப். சி. ஆர். டாகுமெண்டையாவது முடிச்சி குடுத்துட்டுப் போங்க” என்றார் மேனஜர்.
“சார் மண்டே வந்து உங்களுக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு குடுக்கறேன். இன்னைக்கு அஞ்சு மணிக்கு நான் கிளம்பியே ஆகணும்” என்று திலீப் முடிவாகச் சொன்னான்
“என்ன வீகெண்ட் பெங்க்ளூருக்குப் போய் பொறுக்கப் போறியா? செய் செய் உனக்கு என்ன பிள்ளையா குட்டியா” என் சலித்துக் கொண்டார் மேனேஜர்.

அன்று:
“சார், சைலன்சரக் கழட்டி, கலர் கலரா லைட்டுப் போட்டு, சைரன் சவுண்டு எல்லாம் வரணும்னா, அதுக்கு ரொம்பச் செலவாகும்” என்று முத்து சொல்லி முடிக்கும் முன், அவன் வாயை தனது வாயால் மூடி, ஐந்து நிமிட இறுக்கத்திற்கு பிறகு திலீப் சொன்னான் “பாதி பேமண்ட் குடுத்தாச்சு, மீதிய ராத்திரி குடுக்கறேன்”
முத்துவை அவன் குறும்பு, இல்லை, குத்தும் பார்வை பார்த்தான்.
“இந்த ஸ்டைலெல்லாம் நல்லாத்தான் இருக்கு, இன்னைக்கு ராத்திரி என்னை மரியாதையா கொண்டு போய் மெட்ராஸ்ல விடு, நாளைக்கு நான் வேலை பாக்கணும்” என்றான் முத்து.
“சண்டே கூட வேலையா? என்னோட இருக்ககூடாதா” என்று திலீப் சிணுங்கினான்.
“உனக்கு என்ன நீ சாப்ட்வேர் இஞ்சினீயர், உக்காந்து தேய்க்கர வேலை, வீக்கென்ட் எல்லாம் ‘ப்ரீ’தான். நான் உடம்பு வளைச்சு உழைச்சாத்தான், என் குடிகார அப்பன் வெச்ச கடனையும், என் வாழாவெட்டி தங்கச்சிக்கும், அவ பிள்ளைக்கும் ஒரு வழியைச் செய்ய முடியும்” என்று முடித்தான் முத்து.
“உடம்ப ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, அது எனக்குச் சொந்தம்” என்று திலீப் கூலாகச் சொன்னான்.

இன்று:
திலீப் சாப்பிட்டுக் கொண்டே அம்மாவிடம் போனில், “இதுக்கெல்லாம் ஏம்மா டென்ஷன் ஆகுற, அண்ணி அண்ணா கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆச்சு, இன்னும் நீ என்னவோ புது சம்மந்தி மாதிரி அவங்க அத கண்டுக்கல, இத மதிக்கலன்னு அலட்டிக்காம , பேரன் பேத்தியோட போய் சேரு. ஐ மீன், செங்கல்பட்டுக்கு” என்றான்.
“ஏன்டா சுடுகாட்டுக்குன்னு சொல்லேன். அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன். உங்க அண்ணன் தலையணை மந்திரத்துக்கு மயங்கி, அவளோட தலையாட்டி பொம்மையா மாறிட்டான். நீயாவது வீட்ட மதிக்கரவளா ஒருத்திய கட்டுவன்னு பர்த்தா, ஒரு வழிக்கும் வர மாட்டேங்கற. உங்க அப்பா அவர் பாட்டுக்கு என்னை நிர்கதியா உங்க தலைல கட்டிட்டு, நிம்மதியா போய் சேந்துட்டாரு. என் தலைல அவ்ளோதான் எழுதி இருக்கு” என்று திட்டித் தீர்த்தாள்.
திலிப்பிற்கு உணவை முடிக்கும் முன்பே, வயிறு நிறைந்து விட்டது.

அன்று:
“நமக்குப் பொண்ணு பொறந்தா அது உன்னை மாதிரிதான் இருக்கணும்” என்றான் தீலிப் .
இடைமறித்து “ஒண்ணும் வேணாம். நானே கருப்பு, அப்புறம் அவள எவனும் கட்ட மாட்டான்” என்றான் முத்து.
“கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்று பாடி நகைத்த திலீப் “பாத்தியா பாத்தியா, உனக்கு ஏன் இந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்? நீ மட்டும் வெள்ளையா இருந்தா, நான் உன்னை அன்னைக்கு பைக்ல ஏத்தி இருக்கவே மாட்டேன்” என்றான்.
“உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான். இப்படி வாய்ப்பேச்சுலயும், கனவிலேயும் தான் நாம குடும்பம் நடத்தி குழந்தையெல்லாம் பெத்துக்க முடியும். மத்தவங்களப் பொறுத்த வரைக்கும் நான் உனக்கு வெறும் ப்ரெண்டு. அன்னிக்கு உன்னோட அபீஸ் ‘ட்ரிப்பு’ன்னு வயநாடு போனப்ப உன்னோட கலீக்ஸ் கிட்ட எல்லாம் நான் யாரு, உனக்கு எப்படி பிரண்டுன்னு புளுகித் தள்ளி, சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி. உங்க வீட்டுக்கு வந்தா, உங்க அம்மா, இந்த மேக்கனிக்கு பயலோட உனக்கு என்ன சகவாசம்னு கேக்கறாங்க” என்று முத்து தன் நிலைமையை வெளிப்படுத்தினான்.
சற்று நேரம் யோசித்த திலீப் “சரி வா ஓடிப்போய் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.
“இன்னைக்கு நீ அடிச்சா ஜோக்குல மட்டமான ஜோக் இதுதான்” என்று சிரித்தான் முத்து.
“இல்லடா ஸீரியஸா” என்று பதில் சொன்னான் திலீப்.

இன்று:
திலீப்பின் செல் போன் ஒலித்தது. அவன் அண்ணாவிடமிருந்து. “டேய் திலீப், உடனே கோயம்பேடு பஸ்டாண்டுக்குப் போய் அம்மாவ கூட்டிட்டு வந்து வீட்ல ட்ராப் பண்ணு” என்றது அண்ணாவின் குரல்.
“ஏன்ணா? அம்மா அண்ணியோட செங்கல்பட்டுக்குல போயிருக்கணும். என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று குழம்பினான் திலீப்.
“ஆமாம்டா. நேரம் காலம் தெரியாம அம்மா உன் அண்ணி கிட்ட சம்மந்தி வீட்டுப் பிரச்சனைய ஆரம்பிச்சிருக்கா. பதிலுக்கு உன் அண்ணியும் ‘சுருக்’குன்னு ஏதோ கேட்டுட்டா. அம்மா வீம்பா அவங்க வீட்டுப் பக்கம் தலை வெச்சி கூடப் படுக்க மாட்டேன். செங்கல்பட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டா. உங்க அண்ணி எவ்வளவோ சொல்லியும் கேக்கல, அவளும் கெளம்பிட்டா” என்று புலம்பித் தீர்த்தான் அண்ணன்.
“ச்சே என்ன நான்சென்ஸ், நான் அத்தனை சொல்லியும் அம்மா இப்படி பண்ணிட்டாங்களே. சரி, ஒரு ஆட்டோ புடிச்சி அம்மாவ நீ வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கக் கூடாதா” என திலீப் கேட்டான்.
“அது எனக்குத் தெரியாதா? அம்மா அப்செட் ஆகி அழுதுட்டு உட்கார்ந்திருக்காங்க. இப்ப நம்ம யாராவது போனாதான் அவங்க கொஞ்சம் சமாதானமாவாங்க. அதுவும் அவங்க செல்லப் புள்ள நீ போனீன்னா அவங்க மனசு கொஞ்சம் ரிலாக்சாகும்” அண்ணன் அவனை விடுவதாக இல்லை.
“அது இல்லண்ணா, எனக்கு 6.30 மணிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ போய்க் கூட்டிட்டு வாண்ணா, ப்ளீஸ்” என்று திலீப் மீண்டும் தப்பிக்கப் பார்த்தான்.
“இத பாரு இன்னைக்கு பேங்க்ல இயர்லி ஆடிட். லாக்கர் ரூமத் திறந்து உள்ள உட்கார்ந்திருக்கோம். மிட்நைட் குள்ள நான் முடிச்சி வெளிய வந்ததாலேப் பெரிய விஷயம். நீ போய்த்தான் ஆகணும், ஃப்ரைடே ஈவனிங் நீ என்ன வெட்டி முறிப்பன்னு எனக்குத் தெரியும்” என்று அண்ணன் கறாராய்ப் பேசினான்.
“அது இல்லண்ணா …” என்று திலீப் மீண்டும் பேச ஆரமிப்க்க, “ஜஸ்ட் டூ இட்” என்று சொல்லி அண்ணன் போனைக் கட் செய்தான்.

இதை முத்துவிடம் எப்படி விளக்குவது என்று திலீப் குழம்பி இருக்கையில், முத்துவிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ். “யே குருவி, சிட்டுக் குருவி” என்ற மெட்டு ஒலித்தது.
“Konjam late aagum inga periya problem” என்ற எஸ்.எம்.எஸ்சை கண்டபோது, வேதனைப்படுவதா, ஆறுதல் அடைவதா எனக் குழம்பினான்.
சுதாரித்தவன் “sari enakkum personal problem, 7.25 kku vantha pothum. manage pannalam” என பதில் எஸ்.எம்.எஸ். கொடுத்து விட்டு, அம்மாவை அழைத்து வரக் கிளம்பினான்.

கோபம் நிறைய இருந்தது. அத்தனைக் கூட்டம் மிக்க பேருந்து நிலையத்தில் அம்மாவைச் ‘சட்’டெனக் கண்டுபிடித்து “ஏறும்மா” என்றான். அம்மாவை வீட்டில் இறக்கி விட்ட போது மணி 6.57. வண்டியை விட்டு இறங்காமல் வாசலில் இருந்தே கிளம்பி விடலாம் என முடிவு செய்து இருந்த போதிலும், சிறுநீர் நிரம்பி வயிறு சிதறும் நிலையில் இருந்ததால், சற்றே உள்ளே சென்று விட்டு வரலாம் என்று முடிவை மாற்றிக் கொண்டான். கையை அலம்பி விட்டு, அதைத் துடைக்காமலேயே கிளம்ப இருந் திலீப்பை அம்மா மறித்து “சட்டுன்னு ஒரு உப்புமா பண்ணித் தரேன், சாப்பிட்டுப் போ” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், எனக்கு அவசரமா வேலை இருக்கு, நான் போகணும்” என்று சொல்லிக் கொண்டு வாசலுக்கு விரைந்த திலீப், ப்ரேக் அடித்தாற்போல் வேகம் குறைந்துத் திரும்ப வீட்டிற்குள் நுழைந்தான்.
“என்னடா ஏதாவது மறந்துட்டியா?” என்று அம்மா கேட்டாள் .
“என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா” என்று அம்மா காலில் விழுந்தான் திலீப்.
“உனக்கு ஒரு குறையும் வராது, நீ தீர்க்காயுசா இருப்ப. நல்லா இருடா கண்ணா” என்று வியப்புக் கலந்த புன்னகையுடன் வாழ்த்தினாள் அம்மா.

மாலை நேரச் சாலை வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்து வடபழனி வந்து சேருவதற்குள் மணி 7.50 ஆகி விட்டது. வண்டியை நிறுத்தி, முத்துவுக்கு செல் போனில் கால் அடிதான் திலீப். முத்து எடுக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து “owner paduthal. innum 15 min. apparam kilambiduven” என்று எஸ்.எம்.எஸ் வந்தது முத்துவிடமிருந்து.
“9o clock temple will be closed soon. pls hurry” என்று பதில் அனுப்பினான் திலீப். மணி ஆக ஆக, நெஞ்சை அடைத்தது திலீப்பிற்கு.

எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒவ்வொரு கணமும், யுகமாய் நீண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான் திலீப். பரபரப்பாய் கோவிலுக்குள் அலை மோதிய வண்ணம் பல்லாயிரம் ஜனங்கள். பிச்சை, பூ வியாபாரம், செருப்புக் காவல் எனக் கோவில் சார்ந்த வர்த்தகம் புரியும் சிறு நிலை முனைவர்கள், கூலிகள், கோவிலின் மணியோசை, அதன் பெருஞ்சுவர் மேல் முடுக்கப் பட்டிருந்த ஸ்பீக்கரின் சத்தமான பக்திப் பாடல்கள், உயர்ந்த கோபுரம், அதன் மீது வண்ண மின் விளக்குகள், அதன் பிரகாசத்தையும் பொருட்படுத்தாது மீறி ஒளிர்ந்த ஒன்றிரண்டு வின்மீன்கள் – அனைத்தும் சேர்ந்து அலை அலையாய் அடிப்பது போலவும், அலைகளை தாங்கும் ஒரு சிறிய தீவாய்ச் தான் சிதறாமல் நிற்பது போலவும் தோன்றியது திலீப்பிற்கு.

நேரம் ஆக, புயல்கள் தணிந்தன. அலைகள் ஓய்ந்தன. ஆனால் தனித்தீவில் பூகம்ப நிலை உருவாகிக் கொண்டிருந்தது.
8.37 க்கு ஒரு கை திலீப்பின் தோள்களை தட்டியது. “சாரிடா லேட் ஆயிடிச்சி” என்ற முத்து குரல் கேட்ட போது, அடக்கி வைத்திருந்த மூச்சு எரிமலையின் அனல் குழம்பாய் வெளியேறித் தணிந்தது திலீப்பிற்கு.
“புது சட்டையைக் குடு, ரெண்டு நிமிஷத்துல மாத்திட்டு வந்திடறேன்” என்றான் முத்து.
“அதுக்கெல்லாம் நேரம் இல்லை, வாப் போகலாம்” என்று அவசரப்படுத்தினான் திலீப்.
கோவிலுக்குள் அப்போது கூட்டம் அதிகம் இல்லை. தீபங்கள் எண்ணெய் தீர்ந்து அணையும் தருவாயில் இருந்தன. அர்ச்சனைகளும், ஸ்பீக்கரின் கர்ஜனைகளூம் நின்று போயிருந்தன. ஆண்டவன் சன்னிதானத்தில், ‘அவனும் அவனும்’ கைகூப்பிக் கும்பிட்டு விட்டு, மெல்லிய இரு தங்கச் சங்கிலிகளை ஒருவர் கழுத்தில் ஒருவர் மாட்டி, அதற்குள் ஈரமாகி விட்டிருந்த கண்களொடுக் கண்கள் பிணைத்துச் செய்தார்கள் ஒரு பிரமாணம்.

அது அவர்களின் முகூர்த்த நேரம்.

]]>
https://new2.orinam.net/ta/muhoorthaneram-ta/feed/ 6
கவிதை: ஆசை https://new2.orinam.net/ta/chinna-chinna-aasai-2/ https://new2.orinam.net/ta/chinna-chinna-aasai-2/#comments Wed, 27 Jun 2012 02:36:30 +0000 https://new2.orinam.net/?p=7142 ஸ்ரீ தனது ‘சின்ன சின்ன ஆசை’ கவிதையில் மிக்க அழகாக வீட்டாருடனும், சுற்றத்தாருடனும், இப்படியெல்லாம் இருந்தால் இனிமையாக இருக்கும் என்று, தனது ஆசைகளை, கனவுகளை முன்வைத்தான். படித்துப் பூரித்தேன். உடனே எனக்கு தோன்றியது நாம் எத்தனை முறை நினைத்திருப்போம், சமூகத்தில் இப்படிப்பட்ட ஏற்பு, அங்கீகரிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று. அவற்றை கொண்டு இந்த ஆசை பாடலை மேலும் வளர்க்கலாம் என்று தோன்றியது. இதோ என் கவிதை.

Image Source: The Hindu

ஆணும் ஆணும் காதல் பண்ணா அந்தப் படம் ஆறு மாசம் ஓட ஆசை
அப்பா ரெண்டு இருக்கும் பிள்ளையைச் சமுகம் தப்பாய்த் தூற்றாதிருக்க ஆசை
எப்போ உனக்குக் கல்யாணம் என எவர எவரோ கேட்கதிருக்க ஆசை
அக்கம் பக்கம் வீட்டு திருமணத்திற்குச் சென்றால் பெற்றோரை அவர்கள் நச்சரிக்காதிருக்க ஆசை

நாட்டமை புருசனை நாலு பேரு நல்லா பேசி மதிக்க ஆசை
நாட்டுப்புறத்துல குப்பனும் சுப்பனும் கைப்புடிக்க நெனச்சா அதுல சாதி பாக்காம சேர்த்து வைக்க ஆசை
ஊரு சாமி பூசாரி உறவு எல்லாம் வந்து நின்னு பேரு சொல்லி மாலை மாத்த ஆசை
நேரு இது மாறு இதுன்னு வேருபடுத்தாம கூடி வாழ ஆசை

பெண்ணும் பெண்ணும் புது வாழ்வு தொடங்க நினைத்தால் அதை அரசு அங்கீகரிக்க ஆசை
மலிவு விலை மாதச் சரக்கும் அவர்க்குக் குடும்பமென முறையாய்க் கிடைக்க ஆசை
எண்ணும் எழுத்தும் ஏகபோகமும் இல்லை எனினும் ஏக்கம் காதல் ஒன்றுதான், அதனால்
வண்ணம் பல வண்ணமாய் வாழ எந்தத் தகுதியும் தடையாய்த் தலையிடாதிருக்க ஆசை

எந்த அரவானரும் இங்கு அஞ்சாமல் கேஞ்சாமல் நெஞ்சம் நிமிர்ந்து வாழ ஆசை
அந்தப் பள்ளியும் கல்லூரியும் கொஞ்சம் மனம் திறந்து தன்பான்மை மாணவரை ஏற்க ஆசை
நங்கை நம்பி ஈரர் திருனறெல்லாம் வண்ணக் கொடியேந்தி ஊர்வலமாய்ச் செல்லுகையில்
எதுவும் மாறவில்லை எல்லோரும் ஓரினம் என அங்குள்ள மனிதரெல்லாம் வந்து அணைத்துக் கொள்ள ஆசை

]]>
https://new2.orinam.net/ta/chinna-chinna-aasai-2/feed/ 1
டயலாக் : அரசல் புரசல் https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/ https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/#comments Thu, 10 Mar 2011 11:25:10 +0000 https://new2.orinam.net/?p=2213 1. டூ மாமி-s
மாமி 1 : போன வாரம் லக்ஷ்மி  கல்யாணத்துக்கு தாமோதரன் சித்தப்பாவோட ரெண்டு மாப்பிள்ளைங்களும் வந்திருந்தா
மாமி 2 : என்ன சொல்றேள் மாமி, நேக்கு தெரிஞ்சு தாமோதரன் சித்தப்பாவுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு மாப்பிள்ளைங்க எப்படி இருக்க முடியும்? நமக்கு தெரியாம அவருக்கு இன்னொரு பொண்ணு இருக்காளா என்ன?
மாமி 1 : என்ன மாமி ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியாதா? அவர் பொண்ணு மூத்தவ, மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு ஆம்படையான கல்யாணம் பண்ணிண்டா. அவரோட பையன் போன வருஷம்தான் ஒரு அம்பளையோட செட்டில் ஆயிட்டான்.
மாமி 2 : அடக் கண்றாவியே, எல்லாம் கலிகாலம்!

2. பள்ளிக்கூடத்திலிருந்து கோபமாய் வீட்டுக்கு வந்தான் குட்டிப்பையன் விஷ்வேஷ்

விஷ்வேஷின் அம்மா : ஏன்டா கண்ணா மொரப்பா இருக்க?
விஷ்வேஷ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்னோட ப்ரெண்டு வினோத் என்னை எல்லாத்துலயும் பீட் பண்றான்
விஷ்வேஷின் அப்பா : அதவேற எங்ககிட்ட வந்து சொல்றியா? நீ நல்லா படிச்சா, ப்ராக்டிஸ் பண்ணா, அவன பீட் பண்ணலாம் இல்ல?
விஷ்வேஷ் : நான் எவ்ளோ படிச்சாலும் எனக்கு ரெண்டு அப்பா கிடைப்பாங்களா?
விஷ்வேஷின் அம்மா : என்னடா சொல்ற?
விஷ்வேஷ் : ஆமாம், அவனோட முதல் அப்பா ஸ்கூல்ல வந்து டிராப் பண்றார், ரெண்டாவது அப்பா சாயந்திரம் வந்து கூட்டிட்டு போறார்
விஷ்வேஷின் அம்மா : ஐய்யய்யோ இத கேட்டிங்களா

3. கொக்குவார்ப்பட்டி குழாயடியில் பெண்கள்

பெண் 1 : அடியே இந்த கூத்த கேட்டியா?
பெண் 2 : என்னடி?
பெண் 1 : ஒரே, நாள்ல, கவுண்டரோட பொண்ணும், கணக்கு வாத்தியோட பொண்ணும் காணாம போனாங்களே, நெனவிருக்கா?
பெண் 3 : ஆமாம், அது ஆகி ஒரு வருசம் மேல ஆயிடிச்சி. இன்னும் மர்மமாவே இருக்கு. ரெண்டும் ஜோடிப்புறா ஆட்டம் சுத்திக்கிட்டு இருக்கும். சரியா கவுண்டர் பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால எவன் வந்து அந்த சின்னஞ்சிறுசுகள என்ன பண்ணானோ, ‘பாடி’ கூட கெடைக்கல. ரெண்டு குடும்பமும் தேடாத எடம் இல்ல, வேண்டாத தெய்வமில்ல!
பெண் 1 : அடியே, அதான் இல்ல. நாம சின்னஞ்சிருசுங்கன்னு நெனைக்கறோம், அதுங்க பண்ண காரியத்த கேட்டா, இன்னும் ஒருவருசத்துக்கு தூங்க மாட்ட
பெண் 2 : விஷயத்த  சொல்றி
பெண் 1 : அந்த ‘வானவில்லின் வண்ணங்கள்’ னு டிவி ல போடறாங்களே தெரியுமா…
பெண் 3 : அந்த ஆம்பளையும் ஆம்பளையும் குடும்பம் நடத்தற கண்றாவிதானே அதுல காமிக்கிராக. அத யாரு பாக்கறா
பெண் 1 : அதுல பொம்பளையும் பொம்பளையும் குடும்பம் நடத்தரதையும் கூட காமிக்கிறாங்க. நேத்து வந்து நிகழ்ச்சில, இது ரெண்டும் வந்துசிங்க. வந்து, ‘அப்பா அம்மா, நாங்க ஒருத்தர ஒருத்தர் உயிருக்குயிரா காதலிக்கிறோம், எங்களுக்கு வேற வழி தெரில, எங்கள மன்னிச்சி ஏத்துக்கோங்க’ னு அழவுதுங்க
(சிறிது நேரம் மவுனம், முகச்சுளிப்பு)
பெண் 2 : இதுல ஒரு வசதி என்ன தெரியுமா, புருஷன் தொல்லையே இருக்காது
(சுளிப்புடன், சல சல வென சிரிப்பும்)

4. விடலைப் பெண்கள் கமலாவும் விமலாவும்

கமலா : நான் ஒண்னு சொன்ன கோச்சிக்கிவியா?
விமலா : சும்மா சொல்டி
கமலா: நேத்து உங்க அண்ணன காந்தி பூங்காவில பாத்தேன்
விமலா: அடச்ச அவளோதானா, அவன் எப்பயும் அங்கதாண்டி போய் சைட் அடிப்பான்
கமலா: அது இல்லடி, அவன சின்னியோட பாத்தேன்
விமலா: இருக்கும். அவனுக ரெண்டு பேரும் இப்ப ஒரே கிளாஸ்ல தான் இருக்காங்க
கமலா : ஐயோ அத நான் எப்படி சொல்லுவேன், உங்க அண்ணன் சின்னிய கிஸ் பண்ணிட்டு இருந்தாண்டி
விமலா : அப்படியா? என் அண்ணனுக்கு அறிவே இல்ல, சின்னி ஒரு நம்பி (gay), அவன போய் கிஸ் பண்ணானா?
கமலா: உனக்குதாண்டி அறிவே இல்ல, சரியான tubelightu, உங்க அண்ணன்  சின்னிய கிஸ் பண்றான்னா
விமலா : ஐயோ, அப்பா என் அண்ணனும்

5. மறுபடியும்  மாமி-s (can’t resist them)

மாமி 1 : நம்ம கோகிலாவுக்கு வந்த கதிய கேட்டியா?
மாமி 2 : என்ன மாமி சொல்றேள், நம்ம வட்டாரத்துலேயே, பாரின் போய் நிறைய பணம் பண்ணது அந்த மாமியோட பையன் முகுந்த் தான். அவங்களுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?  அதோட  மாமியும் வருஷா வருஷம் அமெரிக்கா போயிட்டு வராளே…
மாமி 1 : பணம் மட்டுமா மாமி வாழ்க்கை, இன்னும் எத்தனை இருக்கு? அவா பையனுக்கு வயசு முப்பத்தி ஆறு கை நிறைய சம்பாதிக்கிறான், பாரின்ல பெரிய வேலைல இருக்கான். அவன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலன்னா எதோ வில்லங்கம் இருக்கோன்னோ
மாமி 2 : ஒரு வேளை அங்கேயே ஏதாவது வெள்ளக்காரிய கட்டிண்டானோ என்னவோ
மாமி 2 : ஒரு வேளை அங்கேயே ஏதாவது வெள்ளக்காரிய கட்டிண்டானோ என்னவோ மாமியும், அவ பையனும், இந்த வெள்ளைக்காரனும் வடபழனி கோவில் ல எதோ பாமிலி  மாதிரி வளம் வந்தத பாத்தேனே.
மாமி 2 : அது அவன் ப்ரெண்டாஆ இருக்கும். இந்தியாவ பாக்க வந்து இருப்பான்
மாமி 1 : ப்ரெண்டா இருந்தா, ரெண்டு பெரும் வெள்ளை வேட்டி சட்டையோட மாமி கால்ல விழறா, மாமியும் அட்சதை போட்டு நீங்க ரெண்டு பெரும் பிரியமா என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்னு வாழ்தரான்னா பாத்துக்கோங்களேன், கழுத்துல மாலையும் தாலியும் தான் இல்ல
மாமி 2 : ஈஷ்வரா

]]>
https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/feed/ 1
கவிதை: வழிப்போக்கன் https://new2.orinam.net/ta/kavithai-vazhippokkan/ https://new2.orinam.net/ta/kavithai-vazhippokkan/#comments Mon, 20 Oct 2008 13:24:20 +0000 https://new2.orinam.net/?p=3240 ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல
போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர
வேகாது கொஞ்சம் வெயிலும்தான்தான் தணிய
சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல
ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி

கோளாறு கொண்ட நெஞ்சு கொதிக்கத்தான் தொடங்க
மீளாது மறந்த எண்ணங்கள் மேலுமெழ
வீழாத கண்ணீர் வழியுந் தருவாயில்
பாரத திசையின் தோன்றி பயணி ஒருவன் வந்தான்

புன்னகை ஒன்று கண்டு பூத்தது எந்தன் நெஞ்சு
சின்னதாய் அறிமுகம் செய்து செல்திசை விசாரித்து
கண்ணதால் கண்டு கண்டு களிப்பும் சற்று கொண்டேன்
என்னைப் போல் ஒருவன் என்றான், அவனுக்கு நண்பன் என்றான்
தன்னைப் போல் இல்லை எனினும், தனக்கு மிக நெருக்கம் என்றான்

வண்ணத்தின் ஒலிகள் போல ஆயிரம் கதைகள் சொன்னான்
எண்ணத்தின் ஏக்கம் எல்லாம் ஒரு கணம் உறங்க வைத்தான்
வெள்ளத்தின் பாய்ச்சல் போலே விரைந்து விட்ட மனதில்
கள்ளத்தனமாய் ஒரு கலக்கம் காதல் தனைப்போலே
சொல்லித்தான் பயனுமென்ன, அதைவிட சொற்கள் கேட்டு நின்றேன்

எண்ணிக்கை மறந்த நொடிகள் எத்தனையோ நீங்கிவிடினும்
இன்றெல்லாம் திகட்டா அவை இன்னமும் வேண்டிடுங்கால்
சென்றிடும் இடம் செல்ல வந்தது ஓரூர்தி
தென்றலின் ஊரென்றான், தன்னது அதுவென்றான்
கண்களில் உறக்கம் என்றான், தோள்சாய்ந்து தூங்கி விட்டான்

என்னது உறங்கா மனம், எத்தனை கனாக்காண
சொன்னது நினைவின் ஒலித்தது, அவன் ஊரும் வந்து சேர
கண்டதில் களிப்பென்றும், மீண்டும் காண்போமென்றும்
சென்று வருவேனென்றும், சொன்ன கணம் மறைந்தான்
சோதியில் இரவுதனில்

யாருக்குப் பிள்ளையோ, எவளுக்குக் கணவனோ,
பாலையில் தூரல் போலே சின்னதாய் சொந்தம் தந்தான்

]]>
https://new2.orinam.net/ta/kavithai-vazhippokkan/feed/ 1
கவிதை: அன்னையே மன்னிப்பாய் https://new2.orinam.net/ta/kavithai-annaiye-mannippaai/ https://new2.orinam.net/ta/kavithai-annaiye-mannippaai/#respond Mon, 20 Oct 2008 13:07:30 +0000 https://new2.orinam.net/?p=3216 உன்னையே சிதைத்து, ஒவ்வோர் அணுவையும் உயிர்வித்து
என்னையே தந்தாய் உலகிற்கு, ஏற்றங்கள் கண்டு வாழ்வதற்கு
கண்ணையே கையில் வைத்து, காலமெல்லாம் அதுபோல் காத்து
விண்ணையே கூட வளைத்து நான் கண்ணுரங்க உழைத்தாய்

முன்னதாய் நின்று நீ முதல் வார்த்தை கற்பித்தாய்
சின்னதாய் வைத்த அடிகள் சிறப்பாக ஊக்குவித்தாய்
ஏன்னதான் ஏழ்மையெனினும் கண்ணதின் கருணைதனிலே
கோமகன் போல் கருத வைத்தாய்

சொல்லதான் சொற்களில்லை எல்லாமே சொல்வதற்கு
மெல்லதான் நான் வளர, மேனி பெருத்து மோகங்கள் உணர
எல்லார் பருவம் போல், எனக்கும் வந்ததென, உன்
செல்வம் செழித்து செந்தாழம் பூக்குமென சின்னக்கனா கண்டிருப்பாய்

உண்மை சொல்வேன் உனக்கு, உள்ளம் வேறேனக்கு
கள்ளம் எதுவுமில்லை நீ கவலைப் படுவதற்கு, ஆனால்
வெள்ளம் பொங்குதெனக்கு என்னவர் கண்ட பொது
நெஞ்சம் அறிந்த நாள் முதல் இதுதான் விதியெனக்கு

வழக்கம் ஒருபோல் இருக்க, என் வாழ்வு வேறுபோல் பறக்க
குழப்பம் கொண்டு நான் குமுறிக் கொண்டிருந்தேன்
பழ்க்கம் ஆகிப் போனது மனம், பல காலம் போனதாலே
கலக்கம் எல்லாம் இன்றுன் கண்களைக் காண்பதுதான்

சோதனை உண்டெனக்கு, சொல்லமாட்டேன் உனக்கு
வேதனை பட்டாலும் நீ வெளிப்ப்டுத்த மாட்டாய் எனக்கு
பாதியாய் வாழ்விருக்கும், பகுத்தான் வழக்கு
நாதனுக்கு அப்படியோர் நயவஞ்சகக் கிறுக்கு

ஊனமாய்ப் பிறந்திருப்பின், ஊரெல்லாம் அறிந்திருக்கும்
வானமாய் உன்மேல், அநுதாபப் பட்டிருக்கும்
மானமற்ற மனிதர் வந்துன் மகன் மணம் பற்றிக் கேட்கையில், உன்னை
மெளனமாய் நிற்க வைத்தேன், மன்னிப்பாய் தாயே

]]>
https://new2.orinam.net/ta/kavithai-annaiye-mannippaai/feed/ 0