Ravi – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Mon, 04 Jun 2012 13:10:11 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Ravi – ஓரினம் https://new2.orinam.net 32 32 கவிதை: திருநங்கை தாலாட்டு https://new2.orinam.net/ta/thirunangai-thaalaattu/ https://new2.orinam.net/ta/thirunangai-thaalaattu/#comments Sat, 03 Dec 2011 20:02:29 +0000 https://new2.orinam.net/?p=5218

கனியினும் கனிந்த வுள்ளம், கனிந்து மெய்யுருகி – கண்கள்
பனிக்கவே நிற்கக்கண்டால், கல்லுமே கரைந்திடாதோ?
இனியுனக்கல்லல் இல்லை, கண்மணி கவலை வேண்டாம்
நனிதிறல் திருனர் முத்தே, செல்வி நீ கண்ணுறங்கு!

பெற்றதாய் தந்தை சுற்றம், விடுத்திட நீயும் செய்த
குற்றமும் ஏதும் உண்டோ – பாவியர் பேதை மாக்கள்
பற்றிடா துன்னை நாங்கள், அன்புடன் அரவணைத்தோம்
பெற்றி யீதெங்கட்கம்மா, தங்கமே கண்ணுறங்கு!

தஞ்சமும் உணவும்கூட தந்திடார் – வாழ்வில் நாமும்
மிஞ்சிட கல்வி தாரார், வேலைதான் தருவரோ காண்;
கெஞ்சியா பிச்சை கொள்வோம்? பாழும் இச்சூழல் மாறும்
அஞ்சிடாதமுதமே நீ, சோர்வற கண்ணுறங்கு!

தாயினும் பரிவு காட்டி , உலகறிவதனை யூட்டி
வேயினும் நல்ல தோளி, உந்தனை காத்து வெந்தே-
மாயினும் சமுதாயத்தை மாற்றுவோம், எமக்கு நீயோர்
சேயுமாய் ஆனாய் செல்வி, நன்கு நீ கண்ணுறங்கு!

]]>
https://new2.orinam.net/ta/thirunangai-thaalaattu/feed/ 4
ஆசிரியப்பா: போற்றிடுவோமே! https://new2.orinam.net/ta/aasiriyappaa-potriduvome/ https://new2.orinam.net/ta/aasiriyappaa-potriduvome/#comments Mon, 28 Nov 2011 23:43:55 +0000 https://new2.orinam.net/?p=5080

காதற் கதிரவன் ஆயிரம் கரங்கள்
நீட்டியே அன்போ டழைத்தும் அடைந்திட
இயலா நிலையில் ஏங்கிய புவிமகன்
தானும் பசலை படர பற்பல
கரங்கள் நீட்டினான் அவைதாம்
மரங்கள் அவற்றை போற்றிடுவோமே!

(பசலை: பிரிவாற்றாமையால் மேனி பசப்பு/பச்சை நிறம் அடைதல்)

ஆசிரியப்பா: ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதி உண்டு.
]]>
https://new2.orinam.net/ta/aasiriyappaa-potriduvome/feed/ 6