A. Revathi – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Tue, 14 Apr 2015 19:56:21 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png A. Revathi – ஓரினம் https://new2.orinam.net 32 32 திருனர்* தினம் 2015 – வாழ்த்துக்கள் https://new2.orinam.net/ta/revathi-transgender-day-2015-message/ https://new2.orinam.net/ta/revathi-transgender-day-2015-message/#respond Tue, 14 Apr 2015 19:49:17 +0000 https://new2.orinam.net/?p=11514 உச்ச நீதி மன்ற பாலின சிறுபான்மையினருக்கான (திருநங்கை, திருநம்பி, கோத்தி, இஜரா, ஜோகம்மா, சிவசக்தி, பாலினம் மாற்றிக்கொண்டோர், கின்னர் இன்னும் சில) ஆனை மற்றும் திருனர் தின வாழ்த்துக்கள்

15 ஏப்ரல் 2014 அன்று இந்தியாவில் இதுவரையிலும் வெளிபடையாக தெறியாத சில பாலின அரசியலை முன்னிறுத்தும் விதமாக உயர்நீதி மன்றம் முக்கிய ஆனை ஒன்றை பிறப்பித்தது. இந்தியாவில் Hijra என்று அழைக்கப்படும் திருநங்கைகள் மற்றும் FtoM என்று அழைக்கப்படும் திருநம்பிகள் இவர்களுக்கு ஆண்/பெண் தவிற்த்து மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து பிற பிற்ப்படுத்தோருடன் சேர்த்து அரசியல் அமைப்பில் இருக்கின்ற அனைத்து அடிபடை உரிமைகளையும் கிடைக்க மத்திய மாநில அரசுகளும் விரைவில் நடவெடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆனை பிறபித்தது. வரும் 15 ஏப்ரல் 2015 அன்று ஒருவருடம் நிறைவு பெறும் நிலையில் நல்ல தீர்ப்புக்கு நன்றி சொல்ல நாம் விழா எடுத்து கொண்டாட உள்ளோம். இந்த விழா திருநங்கை திருநம்பி விழாவாக ஜென்டர் மைனாரிடிஸ்க்கு கொடுக்கபட்ட அங்கீகாரமாக அமைந்துள்ளது. நாம் இனி உச்சநீதி மன்றத்தின் ஆனைபடி என்ன நடந்துள்ளது இனி என்ன நடக்கவேண்டும் என்பதை இந்நாளில் நம் கோரிக்கையாக நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை முன்வைத்து எடுத்துச்செல்ல போராளிகளை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உச்சநீதி மன்ற ஆனையில் உள்ள 130 பக்கங்களில் எது சரி, எது சரி இல்லை என்பதையும் பார்கவேண்டும். இந்த விசையத்தில் நம் தமிழக அரசின் செயல்பாடுகள் என்ன என்று தெறிந்து கொள்ளவும் இனி வரும் வருடங்களில் அடிபடை உரிமைகளை பெற்று கல்வி வேலைவாய்ப்பு என எல்லா துறைகளிலும் நாம் உயர்ந்து நின்று சாதித்து காட்டவேண்டும். நாம் யாருக்கும் தலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே போல் உச்சநீதி மன்றம் மற்றொறு ஆனையான IPC 377 திருநங்கையருக்கும் எதிராக உள்ளது அதையும் திருத்தம் செய்ய பாடுபடவேண்டும். வரும் காலங்கள் நமக்கு வசந்தகாலங்களாக இருக்கவேண்டும் என்று வரும் திருனர் தினம்மும், பாலின சிறுபான்மையினர் தீர்ப்புதினமும் அமைய எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியுடன் தெறிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்

ரேவதி

திருனர் – தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். உதாரணம் : தான் பெண் என்று மன அளவில் நம்பும் ஆண்கள். திருனர்கள் பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வழிமுறைகளை செய்ய விரும்புவர்களாக இருக்கலாம் அல்லது விரும்பாதவர்களாக இருக்கலாம். திருனர்களின் பால் ஈர்ப்பும் எல்லோரையும் போல பன்மைபட்டது.

]]>
https://new2.orinam.net/ta/revathi-transgender-day-2015-message/feed/ 0