மனம்திறந்து பேசுவோம் – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Wed, 04 Jan 2017 05:09:48 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png மனம்திறந்து பேசுவோம் – ஓரினம் https://new2.orinam.net 32 32 Video: Dealing With Family – குடும்பத்தினரை சமாளிப்பது எப்படி? https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/ https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/#comments Mon, 10 Feb 2014 01:08:01 +0000 https://new2.orinam.net/?p=9858 Velu and Sundar

In this hangout, some of Orinam’s members who are gay, talk about how they dealt with their family members post coming out.
(Language: Tamil)

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.

 

பகுதி 1/Part 1:

பகுதி 2/Part 2:

]]>
https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/feed/ 1
Video: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள் https://new2.orinam.net/ta/video-growing-up-gay-and-tamil-ta/ https://new2.orinam.net/ta/video-growing-up-gay-and-tamil-ta/#comments Mon, 27 Jan 2014 03:09:57 +0000 https://new2.orinam.net/?p=9684  

SundarHangout

In this hangout, some of Orinam’s members who are gay, talk about their respective journeys of realizing and accepting their sexuality and their coming out stories.

“அம்மா-அப்பா, அனுமார் கோவில், சைதாப்பேட்டை, சுவாமி விவேகானந்தர், சினிமா போஸ்டர், சின்ன வீடு, முதற் காதல், முடிவில்லா பயணங்கள்.”

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தாங்கள் எப்படி தங்கள் பாலீர்ப்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியும், தங்களின் வெளியே வந்த அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறார்கள்.

]]>
https://new2.orinam.net/ta/video-growing-up-gay-and-tamil-ta/feed/ 3
தாய் நாட்டின் துரோகம்! https://new2.orinam.net/ta/betrayed-by-country-ta/ https://new2.orinam.net/ta/betrayed-by-country-ta/#comments Sun, 22 Dec 2013 00:12:05 +0000 https://new2.orinam.net/?p=9396 379686_10200891094831643_984694158_n

டிசம்பர் 11, 2013 பல கோடி இந்திய மக்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கருப்பு தினம். அன்று இந்திய உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பை தள்ளி வைத்து, அதன் விளைவாக, ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமாக ஆக்கியது. ஒரு பாலை சேர்ந்த, பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட இருவரின், பரஸ்பர சம்மதத்துடன், தனிமையில் நடக்கும் பால் சம்மந்தப்பட்ட உறவுகளை, குற்றமாக கருதும் இந்திய சட்டத்தின் 377 பிரிவு, அரசியல் சாசனத்தின் படி செல்லுபடியாகும் என்றும், அதை இந்திய பாராளுமன்றம் விரும்பினால் மாற்றாலாம் என்றும் உச்ச நீதி மன்றம், டிசம்பர் 11 அன்று தீர்ப்பு வழங்கிற்று. ஒரே வரியில், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின், பல கோடி குடிமக்களை, “சின்னூண்டு சிறுபான்மை” என்று விவரித்த உச்ச நீதிமன்றம், அதே சிறுபான்மையை, பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை பெறக்கூடிய, குற்றவாளிகளாகவும் அறிவித்தது.

இதை நாங்கள் யாரும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. “நம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கருத்து என்று ஒன்று இருந்தால், அது அனைவரையும் அரவணைத்து போகும் சகோதரத்துவமே” என்று முழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக அறிவித்த, தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு முற்போக்கான தீர்ப்பிற்கு பிறகு, இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. தில்லி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு, உலகமெங்கும், மனித உரிமைகளின் மகத்தான் வெற்றி என்று பாராட்டப் பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், ஹிலரி கிளின்டன், 2011 ஆம் ஆண்டு மனித உரிமை தினத்தன்று, ஐ.நா. சபையில் ஆற்றிய உரையில், தில்லி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிப் பேசினார். அது வரையில், இந்தியாவின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக, வெளிவரத் துவங்கியிருந்த, இந்தியாவின் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினர், தீர்ப்பிற்கு பிறகு புது உத்வேகமும், உற்சாகமும் பெற்றனர். அவர்களின் இயக்கமும் வலுவடைந்தது. சட்டத்தின் பாதுகாப்புடன், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கைகளை முழுமையாக வாழவும், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், போராடவும், துவங்கினர். இந்தியாவின் பல நகரங்களில், வானவில் பேரணிகள் வருடாந்திர கொண்டாட்டங்களாக வடிவுபெற்றன. உள்ளூர் மற்றும் தேசிய அளவில் மீடியா நிறுவனங்கள், இவர்களின் பிரச்சனைகளை பற்றி பேசவும், எழுதவும் துவங்கின. கூட்டங்கள் நடத்தப் பெற்றன. புத்தகங்கள் எழுதப்பட்டன. திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மாற்றுப் பாலியல் இந்திய, எப்போழுதும் காணாத பொலிவுடன், வெளிவந்து கொண்டிருந்தது. சரித்திரத்தின் பக்கம் திரும்பி விட்டது என்றும், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், தோன்றியது என்பதே உண்மை.

தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரில் பிறந்து வளர்ந்த எனக்கு, ஒருபாலீர்ப்பு என்ற வார்த்தையை கூட இருபத்தி ஐந்து வயது வரையில் கேட்டறியாத எனக்கு, இந்த முன்னேற்றம், ஒரு நம்ப முடியாத நிகழ்வு என்றால் அது மிகையாகாது. பல ஆண்டுகள் மனப் போராட்டத்திற்கு பிறகு, ஒரு வழியாக துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, என் பெற்றோர்களிடம் நான் ஒருபாலீர்ப்பாளன் என்பதை, சில வருடங்களுக்கு முன்பு தான் சொல்லியிருந்தேன். திருமணத்திற்கான நிர்பந்தத்தை நிராகரித்து, மனம் விரும்பிய காதலை கண்டு, மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன், நேர்மையாக வாழத் துவங்கி இருந்தேன். அவமானமும், குற்ற உணர்வும் நிறைந்த என் இளமை பருவம், ஒரு மறந்து போன கடந்த காலமாக மாறியிருந்தது. எனது அடையாளத்திற்கு ஒரு யோகியத்தையும், எனது இருப்பிற்கு ஒரு உறுதியையும், தந்திருந்தது தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவிருந்த நாளென்று, நான் ஒரு சிறிய கொண்டாத்தையே திட்டமிட்டிருந்தேன். டிசம்பர் 11 ஆன்று, இந்திய நேரம், காலை பத்தரை மணிக்கு, நான் தற்பொழுது வசிக்கும் நியூ ஜெர்சியில், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, தீர்ப்பு வரவிருந்தது. தீர்ப்பின் பூரிப்பில் இரவு முழுவதும் குத்திக் கொண்டிருப்பேன், தூக்கம் இருக்காது, அதானால் அடுத்த நாள் பணிக்கு வரமுடியாது என்று என் பாஸிடம் சொல்லி, விடுப்பும் பெற்றிருந்தேன். தீர்ப்பை கொண்டாட இனிப்புகளும் தயாராக வாங்கி வைத்திருந்தேன். பல்வேறு நகரங்களில் வசிக்கும் என் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக ஆன்லைனில் தீர்ப்பின் அறிவிப்பை சேர்ந்து பார்க்கவும் திட்டமிட்டிருந்தோம். இந்தியாவிலிருக்கும் என் நண்பர்களும், குடும்பத்தினரும், உலகெங்கிலும் இருக்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், அவரவர் இடங்களில், ஆன்லைனில், தொலைக்காட்சிகள், வானொலிகள், என்று பல வழிகளில் இணைந்து, இந்தியாவின் சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு பெரிய நிகழ்வான இந்தத் தீர்ப்பை, ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு வந்தது தீர்ப்பு. அடிவயிற்றை அதிர வைத்த அந்த தீர்ப்பு. “கீழ் நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளி வைத்து, சட்டப்பிரிவு 377, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது,” என்று தொலைக்காட்சியில், அந்த செய்தி அறிவிப்பாளர் சொன்னபொழுது, என் இதயத் துடிப்பே நின்று போனது. அந்த நொடியில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்க வேண்டுமானால், எனக்கு மிக நெருங்கிய ஒருவர் இறந்து போனால், இல்லை, கொலை செய்யப்பட்டிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது என்றுதான் விவரிக்க வேண்டும். அதிர்ச்சியில் மனமுடைந்த நான், கதறிக் கதறி அழத் துடங்கினேன். நள்ளிரவில், எனது இல்ல வரவேற்ப்பரையில், தனிமையில் இருந்ததால், என்னால் மனம் விட்டு அழ முடிந்தது. இந்தியாவில் இருக்கும் எனது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நண்பர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஒரு நொடி யோசித்தேன்.

இந்தியாவிலிருக்கும் எனது நண்பர் கவின், தனது வலைப்பதிவில் இதை வலியோடு விவரிக்கிறார்: “தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், என்று எல்லோரிடமும் ஒரேமாதிரியான கதைகளைத் தான் கேட்கிறேன்: தீர்ப்பு வந்த நேரத்தில், அலுவகங்களில் இருந்தவர்கள், பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல், அவசர அவசரமாக ஓய்வு அறைகளுக்கு ஓடிய கதைகள், தங்கள் சோகம் பிறருக்கு தெரிந்து விடக் கூடாது என்று தங்கள் இருக்கைகளிலிருந்து நகராமல் ஒளிந்த கதைகள், உடன் பணி செய்பவர்களுக்கு முன்னால் உடைந்து அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் அலுவலக சந்திப்புகளை தவிர்த்த கதைகள், என்று எங்கு பார்த்தாலும், எல்லோரிடமிருந்தும், சோகம் நிறைந்த கதைகள். இப்படி நொருங்கிப் போனவர்கள் பச்சிளங்குழந்தைகள் அல்ல, எதையும் எதிர்த்து போராட துணிவும், திண்ணமும் கொண்ட, வயது வந்த பெரியவர்கள்.”

தீர்ப்பு, இந்தியாவிலிருக்கும் எனது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நண்பர்களின் வாழ்வில், எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை உணர, எனக்கு சில நொடிகளே பிடித்தன. சில நிமிடங்களில், இந்தியாவின் பல கோடி குடிமக்கள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களது சுதந்திரம், கண்ணியம், வாழ்கை இவற்றை இந்தியாவின் உச்ச நீதி மன்றம், இரக்கமில்லாமல் உருக்குலைத்திருந்தது. அதுவரையில் உரிமைகளுக்காக போராடிய பலாயிரக்கணக்கான போராளிகள், தங்கள் தாய்நாட்டிலேயே பாதுகாப்பற்ற சுழலுக்குத் தள்ளப் பட்டிருந்தார்கள். 153 ஆண்டுகள் பழமையான, அதுவரையில் பரிசீலிக்கப் படாத, ஒரு தப்பான சட்டம், அன்று இந்தியாவின், மிக உயர்ந்த நீதி மன்றத்தால் பரிசீலிக்கப் பட்டு, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்ற முத்திரையையும் பெற்றிருந்தது. வெறுப்பிற்கும், அநீதிக்கும், இதை வீட வேறு என்ன ஊக்கம் வேண்டும்? ஊழல் நிறைந்த இந்தியாவின் போலீஸ் துறை, இந்த சட்டப் பிரிவை, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களை துன்புறுத்தவும், பயமுறுத்தவும், பணம்பரிக்கவும், எப்படி ஓர் ஆயுதமாக பயபடுத்தி வந்திருக்கிறது என்பதை, இதோ இந்த பதிவில் காணலாம்.

ஒருபாலீர்ப்பு குற்றம் இல்லை, என்ற தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பு, இந்தியா முழுவதும் அமுலில் இருந்தாலும், அதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இதோ சில மாதங்களுக்கு
முன்பு, கர்நாடகா போலீஸ் துறை, அந்த மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில், பிரிவு 377 ஐ காரணம் காட்டி, ரெய்டு நடத்தி, 14 ஆண்களை கைது செய்தது. சிறு நகரங்களில் இது போல “இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட” குற்றத்திற்காக, 377 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், அதுவே அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கப் போதுமானது. குற்றத்தை நிரூபிக்க வேண்டியது கூட அவசியம் இல்லை. இந்த அவமானத்தை சந்திப்பதும், ஊரில் இருப்பவர்களின் வெறுப்பை சமாளிப்பதும், எளிதான காரியம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஊரை விட்டு ஓடிப் போவதை தவிர, இவர்களுக்கு வேறு வழி கிடையாது என்பது தான் வேதனையான உண்மை. இப்பொழுது உச்ச நீதி மன்றம், 377 சட்டப் பிரிவை நிலைநிறுத்திய பிறகு, சமூகத்தின் பல அங்கங்களில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களை, மீண்டும் இருட்டிற்கு தள்ளும் முயற்ச்சிகள் புத்துணர்வுடன் நடைபெறும் என்பதும், எல்லோராலும் இந்த நிர்பந்தங்களை எதிர்க்க முடியாது என்பதும், வருத்தத்திற்கு உரிய விஷயங்கள்.

உலகில் பிற நாடுகளில் நடப்பதை போல, இந்தியாவிலும், பால், ஜாதி, மதம், வர்க்கம் என்று பலவகையான அநீதிகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவைகளுக்கு நம் நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றத்தின் ஆதரவு கிடையாது. இந்த தீர்ப்பிற்கு பிறகு, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களின் மீது நடைபெறும் அநீதிகளுக்கு, நம் உச்ச நீதி மன்றத்தின் ஆதரவு உண்டு!

என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து, மனதை சிறிது தேற்றிக் கொண்டு, இந்தியாவிலிருக்கும் என் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அம்மா சொன்னாள்: “நீ இந்தியாவுக்கு வராதப்பா! எங்க இருக்கையோ அங்கேயே நல்ல இரு.”

நம்மவர்களாலேயே நம் சுதந்திரம் பறிக்கப் பட்டதும், நாட்டிற்கு திரும்பாதே என்று பெற்றதாய் சொல்லிக் கேட்டதும் தான், என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகப் பெரிய வலி!

]]>
https://new2.orinam.net/ta/betrayed-by-country-ta/feed/ 1
பொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்.. https://new2.orinam.net/ta/a-request-to-media-and-public/ https://new2.orinam.net/ta/a-request-to-media-and-public/#comments Sat, 07 Dec 2013 21:55:59 +0000 https://new2.orinam.net/?p=9310 Thirunangai_MediaStory

விபச்சாரம், பிச்சை எடுப்பது, வன்முறை போன்றவற்றை நான் ஆதரித்து பேசவில்லை. இத்தகைய செயலை ஆமோதிக்கவும் இல்லை. மக்களுக்கு இடையூறு செய்யும் எந்த செயலும் கண்டிக்கப்பட வேண்டும். அது ஆணாக, பெண்ணாக இல்லை திருநங்கையாக இருந்தாலும் தவறு என்பது தவறு தான்.

வீட்டை விட்டு சிறுவயதில் துரத்தப்பட்டு, கல்வியை பாதி வயதிலே விட்டு விட்டு, வெளியேறும் திருநங்கைகள், சரியான வாழ்வாதாரம் அமையாது சமூகத்தில் சமஉரிமைகள் மறுக்கப்பட்ட மற்ற திருநங்கைகளிடமே அடைக்கலம் புகுகின்றனர். தங்களின் வயிற்று பிழைப்பிற்காக தங்களின் மூதாதை திருநங்கைகள் தங்களுக்கு பயிற்றுவித்த கடை கேட்டல், பாலியல் தொழில் போன்றவையே தங்களை நம்பி அடைக்கலம் வரும் திருநங்கைகளுக்கு கற்றுகொடுக்கின்றனர். இதன் காரணமாக இந்த வாழ்வியலே வாழையடி வாழையாக வளர்கிறது.

இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு ஓரளவிற்கு சாதகமான சூழல் இருந்தாலும் இன்னும் சமுதாயத்தில் சம உரிமைக்கான வாய்ப்பை பெறுவதற்கு பெரும் போராட்டம் தொடுக்க வேண்டி உள்ளது. இத்தகையான இக்கட்டான தருணத்திலும் சில திருநங்கைகள் இன்று தங்களின் வாழ்வாதார சூழ்நிலையை மேன்படுத்திக்கொள்ள சுயமரியாதை கொண்ட மனிதர்கள் போல வாழ முற்படுகின்றனர். பல திருநங்கைகள் இன்னும் பழமையிலே ஊறி உள்ளனர். ஒரே இரவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, கால அவகாசம் எடுக்கும். ஆனாலும் நாங்கள் மாறி வர முற்படுவது மறுக்கமுடியாத உண்மையும் கூட. இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இந்த மாறி வரும் சூழலில், சிலர் செய்யும் இத்தகைய செயலுக்காக ஒட்டுமொத்த இனத்தை அடையாளப்படுத்தி, மக்களிடம் இருக்கும் சில நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடுவது, மிகவும் கவலைக்குரியது. இத்தகைய போக்கை சில பத்திரிகை நண்பர்கள் கடைபிடிக்க வேண்டாம். சான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை எங்களுடையது, இது போன்று நாங்கள் சிலர் முன்னேற்றம் கொண்டு வழிநடக்கும் தருவாயில், மக்களிடம் நன்மதிப்பை பெற்றுத் தாருங்கள்.

ஒரு ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் தவறு நிகழ்த்தினால் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தி செய்தி வருவது இல்லை, அவரின் பெயரில் மட்டுமே வெளிவரும். தவறான செய்திகள் இருப்பின் இன்னார் இதை செய்தார் என்கிற அடையாளத்தோடு வெளியுடுங்கள், அதை விட்டு விட்டு திருநங்கைகள் என்று ஒரு இனத்தையே முழுமையாக அடையாளபடுத்தி எங்களை மேலும் சீர்குலைய செய்யாதீர்கள். நல்ல வாழ்வாதார சூழ்நிலை இருந்தும் நேர்மையாக பயணிக்காமல் பலர் வாழும் சமுகத்தில் அடுத்த வேலை சோற்றுக்காக போராடும் திருநங்கைகளை குறை கூறுவதை விட்டு விட்டு, எங்களின் சம உரிமைக்காக எழுதுங்கள்.

]]>
https://new2.orinam.net/ta/a-request-to-media-and-public/feed/ 6
கிருஷ்ணரைப் போல் என் மகன்! https://new2.orinam.net/ta/my-son-is-like-krishna-ta/ https://new2.orinam.net/ta/my-son-is-like-krishna-ta/#comments Sat, 03 Mar 2012 16:07:47 +0000 https://new2.orinam.net/?p=6091
Image Source: http://www.flickr.com/photos/anndewig/ (Thanks: Womesweb.in)

 

சென்னை வெய்யில் மத்தியான வேளையில் அதிகமாகவே கொளுத்திக் கொண்டு இருக்கிறது. என் மன நிலையும் அதே பொலக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனது பெரிய பையன், தான் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்றான். ஏன் என்று கேட்டதற்கு தன் ‘பாலியல்’ பற்றி ஏதேதோ சொல்கிறான். டிவி-ஐ போட்டேன். மனம் மாறுதலுக்காகவா இல்லை என்னை மறக்கவா என்று எனக்கேத் தெரியவில்லை…ஏதோ பட்டி மன்றம் நடந்து கொண்டு இருந்தது. ‘அன்பில் உயர்ந்தது, ராமனிடத்தில், அயோத்தியர் வைத்த அன்பா, அல்லது கிருஷ்ணனிடத்தில் ஆயர் பாடியர் கொண்டிருந்த அன்பா?’ என்பது பற்றி. என் மனம் மறுபடி என் மகன் பிரச்னைக்கே சென்றது….

தான் பதினைந்து வயதாகி இருந்த போதே இது தனக்கு தெரிய வந்தது என்றும், தான் மற்ற ஆண் பிள்ளைகளைப் போல் பெண்களால் ஈர்க்கப் படாமல் ஆண்களாலேயே ஈர்க்கப் பட்டதாகவும், முதலில் குழம்பிப் போனவன், பிறகு பயந்தும் போய் இருக்கிறான். பிறகு தான் நிறைய புத்தகங்களைப் படித்ததாகவும் அவை எல்லாம் இந்த மாற்றங்களைப் பற்றி அவனுக்கு புரிய வைத்ததாகவும் சொன்னான்.

நானும் அவன் தந்தையும் அவனிடம் உட்கார்ந்து பேசிப் பார்த்தோம். அவன் அப்பா, எங்கள் ஆசைக்காக நீ திருமணம் செய்து கொண்டு மறைவில் என்னவோ பண்ணித் தொலை என்று சொல்கிற அளவு போய் விட்டார். கொதித்து போய் விட்டான் என் மகன். என்னால் என்னுடைய வாழ்க்கைத் துணைக்கு அப்படிப்பட்ட துரோகத்தை பண்ண முடியாது என்று ஆக்ரோஷமாக கூறி வெளியே சென்றவன் இன்னும் வரவில்லை. மனம் கனத்தது. இவரும் ஷர்ட்டை மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

ஃபோன் ஒலித்தது. மகன் பேசுகிறான். “எப்படிம்மா?, இந்த அளவு கீழ்த்தரமாக உங்களால் நினைக்க முடியறது? அப்பா அப்படி யாரோடயாவது தொடர்பு வச்சிருந்தா நீ சகஜமா எடுத்துப்பியா?” என்றான்.

“இப்போ எதுக்குடா எங்க வாழ்க்கயைப் பத்தியெல்லாம் பேசற? நாங்க கல்யாணம் பண்ணிண்டு முப்பது வருஷம் ஆச்சு. உன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுடான்னா…” என்று இழுத்தேன்.

“நீங்க என்னோட கல்யாணத்தைப் பத்தி உங்க எதிர்பார்ப்பை மட்டும் நினைச்சுண்டு பேசறேளே தவிர, எனக்கு அது சந்தோஷம் தருமாங்கறதைப் பத்தி யெல்லாம் உங்களுக்கு அக்கரையில்லை..”

இடைமறித்தேன், நான். “அக்கரை இல்லாமத்தான் உங்கிட்டெ மன்னாடிண்டு இருக்கோமா? என்னப் பேச்சு பேசற?” சொல்லும் போதே அழுகை வந்தது எனக்கு.

“ஆமா. நீ இப்பொ அழறதுக்காக, நான் கல்யாணம் பண்ணிண்டு வாழ்க்கையெல்லாம் அழணும் இல்லெ? அதுதான் உனக்கு சந்தோஷம். அப்போதான் உன்னோட இந்த அழுகை நிக்கும்னா நீ நன்னாவே அழும்மா.” முரட்டுத்தனமான கோபத்துடன் பேசி வைத்து விட்டான்.

எனக்குத் தெரியும். அவனுக்கு எங்களை மனம் நோக அடித்து விட்டோமே என்ற கவலை. ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம். எல்லாம் சேர்ந்துதான் இந்த கோபம். பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளையின் உணர்வுகள். சட்டென்று என் மனம் ஒரு நிமிடம் யோசிப்பதை நிறுத்தி எதோ இடறுவதை புரிந்து கொண்டேன். அப்போ… இவன் கூறுவதை, இவன் உணர்வுகளை இப்பொழுது என்னால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?.. தலை சுற்றியது. பதில் தெரியாமல்..

டிவியின், பலத்த கைதட்டல் என் கவனத்தை கலைத்தது….

கிருஷ்ணரைப் பற்றிக் கூறி கொண்டு இருந்தவர், ‘ஏலாப் பொய்கள் உரைப்பான் என்று ஆண்டாள் பாசுரம். வெண்ணை திருடியது எல்லோருக்கும் தெரியும்.. கிருஷ்ணன் காணோம் என்றால் எங்கே தேடலாம் என்றால் ஆய்ச்சியர் புடவை கொசுவத்தில் தேடலாம் என்பது ஆழ்வார் பாசுரம்… இது எல்லாம் அவனுடைய குறைகளாக ஆயர் பாடியருக்குத் தெரியவில்லை. அவன், நான் நானாகத்தான் இருப்பேன். உங்களுக்கு என் மேல் பிரியம் இருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான்.

ராமன் அப்படி இல்லை.தன்னை ஒருவர் விரும்ப, எப்படி எல்லாம் நடக்க வேண்டுமோ, அப்படி எல்லாம் நடந்து அன்பை பெற்றார். தன் பெயரைக் காத்துக் கொள்ள, ராமன், பரதனைவிட்டுக்கொடுக்கவில்லையா….மனைவியையே கர்ப்பம் என்றும் பாராமல் தவிக்கச் செய்யவில்லையா.. மறைந்து நின்று வாலியை வதம் செய்யவில்லையா…ஆனால் கிருஷ்ணனனோ மனைவிமார் பல்லாயிரமாயிரமானவரும் சந்தோஷமாக இருக்கத்தான் வைத்துக் கொண்டார்…தன் விரதமன, ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’, என்பதைக்கூட, தன் அன்பரான, பீஷ்மருடைய விரதமான, ‘கிருஷ்ணரை ஆயுதம் எடுக்க வைப்பேன்’ என்பதை, தான் தோற்று நிலை நாட்டினார் அல்லவா…அதுதான் உண்மயான அன்பு. தன்னை நம்பி வந்தவர்களுக்கு, அறிந்து மட்டுமல்ல, அறியாமல் கூடத் தவறு இழைக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு…..’ என்று கூறி கொண்டு இருந்தார்.

என் மனம் மறுபடி என் மகனைப் பற்றி சிந்தித்தது. அவனும் இதைத்தானே கூறுகிறான். அவனுடைய, வாழ்க்கைத் துணக்குத் தான் உண்மையானவனாக இருக்க வேண்டும் என்கிறான். இது சரிதானே…ஆயர்பாடியருக்கு கிருஷ்ணன் மேல் இருந்த அன்பு போல் எனக்கும் அன்பு இருந்தால், நான் என் மகனை, அப்படியே, புரிந்து கொண்டுதானே நடக்க வேண்டும்..

உண்மையில், அவன் தன்னை நம்பி வரும் துணைக்கு சந்தோஷம் தருவதில், கிருஷ்ணனைப் போலவும், தன் துணைக்கு உண்மையானவனாக் இருப்பதில் ராமனாகவும் இருக்க நினைக்கிறான். அவன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்றால் ஏன் மறுக்க வேண்டும்? அவன் அழுவதை, அவன் குழந்தையாக இருந்த போதே தாங்காத என் மனம் இப்பொழுது தாங்குமா?…

அவன் வாழ்வில் அவன் சந்தோஷமாக இருக்கத்தானே கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறோம். அந்த கோணத்தில் பார்த்தால் இந்த திருமணம் அர்த்தமற்றது. அவனுக்கும் சரி, அந்த பெண்ணிற்கும் சரி, பெற்றவர்கள்ளாகிய எங்களூக்கும் சரி, யாருக்குமே சந்தோஷம் தர முடியாத இந்த திருமணம் மூன்று நாட்கள்,…இல்லை இப்பொழுதெல்லாம் இரண்டு நாட்கள் உறவினருடன் கூத்தடிக்க மட்டுமே….

டிவியில் நடுவர், ஆயர் பாடியர் கிருஷ்ணன் மேல் கொண்டிருந்த அன்பே சிறந்தது… ஏன் எனில் அது கட்டுத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறி முடித்தார்.

நானும், என் கவலைகளுக்கு, மகனை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்ப்பக் மனதிற்குள் கூறி, எழுந்து காஃபி போட நடந்தேன்.

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

]]>
https://new2.orinam.net/ta/my-son-is-like-krishna-ta/feed/ 2
நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன் https://new2.orinam.net/ta/why-i-do-what-i-do-ta/ https://new2.orinam.net/ta/why-i-do-what-i-do-ta/#comments Sat, 28 Jan 2012 16:35:59 +0000 https://new2.orinam.net/?p=5794 Image of Tarshi Magazine 2009 Issue I

தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்

பாலியல் குறித்தப் பயிற்சிப் பட்டறைகளை நான் ஏன் நடத்துகிறேன் என்று என் அம்மா என்னிடம் அடிக்கடிக் கேட்பதுண்டு. எப்படி உடலுறவு கொள்ள வேண்டும் என்பதில் நான் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேனோ என்பதே அவருடைய கவலை. அது அத்தனை நல்ல யோசனை அல்ல என்று பெண்ணியவாதியான தன் மகளிடம் எப்படிக் கூறுவது என்று அவருக்குப் புரியவில்லை. நான் பாலினம் மற்றும் பாலியல்பு குறித்த பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று வெளியில் சொல்ல என் பெற்றோர்களுக்கு வெகு காலம் மிகவும் தயக்கமாக இருந்தது. என்னைப் பற்றி ஏற்கனவே குறைவாக இருந்த மற்றவர்களுடைய மதிப்பீடு இன்னும் சீரழிந்துவிடும் என்று அஞ்சினார்களோ என்னவோ. நான் ஒரு “ஆலோசகர்” என்று சொல்வது பாதுகாப்பாகப் பட்டது. ஏனெனில், ஆலோசகர்கள் பல துறைகளில் இருக்கிறார்கள். விருந்துகளிலும் ‘பார்ட்டி’களிலும் நிகழும் உரையாடல்களின் பொழுது நான் பாலினம் மற்றும் பாலியல்பு குறித்துப் பணிபுரிகிறேன் என்று பகிர்ந்து கொள்ளும் பொழுது ஒரு அமைதி சூழ்ந்துகொள்ளும். பொதுவிடத்தில் பாலியல் என்பது குறிப்பிடப்படுவதை எப்படிக் கையாள்வது என்று ஒருவருக்கும் புரிவதில்லை.

நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன் என்று நீங்கள் கேட்க நேர்ந்தால் என்னுடைய பதில் இதுவே: பாலியல்பு, பாலினம் குறித்த விஷயங்கள் வெளிப்படையாக, உரக்க விவாதிக்கப்படுவதற்கான இடங்களை உருவாக்குவதற்காகவே நான் இந்தப் பணியைச் செய்கிறேன். இந்த விஷயங்களில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவை கண்டிப்பாகப் பேசப்பட வேண்டும். இவை குறித்து நிலவும் அமைதியை நம்ப முடியவில்லை. நான் வளர்ந்த வருடங்களில் இந்த அமைதியும் வளர்ந்து வருவதை நான் கவனித்திருக்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் பொழுது, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் அவர்கள் நினைத்த சமயத்தில், நினைத்த இடத்தில், அதுவும் நின்றுகொண்டே கையில் எடுத்து சிறுநீர் கழிக்க ஏதுவான உறுப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. சிறுமிகள் மட்டும் ஏன் மறைவான இடங்களைச் தேடிச் சென்று அமர்ந்து யாரும் பார்க்கிறார்களா என்று உறுதி செய்து கொண்டு பின் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது என்று யோசித்திருக்கிறேன். இவை ஆச்சரியத்திற்கரிய வடிவமைப்புகளாக இருப்பதாகவும் அவை அப்படி வேலை செய்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் ஆசைப்பட்டேன். ஆனால் அப்பொழுது கண்டிப்பாக இது பேசக்கூடிய விஷயம் அல்ல. இடைக்குக் கீழும், தொடைக்கு மேலும் உள்ள விஷயங்களை ஒரு தீவிர அமைதியும் இருளும் சூழ்ந்திருந்தன.

பின்னர், எனக்கு வந்திருப்பது புற்று நோய் அல்ல என்றும் எனக்கு ஏற்படத் தொடங்கியிருக்கும் இரத்தக் கசிவு என் உடல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது என்றும் புரிந்து கொண்டு நான் உள்ளாகியிருந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டேன். பல பெண்களுக்கு மாதவிடாய் குறித்து ஒன்றும் சொல்லப்படுவதில்லை என்று எனக்கு அப்பொழுது தான் தோன்றியது. அது என்னவாக இருக்கலாம் என்று எல்லோரும் யூகிக்க முயல்கிறார்கள். ஆனால் பெண்ணுடலில் இது நிகழ்கிறது என்ற உண்மையை மறைக்க அவளைச் சுற்றியுள்ள எல்லோரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். கடைக்காரர்கள் சுகாதாரத் துணியை செய்தித்தாளில் சுற்றி கவனமாகக் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைக்கிறார்கள். மற்ற பொருட்களை அலட்சியமாக வெள்ளைநிறப் பையில் போட்டு வாடிக்கையாளரிடம் தரும் பொழுது இதனை மட்டும் ஏன் மனிதர்கள் கண் பார்வையிலிருந்து பாதுகாக்க வேண்டும்? 1980-களில் தான் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவறாகக் கருதப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றும் இளம் பெண்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரிவதில்லை என்பதைப் பார்க்கும் பொழுது அதிர்ச்சி அடைகிறேன். முற்போக்கான பெற்றோர்களை உடையவர்களைப் பற்றி நான் பேசவில்லை. அப்படி அல்லாதவர்களைப் பற்றிச் சொல்கிறேன். அடைப்புப் பங்சுச் சுருளைப் (Tampon) பற்றி இந்தியாவில் பலர் பேசுவது கூடக் கிடையாது. ஏனெனில், அதைப் பயன்படுத்தினால் யோனிச்சவ்வில் (Hymen) துளைவு ஏற்படலாம் என்ற முற்றிலும் தவறான கருத்து நிலவுகிறது. கன்னித்தன்மை இழந்த பெண்கள் நாட்டில் உலவுவது
சரியாகுமா! மற்றவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் என்ற சந்தை இதனால் பாதிக்கப்படும் அல்லவா! தினசரி செயல்பாடுகளினாலும், சைக்கிளில் பயணிப்பது, தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வது ஆகியவற்றினாலும் யோனிச்சவ்வில் (Hymen) கிழிவு ஏற்படலாம் என்ற புரிதல் சிறிதும் இல்லை.

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கியவுடன் அவளுடைய உடல் செழிப்பாக இருக்கிறது என்பது கண்டு கொள்ளப்படுகிறது. உடனே, அதைப் பாதுகாப்பதற்கும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான விளக்கங்கள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே இருக்கும் இடங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆண்களைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படுகிறது. அவர்கள் இரவில் தனியாக செல்லக் கூடாது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பிரசங்கங்களில் எங்குமே எத்தகைய செயல்பாடு கர்ப்பத்தை விளைவிக்கும் என்று தெளிவாகக் கூறப்படுவதில்லை. கர்ர்பமடைவது குறித்த அச்சமூட்டும் கதைகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. ஒரு ஆணைப் பார்ப்பதினாலும் அவனைத் தொடுவாதாலும் கூட கர்ப்பமடையலாம் என்றெல்லாம் பெண்களுக்குக் கூறப்படுகிறது. என் ஆண் நண்பனின் கழுத்தில் முத்தமிட்டால் நான் கர்ப்பமடைவேன் என்றும் என் அம்மாவிற்கு அது உடனடியாகத் தெரியவரும் என்றும் நான் நம்பினேன். என் பள்ளிக்கூடத்தில் ஒரு நாள் மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சனைச் சேர்ந்தவர்கள் வந்து ஒரு விளக்கப்படத்தைத் திரையிட்டனர். நாங்கள் இனி சிறுமிகள் அல்ல என்றும், “பெண்கள்” ஆகிவிட்டோம் என்றும் அது எங்களுக்கு அறிவித்தது. மிகவும் சுற்றிவளைத்தும் உணர்ச்சிகளற்றும் இருந்த அந்தத் திரைப்படம் கூறிய எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை. கடைசியில், எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பொட்டலம் திணிக்கப்பட்டது. அதில் இரண்டு சுகாதாரத் துணிகள் இருந்தன. இது எங்களைக் கூனிக் குறுகச் செய்தது. எல்லோரும் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினோம். மற்றவரை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட எங்களுக்கு வெட்கமாக இருந்தது.

வளர்ந்து பெரியவர்களாவது என்பது எளிதானதல்ல. குறிப்பாக, நம் உடலெங்கும் ஹார்மோன்கள் பெருக்கெடுத்து ஓடும் பொழுதும், மற்றவர் மீதான நம் அன்புணர்வுகள் நாளுக்கு நாள் வளரும் பொழுதும் வளர்ச்சி என்பது கடினமான ஒன்றாகிறது. கல்லூரி வாழ்க்கையின் பொழுது ஆண்-பெண் உறவுகள் பற்றிய கதைகள் ஏராளம். அத்தகைய சூழ்நிலையில், வேறு விதமான இச்சைகளை வெளிப்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. ‘பெண்மையாக’ நடந்து கொண்ட ஆண்களை நம்பிகள் (gay) என்று சொல்லி எங்களுக்குள் கிசகிசுத்துக் கொண்டோம். நங்கைகளாக் (lesbian) எந்தப் பெண்ணும் இருந்ததாக கதைகள் இருக்கவில்லை. அந்த
ஆண்டுகளில் என்னுடைய சிந்தனைக்கும் கடிவாளம் கட்டப்பட்டு இருந்தது என்று ஒப்புக்கொள்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் ஆண்குறி ஒன்று ஈடுபடாத உறவை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் எனக்கு இருந்திருக்கவில்லை. தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இலக்கியத் துறைகளில் மட்டுமே பாலியல்பு குறித்த விவாதங்கள் அன்று நிகழ்ந்தன. அங்கும் கூட, உணர்வுகள்,
விழைவுகள் பற்றிய எதும் அல்லாமல் வெறும் கல்வி குறித்த விவாதங்களாகவே அவை அமைந்தன. நான் கூறுவது 1980-களைப் பற்றி. இப்போதைய நிலைமை முற்றிலும் மாறுபட்டது.

பாலினம் மற்றும் பாலியல்பு குறித்து பல ஆண்டுகளாக செய்யப்பட்டப் பணியின் காரணாமாக தில்லியில் உள்ள கல்லூரிகளில் அவை குறித்துப் பேசுவதற்கான வெளிகள் இன்று ஏற்பட்டிருக்கின்றன. பல கல்லூரிகளில் இன்று நிகழும் விவாதங்கள், திரையிடல்கள், நாடகங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கிறது. பெண்கள் கல்லூரிகளில் இவை குறித்துப் பேச பல புத்திசாலித்தனமான முறைகளைக் கையாள்கின்றனர். பாலியல்பு மற்றும் சட்டம் ஆகிய இரண்டும் கலந்தத் துறைகள் பிரபலமாக இருந்தன. ஏனெனில், இந்த இரண்டு துறைகளுக்குமே வரையறை குறித்தத் தெளிவு இல்லாததால், இவற்றில் ஒருபாலீர்ப்பு மற்றும் விழைவு குறித்த விவாதங்களை நுழைக்க முடிந்தது. இளைஞர்களை சீரழிப்பதாக எங்களை யாரும் குற்றம்சாட்ட முடியாது. நாங்கள் கல்வித்துறையில் எங்களுடைய பணியைச் செய்து வந்தோம்; அவ்வளவு தான்!

சமூக நீதித் துறையில் நான் பணிபரியத் தொடங்கி 20 ஆண்டுளாகிவிட்டன. நான் பணி தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பாலியல்பு குறித்த புரிதல் வெகுக் குறைவாகவே இருந்தது. பாலினம், பால் வேற்றுமை குறித்த பரபரப்பான விவாதங்கள் மட்டுமே எங்களுக்கு வடிகால்களாக இருந்தன. இவற்றின் மூலம் எங்களுடைய பணியில் பெண்களை இணைத்துக்கொள்ள் முடிந்தது. பெண்ணுடல் பற்றி சற்று பேசக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இவை பெரும்பாலும் வன்முறை அல்லது மகப்பேறு குறித்த ஆரோக்கியம் சார்ந்த விவாதங்களாக இருந்தன. பெண்ணுடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்படவில்லை. பெண்களை நீச்சலுடையில் காட்டிய திரைப்படப் போஸ்டர்களுக்கு கருப்பு பூசப்பட்டது. அழகிப் போட்டிகளை எதிர்த்துப் போராட்டங்கள் தொடங்கப்பட்டதும் அந்த ஆண்டுகளில் தான்.

அழகிப் போட்டிகளை எதிர்த்துப் போராடிய சக தோழி ஒருத்தி அந்த நாட்களை நினைவுகூர்ந்தாள். அத்தகைய போட்டி ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த ஒருவர் கூறியது இவர் காதில் விழுந்தது: “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களைப் பார். எவ்வளவு அகோரமாக இருக்கிறார்கள்”! இதைக் கேட்ட பொழுது இவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து அதை நினைத்துப் பார்க்கையில் வேறு விதமாகத் தோன்றுகிறது. “நாம் பார்ப்பதற்கு எத்தனை வேடிக்கையாக் இருந்திருக்க வேண்டும். NGO-காரர்களுக்கே உரிய உடைகளில், அழகுப் போட்டிகளையும் கவர்ச்சியையும் எதிர்த்துப் போராடினோம்,” என்று சிரிக்கிறார். எப்பொழுதும் சற்று கசங்கி இருந்த கைத்தறி ஆடைகளையும், ஜோல்னா பைகளையும் பற்றி பேசுகிறார் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். ஆனால் அழகிப் போட்டிகள் குறித்த நமது இன்றைய விவாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன – அவை பெண்களைப் போகப் பொருட்களாகப் பார்க்கின்றன என்பதை மட்டுமல்லாமல், இவற்றில் பங்குகொள்ளும் பெண்களும் தங்களது உரிமைகளை செயல்படுத்துகின்றனர் என்பதையும் நாம் இன்று ஏற்றுக்கொள்கிறேன். எல்லா விஷயங்களுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்த முடியாது என்பதை ஏதோ ஒரு விதத்தில் பரிந்துகொள்கிறோம்.

எண்பதுகளின் இறுதி ஆண்டுகளிலும், 1990-களின் தொடக்கத்திலும் “லெஸ்பியன்” என்ற சொல் தில்லியில் பணிபரிந்து கொண்டிருந்த எங்கள் சிலருக்குப் பரிச்சயமானது. “நிஜ வாழ்க்கையில் லெஸ்பியங்களாக இருப்பவர்கள்” பற்றிக் கேள்விப்பட்டோம். பெண்கள் இயக்கத்தில் யார் யார் ஒருபால் உறவுகளில் இருக்கக்கூடும் என்று யூகிக்க முயற்சி செய்தோம். எங்களில் பலருக்கு இது அன்று எங்களுடைய சொந்தப் பிரச்சனையாக இருக்கவில்லை. எனினும், பெண்களில் இயக்கத்திற்கு உள்ளும் ஒருபாலீர்ப்பு குறித்த வெறுப்பு இருப்பதைக் கண்டு திகைத்தோம். நான் வளர்ந்து வாழக் கற்றுகொண்ட நிலமே பெண்கள் இயக்கம் தான். எனினும் ஒரு பெண்கள் கருத்தரங்கிற்குச் சென்றிருந்த பொழுது ஒரு குறிப்பிட்டப் பெண்ணுடன் தங்குவதற்கு அறையை பகிர்ந்து கொள்வது குறித்து நான் எச்சரிக்கப்பட்டேன். ஏனெனில் அவர் ஒரு லெஸ்பியன்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? வன்முறை என்பது வெளிப்படையாகவும் நேரடியாகவும் நடைபெறும் பொழுது அதை நம்மால் பரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த மாதிரியான வன்முறை அதிகம் கவனிக்கப்படாது போகிறது. அறியாமை என்று சொல்லி அதை நாம் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

1993 ஆம் ஆண்டு தொடங்கி சக சமூக ஆர்வலர்களுடன் லெஸ்பியன் பெண்கள் குறித்த சூடான விவாதங்கள் பல நடைபெற்றன. இந்தியாவில் ஏழ்மை, வாழ்வாதாரம், தண்ணீர் ஆகியவை குறித்த பல முக்கியமான விஷயங்கள் இருக்கும் பொழுது, ஒருபாலீர்ப்பு கொண்ட பெண்களின் உரிமைகள் பற்றிப் விளிம்பு நிலையில் இருந்துகொண்டு சிலர் பேசுவதை நாடு முக்கியமாக கவனிக்க வேண்டுமா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. பீஜிங்க் நகரில் நான்காவது உலகப் பெண்கள் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விவாதங்கள் எழுந்தன. அது தவிர ஆயத்தக் கூட்டம் ஒன்றில், ஐ, நா. சபை 1994 ஆம் ஆண்டை “குடும்பத்திற்கான ஆண்டாக” அறிவித்திருந்ததை ஒருவர் எதிர்த்துக் கேள்வி எழுப்பினார். அதுவும் இந்த விவாதங்களுக்கு உந்துதலாக அமைந்தது. 1994-ல் திருப்பதியில் நடைபெற்ற பெண்கள் இயக்க மாநாட்டின் பிரகடனத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: தங்களது உடல்கள், பாலியல்பு, மற்றும் உறவுகள் குறித்து பெண்களுக்கு உள்ள உரிமைகளை இந்த பிரகடனம் அங்கீகரித்து ஆதரித்தது. ஆணாதிக்க சமுதாயங்களில் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் இந்தப் பிரகடனம் ஏற்றுக்கொண்டது.

கைத்தொழில் செய்வோருக்கு நிலைத்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தரும் நிறுவனம் ஒன்றில் நான் அப்பொழுது பணியாற்றி வந்தேன். அங்கிருந்து கொண்டே தான் இந்தப் பலப் போராட்டங்களுக்கு இடையே சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். மிகவும் முக்கியமான பிரச்சனைகள் என்ற சிலவற்றின் மீது கவனம் செலுத்தி வந்த பெண்கண் நிறுவனங்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. இருப்பினும் என்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். எது பேசப்படுவதில்லை, எது சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை, எது எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதை கவனித்தேன். வாழ்வாதாரம், பாலினம், பாலியல், எல்லாவற்றிற்கும் மேலாக சுயமதிப்புடன் வாழ எல்லோருக்கும் இருக்கும் உரிமை ஆகியவை குறித்து நான் செய்துகொண்டிருந்த பணிகளை ஒருங்கினைக்கத் தொடங்கினேன். நான் மேற்கூறிய முடிவற்ற, காரசாரமான விவாதங்கள் என்னை இந்தத் திசையில் போக வற்புறுத்தின. ஆண்-பெண் என்ற எதிர்பால் ஈர்ப்பும் எல்லோரும் பறைசாற்றியது போல அப்படி ஒன்றும் விசேஷமாக இருக்கவில்லை. என்னுடைய நண்பர்கள் பலரும் நானும் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ஏனெனில் நாங்கள் மரபுக்கு எதிரான வாழ்க்கையைத் தேர்வு செய்திருந்தோம்; எங்கள் உடல்கள், வாழ்க்கைகள், உறவுகள் குறித்த முடிவுகளை நாங்களே செய்யத் துணிந்திருந்தோம். அது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்தப் பட்டறை ஒன்றில் நான் பங்கேற்க நேர்ந்தது. அதில் ஒரு பயிற்சியின் பொழுது பங்கேற்பாளர்களைத் திருமணமான முதிர்ந்த ஆண்கள்/ பெண்கள் என்றும் திருமணமாகாத ஆண்கள்/ பெண்கள் என்றும் பிரித்தனர். திருமணம் ஆகாதவர்கள் உடலுறவு குறித்த எந்த செயல்பாட்டிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற தவறான புரிதல் இதில் இழையோடி இருந்தது. மேலும், பங்கேற்பாளர்கள் அனைவருமே ஆண்-பெண் என்ற எதிர்பால் விழைவு கொண்டவர்கள் அன்ற அனுமானமும் இதில் இருந்தது. இது குறித்து நான் பேசிய பிறகு எங்களில் பலர் நாங்கள் வற்புறுத்தப்பட்டிருந்த குழுக்களிலிருந்து வேளியேறினோம். பயிற்சியை நடத்திக் கொண்டிருந்தவருக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பல காரணங்களுக்காக 1998 ஆம் ஆண்டு எனக்கு முக்கிய ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டு தான் “பயர்” திரைப்படம் இந்தியாவில் வெளிவந்தது. அந்தத் திரைபடத்தைப் பற்றி முடிந்த வரை விவாதித்தாயிற்று. நான் அதை செய்யப்போவதில்லை. தில்லியில் ஒரே குடும்பத்திற்குள் இருந்த இரு மத்தியவர்க்கப் பெண்களுக்கு இடையிலான இச்சையை இந்தத் திரைப்படம் சித்தரித்தது. இது இந்தியாவின் வலது சாரியினருக்கு சகிக்க முடியாததாக இருந்தது. இந்தக் கதாபாத்திரங்களில் ஒரு பெண்ணின் பெயர் “சீதா” என்று இருந்தது பிரச்சனையை இன்னும் மோசமாக்கியது. திரையரங்குகள் தாக்கப்பட்டன. பல செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டன: “இரு பெண்கள் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது என்பது இயற்கைக்குப் புறம்பானாது,” என்றார் மஹாராஷ்டிர மாநிலத்தின் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரமோத் நாவல்கர். “இது போன்ற திரைப்படங்களை எங்கு ஏன் எடுக்க வேண்டும்? அமெரிக்கா அல்லது மற்ற மேலை நாடுகளில் செய்யலாம். லெஸ்பியனிஸம் பொன்றவை இந்தியச் சூழலுக்கு உகந்தவை அல்ல,” என்றார் அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி.

பாலியல் விழைவு குறித்த விவாதங்களைப் பொதுத் தளத்தில் வைக்க வலது சாரியினரின் இந்தக் கோபம் உதவியது. லெஸ்பியனிஸம், பொதுவாக ஒருபாலீர்ப்பு, பாலியல்பு ஆகியவை குறித்துப் பேசுவதற்கான வெளிகள் உண்டாயின. சிவசேனை இந்தத் திரைப்படத்தைத் தாக்கியதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்தன. அதன் நீட்சியாக ‘Campaign for Lesbian Rights’ (CALERI) உண்டாயிற்று. போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தனி நபர்களும் குழுக்களும் தொடர்ந்து ஓராண்டிற்குப் பெண்களின் ஒருபாலீர்ப்பு குறித்துப் பொதுத் தளங்களில் பேசுவதற்கு முயற்சி செய்வது என்று தீர்மானித்தோம். நான் இதில் தீவிரமாகப் பங்கு கொண்டேன். இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பெண்ணரிமை குறித்துப் பணியாற்றி வந்த பல பெண்கள் நிறுவனங்கள் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் இருக்க சொன்ன காரணங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.அந்த சமயத்தில் நானும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது: நான் இந்தப் போராட்டங்களில் பங்குகொள்வதற்கான காரணம் என் தனிமனித அடையாளம் மட்டுமன்று. நான் இதை ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்கிறேன். நான் கைத்தொழில் செய்வொருடன் வேலை செய்துவந்த பொழுது நானும் கைத்தொழிலாளியா என்று ஒருவரும் கேட்டது கிடையாது. ஆனால் நான் ஒருபாலீர்ப்பு குறித்த பிரச்சனைகளுக்காக வேலை செய்வதால் நான் பாரபட்சம் பார்ப்பவளாகிறேன், அவர்களுள் ஒருவளாகிறேன், எனவே தீவிர நிலைப்பாடுள்ள ஒரு போராளியாகிரேன்.

இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. நாம் பணி செய்வதற்கான கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாலியல்பு மற்றும் பாலியல் உரிமைகள் குறித்து பணிபரியும் நிறுவனங்களின் எண்ணிக்கைப் பெருகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்காகப் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கல்வியாளர்கள் இது பற்றி எழுதுகிறார்கள். பாலிவுட் திரைப்படங்களில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இவற்றில் பல முற்றிலும் காழ்ப்புணர்ச்சி நிறைந்த சித்தரிப்புகள். செய்தித்தாள்களில் இதுபற்றி சிலர் தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். எல்லாவற்றிலும் முக்கியமாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது. தன்னிச்சையாக நடைபெறும் ஒருபாலீர்ப்பு செயல்பாடுகளை இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 377-லிருந்து (“இயற்கைக்கு மாறான குற்றங்கள்”) நீக்குவது குறித்த வழக்கு இது. “எந்தப் ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ எவரொருவர் தன்னிச்சையாக இயற்கைக்கு மாறான புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ அவருக்கு வாழ்நாள் முழுதிற்குமான சிறை தண்டனையோ, பத்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்,” என்று இந்தச் சட்டப்பிரிவு கூறுகிறது (2009 ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அன்று இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிறைவுபெற்றது; தன்னிச்சையான, 18-வயதைக் கடந்தோரின் ஒருபாலீர்ப்புச் செயல்பாடுகள் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டன).

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே,1999 ல் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று CALERI பெண்களின் அதிகார முன்னேற்றதிற்கான குழுவிடம் மனு ஒன்றை சமர்ப்பித்தது. “பெண்கள் தொடர்பான குற்றவியல் சட்டங்களின் மறுபரிசீலனை” என்ற இந்த மனு பிரிவு 377-ஐ நீக்குவது குறித்ததாக இருந்தது.

இடைப்பட்ட ஆண்டுகளில் இந்திய ஊடகங்களும் சற்று தோழமையுடன் நடந்துகொண்டுள்ளன. பொதுத் தளங்களில் மாற்றுப் பாலியல் குறித்த பிம்பங்கள் பல எழுந்துள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் நான்கு நகரங்களில் மாற்றுப் பாலியல் கொண்டோரின் விழாக்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. இவற்றுள் இரண்டில் பங்குபெறும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. இரண்டு இடங்களிலுமே மக்களிடையே பெரு மகிழ்ச்சியும் களிப்பும் இருந்ததை நிச்சயமாக உணர முடிந்தது. சமூகத்தால் வகுக்கப்பட்ட பாலின அடையாளங்களையும் விழைவுகளையும் தாண்டி நிற்பவர்களுக்கு நம் நாட்டின் வீதிகளும் தெருக்களுமே பாதுகாப்பற்றவையாக இருந்து வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஊர்வலங்களின் பொழுது இவர்கள் சட்ட்பூர்வமாக தம் வீதிகளை ஆக்கிரமித்தனர். அவர்களுக்குக் காவல் துறையும் பாதுகாப்பு வழங்கியது!

என்னுடைய நீண்ட பயணம் மிகவும் இனிமையானதாக் இருந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், பாலியல்பு மற்றும் பாலியல் உரிமைகள் குறித்துப் பணிபரியும் நிறுவனம் ஒன்றில் நான் பணிபரிந்துள்ளேன். நாடுகள், பண்பாடுகள், வயது, இனங்கள், மதங்கள், மாற்றுத்திறன், பாலியல்பு போன்ற வரையறைகளைக் கடந்து பல பயிற்சிகளை நான் நடத்தியுள்ளேன். இந்தப் பணியில் நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஏற்கனவே கற்றிருந்த பழையன பலவற்றை நான் மறக்கவும் வேண்டியிருந்தது. இது சவாலாகவும் இருந்தது. நான் பணியாற்றும் உலகத்தில் நிச்சயமாகப் பல மாற்றங்களைப் பார்க்கிறேன். எனினும் புதிதாக வரும் பலரும் பல புதிய விஷயங்களைக் கற்க வேண்டியிருப்பதையும் நான் பார்க்கிறேன். சுய இன்பம் தவறானதல்ல என்று 1983-ல் பணிபரிந்த பொழுது எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது; 2009-திலும் அதைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒருபாலீர்ப்பு தவறானதல்ல என்றும் ஆண்கள் நிகழ்த்தும் வன்முறை காரணமாகப் பெண்கள் ஒருபாலீர்ப்பு கொண்டவர்களாக ஆவதில்லை என்றும் நான் இறக்கும் வரையில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு விளிம்புநிலைக் குழுவிலிருந்து இதைச் சொல்ல வேண்டியிருக்காது. பலர் இதையும் பாலியல் குறித்த இதர பல விஷயங்களையும் பற்றி உரக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

நான் முன்னர் கூறியது போலவே இந்தப் பணியில் சவால்கள் ஏராளம். ஆண், பெண் என்ற இருமைக் கட்டமைப்பு எவ்வளவு வலுவிழந்ததாக இருக்கிறது என்பது குறித்து ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு கட்டமைப்பு இல்லையெனில், ஆண் பெண் என்ற வேற்றுமை இல்லை என்றாகிவிடும். பின் நாம் நம் விழைவுகளை வரையறுக்க அடையாளங்களே இல்லை என்றாகிவிடும். நாம் மற்ற மனிதர்கள் மேல் இச்சை கொள்ளும் வெறும் மனிதர்களாகி விடுவோம்! இதனால் அடையாள அரசியலுக்கு என்ன நேரும்? இந்த இருமைக் கட்டமைப்பு இல்லையெனில் பால்/ பாலினம் சார்ந்த வேற்றுமை இருக்காது. அடையாள முத்திரைகளிலிருந்து நாம் விடுதலையாகி விடுவோம்!

இது போலவே, நமது உலகப் பார்வையில் முழு திறன் இல்லாத உடல்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இயலாமை இல்லாதவர்களின் உடல்கள் “தற்காலிகத் திறன் கொண்டவையே” என்று இயலாமை குறித்துப் பணிபரியும் நண்பர் ஒருவர் கூறினார். இது என்னை சிந்திக்க வைத்தது. உடல்/ மன இயலாமை மற்றும் பாலியல்பு குறித்து நாம் சிந்திக்கும் விதங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றனவா என்று யோசித்தேன். இயக்க நரம்பில் குறைபாடு (Motor Nerve Disorder) உள்ள ஒருவரோ, முதுகுத் தண்டில் பிளவு உள்ள ஒருவரோ, சக்கர நாற்காலியில் உள்ள ஒருவரோ மற்றவர் மீது அவர்களுக்கு உள்ள இச்சையை வெளிப்படுத்தும் பொழுது நாம் அதைப் புரிந்துகொள்கிறோமா? மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மற்றொருவர் மீது தனக்குள்ள உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாமல் திரும்பத் திரும்ப “நான் அவரை மணந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று சொல்வதை நாம் சரியாகப் பரிந்துகொள்கிறோமா? நாமும் இயலாமை கொண்ட அந்த உடல்களாக எந்த நேரமும் மாறலாம் என்பது நமக்குப் புரிகிறதா? இயலாமை குறித்த கல்வியிலிருந்தும் ‘க்ரிப் தியரி’யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

தொழில்நுட்பம் அதி வேகமாக வளர்ந்துள்ளது. இணையதளத்தில் மனிதர்கள் நெருக்கமான உறவுகளை அமைத்துக் கொள்கிறார்கள். உரையாடுவதற்கான அறைகளின், ‘சேட் ரூம்களின்’ எண்ணிக்கைப் பெருகி வருகிறது. எல்லா விதமான ஆசைகளுக்கும் கனவுகளுக்குமென தனித்தனி ‘சேட் ரூம்கள்’ இருக்கின்றன. இளம் பருவத்தினருக்கு எல்லாவிதத் தகவல்களும் இணையதளத்தில் கிடைக்கின்றன. இவற்றுள் பல அவர்கள் வயதிற்கு ஏற்றவையாக இருப்பதில்லை. இணையதளத்தின் மூலம் பாலியல் உறவுகள் என்பதன் பொருள் விரிவடைந்துள்ளது. அது பொதுத் தளத்தில் இருப்பதால் அதை எப்படிக் கையாள்வது என்று நமக்குப் பரிவதில்லை. கைபேசியில் உள்ள காமிராவின் பயன்பாடு குறித்தும் நாம் அத்தனை உறுதியாகக் கூற முடியாது. ஏதோ ஒரு பொதுவிடத்தில் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் உடலை எவரும் புகைப்படம் எடுக்க மாட்டார் என்ற உத்திரவாதம் இன்று கிடையாது.

பாலியல் சார்ந்த ஏற்றத்தாழ்வு மிக்கக் கட்டமைப்பு ஒன்றை நாம் எப்படி உருவாக்கி அதற்குள் மனிதர்களையும் அவர்களது செயல்பாடுகளையும் அடுக்கி விடுகிறோம் என்பதைப் பரிந்துகொள்ள முடிவதில்லை. பல நேரங்களில், ஒருபாலீர்ப்பு கொண்டோரை எதிர்பாலீர்ப்பு கொண்டோருக்கு எதிரானாவர்களாகவும், இயலாமை அற்றவர்களை இயலாமை உள்ளவர்களுக்கு எதிராகாவும் கட்டமைத்து விடுகிறோம். இனப்பெருக்கத்திற்கு உதவும் உடலுறவை மற்ற உடலுறவிற்கு மேலானதாக கருதிவிடுகிறோம். இன்பம் மற்றும் சுய அடையாளம் சார்ந்த கதைகளைக் காட்டிலும் வன்முறையும் பாதிப்பும் நிறைந்த கதைகளையே விரும்புகிறோம்.

மனிதர்கள் உடலுறவு கொள்வதற்கோ கொள்ளாமல் இருப்பதற்கோ எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் என்று நமக்குப் புரிகிறதா? இச்சை, காமம் ஆகியவற்றில் தவறொன்றும் இல்லை என்றோ, உடலுறவையும் பணத்தையும் மனிதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்றோ, ஒன்றிற்கும் மேற்பட்ட உறவில் இருக்கலாம் என்றோ, நமது அடையாளங்கள் நிரந்தரமானவை அல்ல என்றோ, பாலியல்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றோ நாம் பரிந்துகொள்கிறோமா?

உலகின் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் வானவில்லை இன்னமும் இறுகப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகவே நான் இன்னமும் தொடர்ந்து இந்தப் பணியை செய்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் பற்றிய மனத்தீர்ப்புகளை நான் வழங்காமலிருக்க வேண்டும். அத்தகைய உலகில் நான் வசிக்க விரும்புகிறேன். இசைவு, ஒப்புதல், இவற்றுடன் கூடிய உடலுறவு ஆகியவற்றை இனம் கண்டுகொள்ளக் கூடியவளாக நான் இருக்க வேண்டும். இவை குறித்த என் பார்வைக்கும் நடைமுறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படும் பொழுதும், எல்லாவற்றையும் கருப்பு/ வெள்ளை என்று வரையறுக்க இயலாது என்றும், இடைப்பட்ட எண்ணற்ற வண்ணங்களில் இருக்கலாம் என்றும் நான் பரிந்துகொள்ளக் கூடிய உலகமாக அது இருக்க வேண்டும். என் வாழ்நாளில் பாலியல்பு குறித்த விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் என்னையும் மற்றவர்களையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நாம் உருவாக்க நினைக்கும் உலகத்தை கொஞ்சமாவது நெருங்கிச் செல்ல முடியும். அதனால் தான் நான் செய்யும் பணியைத் தொடர்ந்து வருகிறேன்.


References:

1 Fernandez B, Radhakrishnan M, Deb P. 2007 Report on a Lesbian Meeting, National Conference on Women’s Movement in India, Tirupati, 1994, in Nivedita Menon (Ed) Sexualities, New Delhi: Women Unlimited

2 Cited in Lesbian Emergence: Campaign for Lesbian Rights. 1999. A Citizen’s Report, New Delhi

3 Memorandum in Lesbian Emergence: Campaign for Lesbian Rights. 1999. A Citizen’s Report, New Delhi

4 Rubin G. 1984. Thinking Sex: Notes For a Radical Theory of the Politics of Sexuality in Carole S. Vance (Ed) Pleasure and Danger: Exploring Female Sexuality, London: Routledge and Kegan Paul

5 Vance, C. 1984. Pleasure and Danger: Toward a Politics of Sexuality in Carole S. Vance (Ed) Pleasure and Danger: Exploring Female Sexuality, London: Routledge and Kegan Paul


This article was originally published by TARSHI – Talking About Reproductive and Sexual Health Issues in Issue 1 (2009) of their quarterly magazine In Plainspeak. We thank TARSHI and the author for permission to republish on Orinam.

]]>
https://new2.orinam.net/ta/why-i-do-what-i-do-ta/feed/ 1
நேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா https://new2.orinam.net/ta/interview-sri-lankan-activist-rosanna-flamer-caldera-ta/ https://new2.orinam.net/ta/interview-sri-lankan-activist-rosanna-flamer-caldera-ta/#respond Sun, 27 Nov 2011 21:44:08 +0000 https://new2.orinam.net/?p=5130
Photo: Indu Bandara

1999 ஆம் ஆண்டு முதல், இலங்கை மற்றும் உலகளவில், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் உரிமைகளுக்காக போராடிவரும் மனித உரிமை ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா. இவர் இலங்கையின் ஒரே திருனர் மற்றும் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட பெண்களுக்கான நிறுவனமான “வுமன்ஸ் சப்போர்ட் க்ரூப்” (1999) மற்றும் அனைத்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான உதவி நிறுவனமான ஈக்வல் கிரவுண்டு (2004) ஆகியவற்றின் நிறுவன உறுப்பினர். இந்த நேர்காணலில் ரோசானா ஓரினம்.நெட்டுடன், இலங்கையை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

தற்போது இலங்கையை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (LGBTIQ) முக்கியமாக கருதும் விஷயங்கள் என்னென்ன?
மாறுபட்ட பாலீர்ப்பை குற்றமற்றதாக்குவது, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இச்சிருபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு முடிவு காண்பது ஆகியவை முக்கியாமான, முதலில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்களை தாங்களே புரிந்து, ஏற்றுகொள்ள உதவுவதற்கும் தேவை இருக்கிறது.

பாராளுமன்றம் மூலமாக சட்ட மாற்றம், உரிமைகளை கேட்டு நீதிமன்றத்துக்கு போவது, வோட்டெடுப்பு – இவைகளில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள், மனித உரிமைகளை பெறுவதற்கான சாத்தியமான வழி என்று எதை நீங்கள் கூறுவீர்கள்?
கண்டிப்பாக முதல் இரண்டு வழிகள். ஆனால் சட்ட மாற்றம் உடனடியாக சமுதாய மாற்றத்தை கொண்டுவராது. மக்களிடம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் புரிதலை உண்டாக்கி, அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும்.

எத்தகைய சட்ட மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
தன்பாலீர்ப்பை குற்றமற்றதாக்குவது, மற்றும் நம் சமூகத்தினருக்கு சட்ட பாதுகாப்பு ஆகியவற்றிற்காக நாங்கள் போராடி வருகிறோம்.

இலங்கைக்குள் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் எற்றுக்கொள்ளப்படுதலில் மாறுபாடுகள் உள்ளனவா?
கண்டிப்பாக. நகர்புற பகுதிகளில் தைரியமாக வெளியே வந்து, தலைநிமிர்ந்து வாழும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை காண்பீர்கள். கிராமப்புரங்களில் பெரும்பாலும் இவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள். அதுபோல நகர் மற்றும் கிராமபுரங்கள் இரண்டிலும், ஆண்களை வீட பெண்களுக்கு பிரச்சனைகள் அதிகம். தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் எளிதாக வெளியே வரமுடிகிறது. ஆனால் தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் மற்றும் திருநம்பிகளுக்கான சவால்கள் அதிகம்.

இலங்கையின் ஊடகங்கள் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு கையாளுகிறது?
சிலசமயம் நல்ல முறையில், சிலசமயம் மிக மோசமாக. தனித்தனி ஊடகத்தை பொறுத்து இது மாறுபடுகிறது. நாங்கள் பார்த்த வரையில், சிங்கள ஊடகங்கள் எங்களை மிகவும் மோசமான முறையில் சித்தரிக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் சிலசமயம் நல்ல முறையில் எங்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறது என்று சந்தோஷப்பட்டால், உடனே ஒரு மோசமான சித்தரிப்பு தென்படுகிறது. தமிழ் ஊடகங்கள் எங்களை பற்றிய செய்திகளை வெளியுடுவதே இல்லை. பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள். ஒருபுறம் அது வேதனையை தந்தாலும், குறைந்தபட்சம் எங்களை மோசமான முறையில் சித்தரிக்காமல் இருக்கிறார்களே என்பதில் ஒரு நிம்மதி!

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் மத்தியில் குறிப்பிட்ட பாலினம், இனம், மதம், மொழியை சார்ந்தவர்களின் பிரச்சனைகள் பிறரை வீட அதிகமாக, கடுமையாக இருக்கிறதா?
எல்லா இடங்களை போல, இங்கேயும் இஸ்லாம் சமூகத்தினர் மத்தியில் பாலீர்ப்பு, பாலடையாளம் போன்ற விஷயங்களை பற்றி கடுமையான, பழமையான கருத்துகளை காணமுடிகிறது. அதே நேரத்தில் இஸ்லாம் சமுகத்தில் எங்களுக்கு பல சகாக்கள் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அதேபோல சிங்கள சமூகத்தை வீட தமிழ் சமூகத்தில் எதிர்ப்பு அதிகம். ஆனால் நாங்கள் இவர்களுடன் பழகி, பேசி, எங்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும்பொழுது பலர் எங்களை புரிந்து, எற்றுக்கொண்டு, ஆதரிப்பதையும் காண்கிறோம்.

இலங்கையில் நங்கை(Lesbian) மற்றும் ஈரர்(Bisexual) பெண்களுக்கான பிரச்சனைகள் என்ன?
பெரும்பாலும் இவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள். ஆண்களுடன் கட்டாய கல்யாணம், குடும்பத்தினர் வன்முறை, குடும்பத்தால் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது, சமுதாயத்தில் சிறுமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்படுவது, ஆண்களிடமிருந்து வரவேற்க்கப்படாத பாலியல் நடத்தை, மன மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் என்று பல. இவர்களிடையே தற்கொலைகளும் அதிகம். இவர்கள் குடும்பங்கள் இது போன்ற பெண்களை தங்கள் பெண் துணைகளுடன் சேரவிடாமல் தடுப்பதும், வலுக்கட்டாயமாக இவர்களை பிரிப்பதும், ஆண்களுடன் திருமண வாழ்க்கையில் தள்ளுவதும், இவர்களை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

திருநம்பிகளின் (FTM) கதி என்ன?
பெரிதாக வித்தியாசமில்லை. இவர்களும் மறைந்தே வாழ்கிறார்கள். இவர்கள் சமுதாயத்தில் கிண்டல், கேலி, ஒத்துக்கப்படுதல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள். சிலசமயம் இவை வன்முறையாகவும் உருவெடுக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் தனிமனிதர்களுக்கு எத்தகைய உதவிமுறைகள் உள்ளன?
ஈக்வுல் கிரவுண்டு நிறுவனம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்காக அவசர உதவி எண், மற்றும் பிரச்சனைகளில் உதவ தனியாக ஒரு குழு போன்றவற்றை உருவாக்கி நடத்திவருகிறது. நாங்கள் இவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து, இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறோம்.

தனிமனிதர்களின் பிரச்சனைகளில் உதவ உங்கள் நிறுவனத்துக்கு என்ன தேவை?
நிதி! ஒரு தனி நிறுவனத்தால் என்ன செய்யமுடியுமோ அதை நாங்கள் செய்கிறோம். முக்கால்வாசி நேரங்களில் போதிய நிதி இல்லாதது தான் எங்களது பெரிய பிரச்சனை.

இலங்கையில் ஒரு பால் உறவு (Same-sex relationship) பற்றிய சட்ட நிலை என்ன?
இலங்கையின் சட்டப்பிரிவின் 365A படி நங்கை(Lesbian) மற்றும் நம்பிகள்(Gays) குற்றவாளிகள்.

ஈக்வல் கிரவுண்டு நிறுவனம் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றங்களின் பொழுது, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறது. இதுபோன்ற பொதுவான பிரச்சனைகளில் நீங்கள் பங்குகொள்வதால், பொது மக்கள் மத்தியில் உங்களை பற்றிய மனமாற்றம் ஏற்ப்படுவதை பார்த்திருகிரீர்களா?
சில சமயங்களில். இன்றும் பலர் சுனாமி நேரத்தில் எங்கள் நிறுவம் செய்த உதவிகளை அன்புடன் நினைவு கூறுகிறார்கள். அதை வீட, கண்டிப்புடன், ஒழுக்கமான முறையில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு இருப்பது தான், மக்களை கவர்கிறது என்றால் அது மிகையாகாது.

மற்ற நாடுகள் உங்களுடன் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று நினைகிறீர்கள்? உதாரணமாக இந்தியா போன்ற தென்னாசிய நாடுகள் இலங்கையில் உள்ள மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் மனித உரிமை போராட்டத்திற்கு எப்படி உதவலாம்?
இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான உரிமைகளுக்காக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நாட்டில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழ்ந்தால் அது மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கிறது, மனமாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. மக்களை சிந்திக்க, விவாதிக்க தூண்டுகிறது. “இந்தியா, பாகிஸ்தான்,நேபால் போன்ற நாடுகளில் நடப்பது, நம் நாட்டில் ஏன் நடக்கக்கூடாது?” என்று மக்கள் பேச துவங்குகிறார்கள். இன்னும் நம் நாடுகள் இணைந்து செயல்பட, மேலும் பல வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.

]]>
https://new2.orinam.net/ta/interview-sri-lankan-activist-rosanna-flamer-caldera-ta/feed/ 0
எனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா https://new2.orinam.net/ta/my-daugther-and-daughter-in-law-ta/ https://new2.orinam.net/ta/my-daugther-and-daughter-in-law-ta/#comments Tue, 25 Oct 2011 21:46:51 +0000 https://new2.orinam.net/?p=4286 “எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சி தான்! என் குடும்பத்துலையா இது மாதிரினு என்னால நம்பக்கூட முடியலை.அந்த உண்மையை ஏத்துக்கறது ரொம்பவே கஷ்டமாக இருந்தது” பத்து வருடங்களுக்கு முன்பு தன் மகள் ஏமி ஷா நங்கை(Lesbian) என்று வெளியே வந்த நாளை நினைவுகூருகிறார் ரேகா ஷா. ஏமிக்கு பசங்களின் மேல் ஏன் அவ்வளவு நாட்டம் இருப்பதில்லை என்று அடிக்கடி வியந்தாலும், அவள் ஒரு நங்கை என்ற உண்மையை சந்திக்க ரேகாவும் அவரது கணவரும் சிறிதும் தயாராக இல்லை.

எழுபதுகளில் அமெரிக்காவில் குடிபுகுந்த மும்பையை சேர்ந்த குஜராத்தி பெண்ணான ரேகாவிற்கு, மாறுபட்ட பாலீர்ப்பை (Alternate sexuality) பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ‘ஒருபாலீர்ப்பின் (Homosexuality) விளைவு, கல்யாணமாகாமல், காலம் முழுவதும் தனிக்கட்டையாய், குழந்தைகள் இல்லாத சோகமான வாழ்க்கை’ என்பது ரேகாவின் அனுமானம். அதனால் கவலையுற்ற ரேகா, ஏமி பசங்களை சந்தித்து பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். “எப்படியாவது மாறி, ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகமாட்டாளானு ஒரு நப்பாசை.” ஏமி பெற்றோரின் விருப்பத்தை எதிர்க்கவில்லை, சில பசங்களை சந்தித்து ‘டேட்டு’க்கு போனார், அதில் எந்த பலனும் இல்லை. இருந்தாலும் தன்னால் ஆனா முயற்சியை செய்கிறேன் என்பதை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் டேட்டிங்கை விருப்பமில்லாமல் தொடர்ந்தார் ஏமி. கடைசியாக ரேகாவிற்கும் அவரது கணவருக்கும் “பாலீர்ப்பு என்பது இயற்க்கை, ஒருவர் விரும்பி தேர்ந்தெடுப்பது கிடையாது. காலப்போக்கில் எல்லாம் இது மாறப்போவதில்லை” என்ற உண்மை புரிந்தது. “அதுக்கப்பறம் ஏமியை கல்யாணத்துக்கு நாங்க கட்டாயப்படுத்தலை” என்றார் ரேகா.

ரேகா ஷா (நடுவில்), அவரது மகள் ஏமி(வலது) மற்றும் மருமகள் அமாண்டா(இடது)

ஏமியின் ஒருபாலீர்ப்பை(Homosexuality) முழுவதுமாக புரிந்து கொள்வதற்கும், ஏற்ற்றுக் கொள்வதற்கும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எடுத்தன ரேகாவிற்கும் அவரது கணவருக்கும். இந்த ஆண்டுகளில் ஏமி மிகவும் பொறுமையுடன் தனது பெற்றோர்களை கையாண்டார். ஒருபாலீர்ப்பை பற்றி அவர்களுக்கு இருந்த தவறான அனுமானங்களை ஒவ்வொன்றாக களைந்தார், நங்கைகளும்(Lesbians) நம்பிகளும்(Gays) எல்லோரையும் போல குடும்பம், குழந்தை என்று நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்பதை விளக்கிச் சொன்னார். அது போன்ற நல்ல வாழ்கையை அமைத்துக்கொண்ட புகழ்பெற்றவர்களை உதாரணமாக காட்டினார்.

ரேகா ஷா அவரது மருமகளுடன்

ரேகாவிற்க்கோ சொந்த பந்தங்களை எப்படி சமாளிப்பது என்பது பெரிய கவலை. “எங்க குடும்பம் பெருசு. இந்தியாலையும், இங்கே அமெரிக்காலயும் எங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க. ஒரு பக்கம் ஏமி எங்க பொண்ணு, அவ மேல உள்ள பாசம். இன்னொரு பக்கம் ஒருபாலீர்ப்பை ஏற்றுக்கொள்ள தயாராகாத, திறந்த மனப்பான்மை இல்லாத ஒரு சமூகம். உரலுக்கு ஒரு பக்கம் இடினா, மத்தளத்துக்கு இரண்டு பக்கம்!”.

ரேகாவும் அவரது கணவரும், தங்கள் மகள் ஏமியின் சந்தோஷத்தை எல்லாவற்றிற்கும் முன்னால் வைக்க முடிவு செய்தார்கள், மெல்ல மெல்ல அதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டார்கள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம், ஏமி ஒரு நங்கை (Lesbian) என்று சொந்தக்காரர்களிடம் சொன்னதும், பலர் அதை ஏற்றுக்கொண்டு ஆதராவாக நடந்தார்கள். இதில் இந்தியாவிலிருந்த சொந்தக்காரர்களும் அடக்கம். “உன்னோட மனத்தைரியத்தையும், ஏமி மேல நீ வெச்சிருக்கற பாசத்தையும், உன் பறந்த மனப்பான்மையும் நாங்க ரொம்பவே பாரட்டறோம் ரேகானு எல்லோரும் சொன்னாங்க” என்று சிரிக்கிறார் ரேகா. “ஒரு சிலபேர் கொஞ்சம் மோசமா நடந்துக்கிட்டாங்க. ஆனா நாங்க அதையெல்லாம் சட்டை பண்ணலை. எங்க பொண்னும்,அவ வாழ்க்கையும் தான் எங்களுக்கு முக்கியம்னு அதுல மட்டுமே நாங்க அக்கறை கட்டினோம். காலப்போக்குல முதல்ல மோசமா நடந்துக்கிட்டவங்களும் மனசுமாறி நார்மலா ஆய்டாங்க”

ஏமி இப்பொழுது அவர் வாழ்கைதுணை அமாண்டாவுடன் விர்ஜீனியாவில் வசிக்கிறார். “ஏமி தனக்கு ஏற்ற ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுப்பானு எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏமி எனக்கு அமாண்டாவை அறிமுகம் செஞ்சப்போ எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சு போச்சு. பின்ன ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆனப்போ எனக்கு ஒரே குஷி. அமாண்டா ஒரு நல்ல மருமகள்.” இப்படி பூரிக்கும் ரேகா இப்பொழுது ஒரு மாமியார் மட்டுமல்ல பாட்டியும் கூட. “ஆ! என் பேரன் இவான் எனக்கு ரொம்ப உசத்தி. அவன் எங்க வாழ்கையை சந்தோஷத்துல நிரப்பிட்டான் போங்க! ஏமிக்கு எப்பவுமே குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம். ஏமி செயற்கை முறைல கருத்தரிச்சா, இப்போ ஏமியும் அமாண்டாவும் எல்லோரையும் போல பெற்றோர்கள். இவானுக்கு இப்போ பத்தொன்பது மாசம், நல்ல அழகா ஆரோகியமா இருக்கான். எனக்கும் என் கணவருக்கும் இவான்னா உயிர்.”

“ஒருபாலீர்பாளர்கள் மேல எந்த தவறும் இல்லை. அவர்களும் எல்லோரையும் போல மனிதர்கள் தான். கல்யாணம், குழந்தைன்னு அவங்களுக்கும் நாம எல்லா மனித உரிமைகளையும் வழங்கணும். அவர்களும் சிறந்த பெற்றோர்கள். குழந்தைங்க அன்பை தான் எதிர்பார்க்கும், அது ஆம்பளைங்க கிட்ட இருந்தா இல்ல பொம்பளைங்க கிட்ட இருந்தானு எல்லாம் குழந்தைங்க கவலைப்படறது இல்லை. என்னால இத அடிச்சு சொல்ல முடியும் ஏன்னா, நான் என் பேரன் இவானை பாக்கறேனே” என்று பாலியல் சிறுபான்மையினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் ரேகா.

சம்மந்திகள் : ஏமி மற்றும் அமாண்டாவின் பெற்றோர்கள்.இடதுபுறத்திலிருந்து இரண்டாவது, திருமதி.ரேகா ஷா

சரி அவரை போன்ற பெற்றோர்களுக்கு அவரது அறிவுரை என்ன என்று கேட்டபொழுது “தயவுசெஞ்சு உங்கள் குழந்தைங்களை புரிஞ்சுகிட்டு, அன்பா, ஆதரவா இருங்க. அவங்க ஒன்னும் இயற்கைக்கு புரம்பானவங்க கிடையாது. அவங்களும் கடவுளின் படைப்புதான். நீங்களே உங்கள் குழந்தைகளை ஏத்துக்கலேனா, ஊரு உலகம் எப்படி ஏத்துக்கும்?” என்றார் ரேகா.

]]>
https://new2.orinam.net/ta/my-daugther-and-daughter-in-law-ta/feed/ 9
ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா https://new2.orinam.net/ta/my-brother-is-gay-ta2/ https://new2.orinam.net/ta/my-brother-is-gay-ta2/#comments Tue, 25 Oct 2011 21:42:57 +0000 https://new2.orinam.net/?p=4280 இன்றும் பல விஷயங்களில் பழமையை விரும்புகின்ற தென்னிந்தியாவில், பெண்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் குடுப்பதும், பேரணிகளில் பங்கு பெறுவதும் மிக அறிது என்றால், அதனிலும் அறிது பிற சிறுபான்மையினருக்காக பெண்கள் குரல் கொடுப்பது. இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் ப்ரியா, 2009 ஆம் ஆண்டு, தனது அண்ணன் ப்ரவீனுக்காக, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினரின் “சென்னை வானவில் பேரணியில்” பங்குகொண்டு குரல் எழுப்பினாள். அந்த ஆண்டுதான் முதன்முறை சென்னையில் அத்தகைய பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ப்ரியா பேரணியில் “ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! என் அண்ணன் அவன் என்பதில் எனக்கு பெருமை” என்ற செய்திப்பலகையை கையில் ஏந்தி நடந்த அந்த தருணம், பாலின சிறுபான்மையினர் மட்டுமல்லாது பெண்ணியம் போற்றுபவர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம். உலகமகாகவி சுப்ரமணிய பாரதி உயிரோடிருந்திருந்தால்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;”

என்று ப்ரியாவை பார்த்து பாடி, புளங்காகிதம் அடைந்திருப்பான்.

ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பை வழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்கியது. சட்டமாற்றம் இன்னமும் சமூக மாற்றத்தை கொண்டுவரவில்லை. இந்தியாவில் பல இடங்களில், ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் (நம்பி/Gay), ஒருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் (நங்கை/Lebsian),இருபாலீர்ப்பாளர்கள்(ஈரர்/Bisexuals), திருநர்கள் (திருநங்கை/திருநம்பி Transgenders) இவர்களுக்கு எதிராக பல வன்முறைகளும், கொடுமைகளும் நடந்தவண்ணம் உள்ளன. சமுதாயத்தில் இவர்கள் ஒதுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் மிக சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கிறது. இவர்களை ஆதரிக்கும் இவர்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட இந்த சமுதாயம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆட்படுத்துகிறது. இருபது வயதான ஒரு சின்னப்பெண் இவர்களை ஆதரித்து பேரணியில் பங்குகொள்வது என்பது சாதாரண விஷயமே இல்லை. “இப்படியெல்லாம் பண்ணினா, யாரு உன்னை கல்யாணம் பண்ணுவாங்க?” – இது முற்போக்காக சிந்திக்கும் ஒவ்வொரு பெண்ணையும் மடக்கிபோடும் இந்த சமூகத்தின் கேள்வி. இதற்கெல்லாம் சிறிதும் சளரவில்லை ப்ரியா “எனக்கு அதை பத்தி கவலை இல்லை. என்னை புரிஞ்சு, மதிச்சு நடக்காதவங்க யாரும் எனக்கு வேண்டாம்!” தெளிவாக சொல்கிறாள் ப்ரியா.

பேரணியில் பங்குகொண்டது ப்ரியாவிற்கு பெருமகிழ்ச்சி. “சென்னை வானவில் விழாவில் பங்குகொண்டதில் எனக்கு ரொம்ப குஷி. என் அண்ணனை நான் எவ்வளவு ஆதரிக்கிறேன், அவன் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதை அவனுக்கும், இந்த உலகத்திற்கும் காட்டியதில் எனக்கு ரொம்பவே மனநிறைவு. இது மாதிரி சின்ன சின்ன செய்கைகள், சிறுபான்மையினரான, நமது ஒருபாலீர்ப்புள்ள குடும்பத்தினருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், எவ்வளவு சந்தோஷத்தை தரும் என்பதையும் நாம் எல்லோரும் உணரவேண்டும்” என்கிறாள் ப்ரியா.

தனது அண்ணனின் இந்த மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்துகொள்வது என்பது ப்ரியாவிற்கு மட்டும் எளிதாக இருக்கவில்லை. “ஒருபாலீர்ப்பு என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது. பிரவீன் அம்மாவிடம் இதை பற்றி சொன்ன சில வருடங்கள் கழித்து, அம்மா என்னிடம் விஷயத்தை சொன்னாள். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது.” ஒன்றும் தெரியாது என்பதால் சும்மா இருந்துவிடவில்லை ப்ரியா, பாலீர்ப்பை பற்றி புரிந்துகொள்ள பல புத்தகங்களை படித்தாள். அதற்கு மேல் அவளுக்கிருந்த கேள்விகளை, சந்தேகங்களை அவளது அம்மா தீர்த்து வைத்தார். “முதலில் ஒருபாலீர்ப்பை மாற்ற முடியும் என்று நினைத்தேன். இது மாற்றக்கூடியது இல்லை என்று தெரிந்தவுடன், ‘ஐயோ நம் அண்ணன் கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் காலம் முழுவதும் தனியாக இருப்பானே!’ என்ற கவலை என்னை வாட்டியது. எனக்கும் அம்மாவுக்கும் அதற்கு மேல் யோசிக்க தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆண்-பெண் உறவுகள் மட்டும் தானே” சிரிக்கிறாள் ப்ரியா. இபோழுது பிரவின் தனக்கு ஏற்ற (ஆண்) துணையை தேர்ந்தெடுத்து கொள்வான் என்ற நம்பிக்கை ப்ரியாவிற்கு இருக்கிறது. “அது நடக்கும் பொழுது, கண்டிப்பாக அவனுக்கு என் ஆதரவு உண்டு!” என்று உறுதியாக சொல்கிறாள் ப்ரியா.

இது போன்று பாலின சிறுபான்மையினரை கூடபிறந்தவர்களாக கொண்டவர்களுக்கு, அறிவுரை சொல்லமுடியுமா என்று கேட்டபொழுது, “அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கா என்று தெரியவில்லை. எனது கோரிக்கை இதுதான்: தயவுசெய்து உங்கள் கூடப்பிறந்தவர்கள் என்னசொல்ல வருகிறார்கள் என்று காது கொடுத்து கேளுங்கள். கஷ்டம் தான், இருந்தாலும் முயற்சியுங்கள், என்ன இருந்தாலும் அவர்கள் உங்கள் ரத்தம் இல்லையா?. கேட்க கேட்க, புரிதல் அதிகமாகும், புரிதலும் பொறுமையும் இருந்தால் உங்களால் முழுமனதோடு அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். பாலீர்ப்பு என்பது ஒருவர் விரும்பி தேர்ந்தெடுப்பது அல்ல, இயற்க்கை. அதனால் தயவுசெய்து உங்கள் கூடப்பிறந்தவர்களை நேசியுங்கள், ஆதரியுங்கள். உங்களது இந்த முயற்சியால் உங்களின் குடுமத்தில் பல சந்தோஷங்களுக்கு நீங்கள் வழிவகுக்கிறீர்கள். உங்கள் முயற்சி, உங்களுக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்கும்” என்று முடித்தாள் ப்ரியா.

]]>
https://new2.orinam.net/ta/my-brother-is-gay-ta2/feed/ 2
என் அக்கா ஒரு லெஸ்பியன் https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/ https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/#comments Sun, 23 Oct 2011 21:37:45 +0000 https://new2.orinam.net/?p=4270 “ஆம்பளைங்க சொல்றது தான் சட்டம்னு பொதுவா நாம எல்லலரும் பாக்கற ஆணாதிக்கம் உள்ள சூழ்நிலையில தான் நானும் வளர்ந்தேன். அதனால ஒருபாலீர்ப்பு (Homosexuality) ஒரு வக்கரமான விஷயம்னு நினைச்சேன்.” என்று சொல்லும் பரத் பாலனின் அக்கா அனிதா பாலன் ஒரு நங்கை (Lesbian). அனிதா தனது மாறுபட்ட பாலீர்ப்பை (Alternate sexuality) பற்றி முதன் முதலாக வெளியே வந்தது தனது சஹோதரன் பரத்திடம் தான். நங்கை (Lesbian) என்று சொல்வதை வீட, தான் ஒரு இருபாலீர்ப்புள்ள பெண் (ஆண், பெண் இருவரிடமும் ஈர்ப்புள்ள பெண்/ Bisexual) என்று சொன்னால், பரத்திற்கு புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று எண்ணி, அவனிடம் அவ்வாறு வெளியே வந்தாள் அனிதா.

பரத் தனது அக்கா அனிதாவுடன்

அப்படியும் அனிதாவின் உணர்வுகளை, அவளது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்துகொள்வது பரத்திற்கு எளிதாக இருக்கவில்லை, குழம்பினான் பரத். அனிதாவிற்கு ஏதோ மனநல குறைபாடு என்றும், அவள் மேலைநாட்டு கலாச்சாரத்தின் ஆளுமையால் புரியாமல் சொல்கிறாள் என்றும் முடிவிற்கு வந்தான். அவர்களது குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடி புகுந்திருந்தது.

இது நடந்த பொழுது பரத்திற்கு வயது 19, அனிதாவிற்கு வயது 21. என்ன செய்வதென்று புரியவில்லை பரத்திற்கு. குழப்பம், பயம், தடுமாற்றம். “நமக்கு ஒரு விஷயம் புரியலைனா, அத பத்தி பயம் ஏற்படுது. இது மனித குணம். என் அக்காவுக்கா இப்படினு எனக்கு பெரிய அதிர்ச்சி.” நினைவுகூருகிறான் பரத். பரத் அப்பொழுது கல்லூரியின் முதல் ஆண்டில் இருந்தான். பொருத்தமாக அதேசமயம் பரத்தின் நெருங்கிய நண்பன் ஒருவனும் ஒருபாலீர்ப்புள்ள ஆண் (நம்பி/Gay) என்று அவனிடம் வெளியே வர, அனிதாவிடுமும், அவனது நண்பனிடமும் ஒருபாலீர்ப்பை (Homosexuality) பற்றி மனம் திறந்து பேசினான் பரத். பேசப்பேச அவனுக்கு இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. எந்த விஷயத்தை பற்றி பேச பல இந்திய குடும்பங்கள் தயங்குகின்றனவோ, அதை பற்றி பரத் பேச, கேட்க, பரத்திற்கு தெளிவு பிறந்தது. ஒருபாலீர்ப்பை பற்றி இருந்த பயம் விலகியது.

அதன் பிறகு அனிதா தனது அப்பாவிடம் வெளியே வந்தாள். அவர் அனிதாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக அம்மா. அனிதா அவளது அம்மாவிடம் வெளியே வந்தபொழுது பரத் அவளுக்கு துணையாய் இருந்தான். அப்பாவை வீட சற்று பழமைவிரும்பி அம்மா. எல்லோருக்கும் கடினமான கணம் அது. அம்மாவால் அனிதாவின் ஒருபாலீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இன்றும் திணறுகிறாள். இது ஏதோ அனிதாவின் வாழ்க்கையில் ஒரு கெட்ட காலம், போக போக சரியாகி விடும் என்பது அம்மாவின் எண்ணம். “அம்மாக்கு அனிதானா உயிர். கூடிய சீக்கிரம் அம்மா அனிதாவை முழு மனசோடு ஏத்துக்குவா! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்கிறான் பரத்.

தங்களது அன்றாட வாழ்க்கையிலோ, நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் வட்டாரத்திலோ, குடும்பத்திலோ, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbians, Gays, Bisexuals, Transgenders (LGBT) ) சந்தித்திராதவர்களிடமிருந்து தான், பாலியல் சிறுபான்மையினர் மீது வெறுப்பு அதிகம் வெளிப்படுகிறது. நமக்கு தெரிந்தவர்களில் யாராவது மாறுபட்ட பாலீர்ப்போ அல்லது பாலடையாளம் கொண்டவர்களாகவோ இருந்தால் அப்படி வெறுப்பை உமிழ்வது கடினம். இது தான் பரத்தின் நம்பிக்கைக்கு ஆதாரம். “கொஞ்சம் உங்க மனச திறந்து, அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. ரொம்ப ஒன்னும் கஷ்டம் இல்லை” என்று சிரிக்கிறான் பரத். மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் நண்பர்கள், கூடப்பிறந்தவர்கள் மற்றும் இதர குடும்பத்தினர்கள் எல்லோரம் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்பது பரத்தின் கருத்து. “நம்ம குடும்பத்துக்காக நாமதான் குரல் கொடுக்கணும். அப்படித்தான் மக்களுக்கு புரியவைக்க முடியம்” என்கிறான் பரத்.

பரத் பாலன் மற்றும் அனிதா பாலன்

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கு சமஉரிமைகள் வழகுவது, பாரம்பரிய குடும்ப நெறிகளுக்கு புறம்பானது என்பது பலரின் வாதம். பரத் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. “பாலியல் சிறுபான்மையினரையும் சமமா, ஒண்ணா நடத்தறதை வீட எதுங்க “குடும்பநெறி”? அவங்களை வெறுக்கறதும், ஒதுக்கறதும் தானா? அவங்களை குற்றவாளிங்களா நடத்தாம சமமா நடத்தனும். எல்லோருக்கும் இருக்கற அடிப்படி மனித உரிமைகள அவங்களுக்கும் குடுக்கனும். கல்யாணம், குழந்தைகள தத்து எடுத்துக்கறது எல்லாம்.” நாளை அனிதா தான் விரும்பிய பெண்ணை வாழ்க்கை துணையாய் தேர்ந்தெடுத்தால், அவளுக்கு பரத்தின் ஆதரவு கட்டாயம் உண்டு.

அனிதா, பெரும்பாலும் காணப்படும் எதிர்பாலீர்ப்புடன் (ஆண், பெண் ஈர்ப்பு/Heterosexuality) இருந்தால் பரத்திற்கோ அவனது குடும்பத்திற்கோ இவ்வளவு பிரச்சனை இல்லை. ஏதாவது மாயம் மந்திரம் மூலம் அனிதாவை அப்படி மாற்ற முடியும் என்றால் செய்வாயா என்று பரத்திடம் கேட்டபொழுது, “கண்டிப்பா மாட்டேன். ஒருத்தரோட பாலீர்ப்பு அவங்களுக்கு இயற்கையா அமைஞ்ச விஷயம், அவங்க அடிப்படை அடையாளத்துல ஒண்னு. அதை யாராலையும், எதுவாலையும் மாத்த முடியாதுங்கறது தான் உண்மை. அப்புறம் இந்த மாதிரி மாயம், மந்திரம், மருந்துனு பேசறதால மக்களுக்கு இந்த சிறுபான்மையினர் மேல இருக்கற பயமும், சந்தேகமும், வெறுப்பும் இன்னுமும் அதிகமாகும். ஒரு உதாரணத்துக்கு சொல்றேனே, நாங்க இப்போ அமெரிக்கால இருக்கோம். என் அக்காவ வெள்ளைகாரியா மாத்தினா இங்க இருக்கறது ஈ.சீனு சொன்னா, எப்படி நான் முடியாது, அவ எப்படி இருக்களோ அதுவே நல்லது, அவ என் அக்கானு சொல்வேனோ அதுபோலத்தான். என் அக்கா ஒரு லெஸ்பியன், ஒரு நங்கை. அந்த உண்மையை அவளை நான் மனப்பூர்வமா ஏத்துக்கறேன். அவளுக்கு என் அன்பும் ஆதரவும் என்னிக்கும் உண்டு.” என்று முடித்தான் பரத்.

]]>
https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/feed/ 8