கதை, கவிதை, கட்டுரை – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Thu, 16 Feb 2023 09:49:25 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png கதை, கவிதை, கட்டுரை – ஓரினம் https://new2.orinam.net 32 32 [கவிதை] என் வார்த்தைகள் https://new2.orinam.net/ta/poem-my-words-ta/ https://new2.orinam.net/ta/poem-my-words-ta/#respond Thu, 16 Feb 2023 07:37:05 +0000 https://new2.orinam.net/?p=16208 என் வார்த்தைகள்

 


வலுவிழந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்த கவிதை
காய்ந்த பூமாலை.

செத்த சொற்கள் மண்டி கிடக்கின்றன
புத்தகக் கல்லறையில்.

சொல்லி பயனில்லை
யார் அறிவார் என் நெஞ்சம்?

பிறந்து சாகும் பிஞ்சு குழந்தைகள் போல்
கேட்டும் கேட்கா என் ஒலியிலா வாக்குகள்
பிறர் கேளாச் செவிகள்.

“நான் இது தான், நான் இது தான்.”
என்று பல முறை கூறியும்
வார்த்தைகள் ஏனோ என்னை தான் தாக்கின
உங்களை அடையவில்லை.

உங்கள் முகச்சுழிவில் அருவருப்பு கண்டு
அவமானம் கொண்டு என் வார்த்தைகள்
திசை மாறி போயின.

வலி சுமந்து
கீழே விழுந்த என் வார்த்தைகள்
எப்படி அடையும் உங்களை?

வாக்கு போரில்
என் சொல் அம்புகளை
வீழ்த்தின உங்கள் சொல் அஸ்திரங்கள்.

அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை
விரட்டி மிரள செய்து
பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள்
நியாயமா?


Image submitted by author, courtesy OpenAI.

]]>
https://new2.orinam.net/ta/poem-my-words-ta/feed/ 0
[கதை] அவளும் நானும் https://new2.orinam.net/ta/fiction-she-and-i-ta/ https://new2.orinam.net/ta/fiction-she-and-i-ta/#respond Thu, 02 Feb 2023 16:50:07 +0000 https://new2.orinam.net/?p=16196 அவளும் நானும்

ஆண்டுகள் பல கழித்து
அன்றொரு நாள் அவளை மீண்டும் கண்டேன்!

மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது
அந்தப் பேருந்துநிறுத்தத்தில்.

அத்தகைய கூட்ட நெரிசலிலும் கூட
என் கண்கள் அவளைக் கண்டுப்பிடித்துவிட்டன.

இதில் பெரிதாய் ஆச்சர்யம் ஒன்றும் அல்ல தான்!

ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?

நான் நேசித்த முதல் பெண் ஆயிற்றே அவள்!!

ஆழ்மனதில் அடிப்படிந்துக்கிடந்த
நினைவுகள் அத்துனையும் ஆர்ப்பரித்துக்கொண்டு மேல் எழும்பின.

பாவம் என்னுள்ளம்!
எதையோ என்னிடம் கதைக்க முன்வர
என் மோட்டார் சைக்கிளோ அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதுப்போல்
உறுமிக்கொண்டிருந்தது.

நானோ அவளைக் கண்ட மயக்கத்தில்
கணம் மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

சட்டென்று அவள் விழிகள் என் திசையில் திரும்பின.
திடுக்கிட்டுப்போனேன் ஒரு நொடியில்!

மறுநொடி
அவள் எனை நோக்கி வர கண்டேன்.

வந்ததும் வரிசையாய் கேள்விகள் பல தொடுத்தால்
வழக்கம் போல் என் வார்த்தைகள் அனைத்தும்
அவள் விழிகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டன

நெடுநேரம் பேசிவிட்டோம் போலும்
அவள் ஏறவேண்டியே பேருந்து போனதைக்கூட கவணிக்காமல்

பிறகு என்ன! என் ஸ்கூட்டர் எங்கள் இருவரையும் ஏற்றிச்சென்றது அன்று!

She and I: AI art by author


குறிப்பு:

– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது QUILT இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் வாசிக்கப்பட்டது.

– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/fiction-she-and-i-ta/feed/ 0
[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்) https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/ https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/#respond Sun, 29 Jan 2023 17:16:11 +0000 https://new2.orinam.net/?p=16151 அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவன் ஊஹானின் ஆய்வகத்தில் தோன்றினான்… இவனோ தமிழ்நாடு என்னும் தாயகத்தில் வேரூன்றினான்;

அவன் என் முகத்தின் துளைகளில் காமம் கொண்டு உட்புகுந்தான்… இவனோ என் அகத்தின் துளைகளில் காதல் கொண்டு உள்நிறைந்தான்;

அவன் என் உடம்பெனும் சிறையுனுள் அகப்பட்ட போது மட்டுமே மூச்சு முட்டுகிறது… இவனோ என் உடம்பெனும் கூட்டினுள் கூடாமல் தனித்திடும் போது சுவாசம் விம்முகிறது;

அவன் என்னுள் பிரவேசித்த பிறகே என்னூன் வெப்பம் கொள்கிறது… இவன் என்னை விட்டு நீங்கினால் என்னூனுயிரெலாம் வெந்து வெந்து ஊதுகனல் ஆகிறது;

அவனால் நான் கொண்ட மயக்கம் மருந்து உண்ணத் தெளியும்… இவனால் நான் கொண்ட மயக்க நோயும் இவனே மருந்தும் இவனே;

அவனால் என் புலன்கள் சில ஆற்றல் இழந்தன… இவனால் என் ஐம்புலனும் செயல் மறந்து நிற்கின்றன;

அவன் என்னை அண்டாமல் அகல அறிவியல் கண்ட தடுப்பூசிகள் உண்டு… இவன் என்னை விட்டு அகல அறவியல் மாண்ட திருமணம் என்ற தடுப்பூசி உண்டு;

அவன் என்னை ஆட்கொண்டால் தற்காலிக உடல் நோயாளி என உலகம் என் மேல் பரிதாபம் கொள்கிறது… இவன் என்னை ஆட்கொண்டால் நிரந்தர உள நோயாளி உலகம் என் மேல் வெறுப்பைக் கக்குகிறது;

அவன் இயல்பாக என்னைத் தீண்டினால் சில வாரங்களுக்கு மட்டுமே வனவாசம்… இவன் இயல்பாக என்னைத் தீண்டினால் பல நாடுகளில் வாணாள் சிறைவாசம்;

அடிக்கடி உருமாறும் அவனுக்கு ஏற்றவாறு உலகம் அவனைச் சமாளிக்கிறது… உருவும் திருவும் அறவே மாறா இவனுள் இருக்கும் என்னை உலகம் ஏனோ ஏற்க மறுக்கிறது;

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது…என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.

 


குறிப்பு:

– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது quilt இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டது.

– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/feed/ 0
[கதை] என் தற்காலிக வானவில் அவள் https://new2.orinam.net/ta/yenn-tharkaaliga-vaanavil-aval-ta/ https://new2.orinam.net/ta/yenn-tharkaaliga-vaanavil-aval-ta/#respond Wed, 10 Feb 2021 05:39:40 +0000 https://new2.orinam.net/?p=15435 அது ஒரு ஜுன் மாத கடைசி சனிக்கிழமை. வழக்கம் போல அன்றும் முகநூலில் எனது உண்மை உருவத்தை மறைத்து போலி கணக்கில் உலாவிக் கொண்டிருந்தேன். மதியழகி எனும் நான் நிலவழகி எனும் பெயரில். அரசாங்கப் பணியில் இருந்து கொண்டே அரசிற்கு எதிராகக், அரசின் நிலைபாடுகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பது என்பது தன் தலையில் தானே மண்ணை வாரிக்கொண்டதற்குச் சமம் தானே. சமத்துவம், சமூக நீதி சார்பாக எனக்குள் எழும் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளவே இந்த போலிக் கணக்கு.
ஜூன் மாதம் என்றாலே அது மாற்று பாலீர்ப்பாளர்கள், மாற்று பாலினத்தவர்களுக்கான சுயமரியாதை மாதம். மெசெஞ்சரில் ஒரு குறுஞ்செய்தி வினிதா என்ற பெயரில். பார்த்தவுடனே தெரிந்தது அதுவும் ஒரு போலிக் கணக்கு என்று. அன்று நான் வெட்டியாக இருந்ததால் பேச ஆரம்பித்தேன். பரஸ்பர வணக்கங்கள் மற்றும் விசாரிப்புகளுக்குப் பின்,

‘நிலா! நான் ஒரு சமபால் ஈர்ப்பாளள், உனது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.’ என வினிதா கூறினாள்.
‘மிக்க மகிழ்ச்சி வினிதா, வாழ்த்துகள்’ – இது நான்.

‘நீங்க இருபால் ஈர்ப்பாளரா?’

‘இல்ல வினிதா, நானும் ஒரு சமபால் ஈர்ப்பாளள் தான்’
(இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், நிஜமாகவே நான் ஏன் இந்த போலிக்கணக்கில் உலாவுகிறேன் என்று).

இவ்வாறாக ஆரம்பித்த உரையாடல் சில நாட்கள் தொடர்ந்தது.

பொதுவாகவே மெசெஞ்சரில் கடலை போட வருபவர்களை நான் மதிப்பதே இல்லை. ஆனால் வினிதா கூட மட்டும் எனது உரையாடலை நாட்கணக்கில் தொடர்ந்தேன். சில காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் இருவருமே ஆண்டி இந்தியன், ஷமுக விரோதி, அர்பன் நக்ஸல் என்ற பட்டங்களை அறிவு ஜீவிகளான சங்கிகளிடமிருந்து பெற்றிருப்பது தான். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த வினிதாவுக்கு இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மேல் அளவிலா ஈர்ப்பு; தேடித்தேடி புதுப்புதுக் கலாச்சாரங்களை பற்றித் தெரிந்து கொள்வதும், இந்தியாவின் பன்முகத் தன்மையை சிலாகிப்பதும் மிகவும் பிடித்த ஒன்று. அவளது பால்நோக்குப் பற்றி முதல்நாள் பேசியதுடன் சரி, அடுத்த இரண்டு வாரங்களில் அவள் பேசியது எல்லாம் இந்தியாவின் பன்முகத் தன்மைப் பற்றியும், அதற்கு மாற்றாக ஒருமுகத் தன்மை புகுத்த நினைக்கும் சங்கிகளின் செயல்த் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைப் பற்றியும் தான். சமபால் ஈர்ப்பாளள் என்றாலே நான் கண்டிப்பாக இடதுசாரியாகத் தானே இருக்க முடியும், என்னை என் பாலியல் நோக்கின் அடிப்படையில் ஒடுக்கும் போது, நான் பிற ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவளாகத் தானே இருக்க முடியும்! எனவே வினிதா பேசிய விதமும், பேச்சும் என்னை வெகுவாகவேக் கவர்ந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின், நிலவழகியாக பேசிக் கொண்டிருந்த நான் மதியழகியாகவும், வினிதாவாக பேசிக்கொண்டிருந்த அவள் நான்சியாகவும் எங்களது உண்மையான முகநூல் கணக்குகளில் பேச ஆரம்பித்தோம்.

எண்களை பரிமாறிக் கொண்டு அலைபேசியிலும் பேச ஆரம்பித்தோம், ஊர், உலகம், சமூகம் என சுற்றிய எங்கள் பேச்சு, ஒருக்கட்டத்தில் எங்களை நோக்கித் திரும்பியது. நான்சி அவ்வபோது காமத்துபால் கலந்து பட்டும்படாமல் பேச ஆரம்பித்தாள். சில சமயம் உரையாடல் முழுக்க கலவி மட்டுமே நிரம்பியிருக்கும். எனக்கும் அது பிடித்திருந்தது. புதிதாக தோன்றிய இந்த உறவு நட்பா, காதலா அல்லது வெறும் காமமா என்ற குழப்பம் மெல்ல என்னுள் தோன்ற ஆரம்பித்தது.

காதல் – எந்தவொரு வரைமுறைக்குள்ளும், விளக்கங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத விசித்திரம். 25 வயதை எட்டியிருக்கும் எனக்கும் அந்த விசித்திரம் எப்படி இருக்கும் எனத் தெரியாது. மறுதலித்த பல ஆண்களின் காதல் கோரிக்கைகளையும், நிறைவேற்றப்பட்ட சில பெண்களின் காமக் கோரிக்கைகளையும் கொண்டதுதான் இந்த 25 வருட வாழ்க்கை. சிறுவயதிலே அரசாங்க வேலை கிடைத்ததால், எனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமையை எனது பெற்றோர்களிடமிருந்து பறித்துக் கொண்டேன். எல்லாம் சரி தான், ஆனால் காதல் என்ற உணர்வு மட்டும் எப்படி இருக்கும் என இதுவரை உணர்ந்ததில்லை. வினிதா, இல்லை இல்லை நான்சி காமத்துப்பால் கலந்து பேச ஆரம்பித்த மூன்றாவது வாரத்திலிருந்து, வார்த்தையால் விவரிக்க முடியா ஓர் உணர்வால் ஆட்பட்டிருந்தேன். உடலியல் இன்பத்தை தேவையான அளவு அனுபவித்திருந்த போதும், உணர்வியல் ரீதியான இன்பத்திற்கு உள்ளம் ஏங்கிய சமயத்தில் தான் நான்சியுடனான இப்புது உறவு ஏற்பட்டிருந்தது. விளக்கமுடியா இந்த உணர்வுதான் காதலா? இந்த போதைதான் காதலா?, இப்போதையை நான்சி எப்போதும் எனக்கு தருவாளா, இல்லை இதுவும் மற்றுமொரு உடல்த்தேவைக்கான உறவா? என பல குழப்பங்கள் மனதில் ஓர் அமைதியின்மையை ஏற்படுத்த தொடங்கியது. இதைத் தொடரும் விருப்பம் எனக்கு இல்லை. ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டுமானால் நான்சியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கு முன் நான்சியிடம் அலைபேசியிலேயே கேட்டேன், நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த உறவு எத்தகையது, இவ்வுறவின் நோக்கம் என்ன என்று?!. என் நட்பு தான் அவளுக்கு வேண்டுமாம், தேவைப்படின் அவ்வபோது கலவியும். எனக்கு குழப்பம் இன்னும் அதிகரித்தது. எனவே நாம் நேரில் சந்திப்போம் என கூறியபோது முதலில் மறுத்தவள், என் வற்புறுத்தலில் பேரில் ஒத்துக் கொண்டாள்.

ஜூலை மாத கடைசி சனிக்கிழமை அது. அலுவலக வேலையாக மதுரை வரை செல்கிறேன் என வீட்டில் கூறிவிட்டு சிவகங்கையிலிருந்து கிளம்பினேன், மேலூரிலிருக்கும் நான்சியைப் பார்க்க. தொ. பரமசிவன் அவர்களின் அழகர்கோவிலை படித்தப்பின் மீண்டும் ஒருமுறை அழகர் கோவில் செல்ல விரும்பினேன். எனவே நான்சியும் நானும் அழகர்கோவில் சந்திக்கலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.

azhagarkoil
[Image credit: http://streetsmadurai360.blogspot.com/]
பேசிக்கொண்டது போல 11 மணி அளவில் நான் அழகர்கோயில் சென்று விட்டேன். நான்சி வர 30 நிமிடங்கள் தாமதமாகும் என தெரிவித்ததால், நேரம் போக்குவதற்காக அவளது வினிதா என்ற போலிக்கணக்கிலிருந்த பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். நிறைய பன்முகத் கலாச்சாரம் பற்றிய பதிவுகள், சில காதல் பதிவுகள் இருந்தது. அதில் சில பதிவுகளில் ரோஷிணி என்ற பெயரை டேக் செய்து காதல் பதிவுகளை மே மாதம் வரை வினிதா இட்டிருந்தாள். யார் அந்த ரோஷிணி என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அந்த கணக்கை ஆராய்ந்தால் அதுவும் ஒரு போலிக் கணக்கு. சில குழப்பங்கள் இது தொடர்பாக எழுந்தாலும், நான்சி வருவதை பார்த்ததும் தற்காலிகமாக மறைந்தது. முதல் நேரடிச் சந்திப்பு. அழகர் கோவிலை தொ.பரமசிவன் அவர்களின் எழுத்துகளின்கண் கொண்டு பார்த்து இரசித்த விட்டு, கோவில் வளாகத்தில் தனியாக இருந்த ஒரு மர நிழலில் அமர்ந்தோம். வினிதாவே ஆரம்பித்தாள். இருவரைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அலைபேசியிலேயே பகிர்ந்திருந்தோம். தான் தயார் செய்து கொண்டிருக்கும் அரசாங்க வேலைக்கான தேர்வில் தான் தனது கவனம் முழுக்க இருப்பதாக மீண்டும் ஒருமுறை கூறினாள். அவளைப் பற்றிய எந்த முடிவையும் எடுக்காத, அவளது முடிவைப் பொறுத்து எனது முடிவை அமைத்துக் கொள்ளலாம் என நினைத்த நான் இன்று அந்த முடிவை எடுத்துவிட வேண்டும் என தீர்க்கமாக நினைத்தேன். எனவே நானே ஆரம்பித்தேன்.

“நான்சி, நமது உறவை எவ்வாறு அமைத்துக் கொள்ள விரும்புகிறாய்? இந்த உறவு வெறும் நட்பா, இல்லை காமம் கலந்த நட்பா, காதலா, காதலுக்கான படிநிலைகளா? உனது நிலைப்பாடு எதுவென தெளிவாகச் சொல், குழப்பமான மனநிலையோடு நாட்களை கடத்த எனக்கு விருப்பம் இல்லை. இன்றே முடிவெடுப்போம். என்னச் சொல்கிறாய்?”

ஒருமணி நேரத்திற்கும் மேல் பேசியிருப்போம். நான்சியால் ஒரு தெளிவான நிலைப்பாட்டைச் சொல்ல முடியவில்லை. மாற்றி மாற்றி பேசினாள். நான் அவளுக்கு நல்ல தோழியாக வேண்டுமாம்,சில சமயம் கலவியும் வேண்டுமாம், என்னைக் காதலிக்கிறேன் எனச் சொல்கிறாள், உடனே இல்லை என மறுக்கிறாள். அவள் பேசியதன் மூலம் எனது குழப்பம் மேலும் அதிகரிக்கத் தான் செய்தது. மெதுவாக பேச்சை ரோஷிணி பக்கம் திருப்பினேன். யார் அந்த ரோஷிணி எனக் கேட்டேன். ரோஷிணி பெயரைக் கேட்டதும் தடுமாறியவள், அதை மறைக்க முயற்சித்தை நான் கவனிக்காமல் இல்லை. ரோஷிணி எனது நல்ல தோழி எனக் கூறியவள், தோழியோடு தான் காதல் பதிவுகள் இடுவாயா எனக் கேட்டதும் தனது முன்னாள் காதலி எனக் கூறினாள். சரி விடு எனக் கூறிக் கொண்டு, நமது உறவுநிலையை காதலுக்கான படிநிலைகளில் ஒன்றில் வைப்போம், நட்பு என்றால் அதில் கண்டிப்பாக காமம் கலக்கக் கூடாது; எனவே நமது உறவுநிலைக்கு அது சரிவராது என நானே ஒரு நிலைப்பாட்டை அவளிடம் தெரிவித்துக் கொண்டு, எடுத்துக் கொண்டேன்; எனது குழப்பங்களுக்கு ஒரு தற்காலிகத் தீர்வைக் கொடுத்தேன். மதியம் 2 மணியைக் கடந்ததால் இருவரும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டப் பின் விடைப் பெற்றுக் கொண்டோம்.

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒரு புது உணர்வால் ஆட்கொள்ளப் பட்டிருந்தேன். காதல் படங்களில் வருவது போலவே எனக்கும் நடப்பது போலத் தோன்றியது. நான்சியுடன் அலைபேசியில் பேசும் போதெல்லாம் இன்பக் கடலில் மிதக்க ஆரம்பித்தேன். நான்சியும் காதல் ஒழுக பேசிய பேச்சுகளும் வார்த்தைகளும் எனக்குள் ஒரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சமபால் ஈர்ப்பாளராக வாழ்வது அத்துணை சுலபமானது அல்ல, அது உங்களுக்கும் தெரியும். பெற்றோர்களின் எதிர்ப்பு, சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்ற உறவினர்களின் நச்சரிப்பு என்ற புற அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், நிச்சயமில்லா எதிர்காலம் பற்றிய பயம், தனிமையிலே வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற பயம் என்ற அகச்சிக்கல்கள் பெறும் அழுத்தத்தைக் கொடுக்கும். நீடித்த ஓர் உறவிற்கு மனம் எப்போது ஏங்கும். எனக்கும் மனம் அப்படி ஏங்கிய நேரத்தில் தான் நான்சியுடனான அறிமுகம் கிடைத்தது. இருந்தாலும், அவசரப் பட வேண்டாம், பொறுமையாக முடிவெடுப்போம் என என் மனதை பக்குவப் படுத்தியிருந்தேன். அதே நேரத்தில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் வானவில் நிமிடங்களை கொஞ்சம் கூட தாமதிக்காமல், விட்டுவிடாமல் முழுவதும் அனுபவிப்போம் என நினைத்து வானவில் நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

சரியாக நாங்கள் பேச ஆரம்பித்த 45 ஆவது நாள். ஒரு ஏகாந்த மாலைப் பொழுது. நான்சி என்னை அலைபேசியில் அழைத்தாள்.

” மதி, நீ எனக்கு ஒரு நல்ல தோழி; நட்பைத் தவிர நம்மிடையே வேறொன்றும் இல்லை, நேரடியாகவே சொல்கிறேன்; ரோஷிணி என் காதலி, எனக்கு அவள்தான் வேண்டும். எனக்கும் அவளுக்கும் சில வாரங்களாக கருத்து வேறுபாடு நிலவியது. அவள் என்னை ஊதாசினப் படுத்துகிறாள், என்னை வெறுக்கிறாள் என நானே தேவையில்லாமல் கற்பனைச் செய்து கொண்டு அவளிடமிருந்து விலக முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் நான் உன்னுடன் பேச ஆரம்பித்தேன். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; ஆனாலும் எனக்கு ரோஷிணி தான் வேண்டும். நேற்று, பல வாரங்களுக்குப் பின் நேரில் சந்தித்தோம். அவள் என் மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் என புரிந்து கொண்டேன். எனவே நம் உறவு காதலாக பரிணமிக்காது, நாம் நண்பர்களாவே இருந்து விடுவோமே. என்னச் சொல்கிறாய்?”

என நான்சி கூறியவுடன் ஒரு நிமிடம் நிலைத்தடுமாறி விட்டேன். பின் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு நான் பேச ஆரம்பித்தேன்.

” நல்லது ரோஷிணி, குறைந்தபட்சம் இப்போதாவது இதை சொல்கிறாயே, நல்லது. ஆனால் ஒன்று மட்டும் சத்தியம். நீ என்னை உன் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டாய் என்று தான் நான் நினைக்கிறேன், உன் உறவில் ஒரு பிரச்சனை என்று நாம் பேச ஆரம்பித்த முதல் நாளே அல்லது நாம் நேரில் சந்தித்த அன்றாவது சொல்லியிருந்தால், நான் தேவையில்லாத கற்பனை உலகை உருவாக்கி இருக்க மாட்டேன். பரவாயில்லை விடு. நன்றாக இரு உன் காதலியுடன். ஆனால் நான் இந்த உறவைத் தொடர விரும்பவில்லை, என்ன சொன்னாய், நான் வெறும் தோழி, இந்த உறவு வெறும் நட்பு,.. ம்ம்ம்ம், தோழியுடன் தான் நீ கலவி உரையாடல்(செக்ஸ்டிங்), வீடியோ செக்ஸ் செய்வாயா? இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை; ஓர் உறவில் சிக்கல் இருக்கும் போதே இன்னொருவருடன் உன்னால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது, இது கேவலமாக தெரியவில்லையா? உனது உறவிற்கு நீ செய்யும் துரோகமாக தெரியவில்லையா?. ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுகிறேன். நமக்குள் ஏற்பட்ட இந்த உறவு என்றாவது ஒரு நாள் காதலாக பரிணமிக்கும் என நம்பியிருந்தேன், ஆனால் அதற்கு இப்போது வாய்பில்லை என்று தெரிந்தபின் இதைத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. கண்டிப்பாக நீ என் தோழி இல்லை, என் வாழ்வில் எனக்கு தற்காலிக இன்பத்தை கொடுத்த ஒரு தற்காலிக வானவில் நீ, அவ்வளவு தான். நீ என்னைப் பயன்படுத்திக் கொண்டாய், என்னை இரண்டாவது தெரிவாக நினைத்துக் கொண்டாய் என்று என் மனம் உறுதியாக நம்புகிறது. மனம் வலிக்கிறது, இந்த வலி நீங்க வேண்டுமானால் நீ என் வாழ்க்கையில் மீண்டும் வர க் கூடாது, இத்தோடு இந்த வானவில் நிமிடங்கள் முடிகிறது” என்று படபடவென பேசிய நான் அவள் பதிலளிக்கக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். அவள் என்னை மீண்டும் தொடர்பு கொள்ள முடியா வண்ணம் இருக்க வேண்டிய எல்லாவற்றையும் உடனே செய்து முடித்தேன்.

இதுவரை நான் அனுபவித்திராத காதல் உணர்வை, நான் அனுபவிக்க உதவியவள் அவள். நிச்சயமற்ற நிரந்த வானவில்லை நோக்கிய வெறுமையான பயணத்தில், அயர்ச்சி ஏற்பட்ட தருணத்தில் எனக்கு புத்துணர்ச்சி அளித்த என் தற்காலிக வானவில் அவள். அவள் மேல் எவ்வித கோபமும் எனக்கு இல்லை, நானும் என் தற்காலிக வானவில் நிமிடங்களை நினைத்து மகிழ்ச்சியாகவே உள்ளேன். அவள் கூட மறுபடியும் பேசி நல்ல தோழியாக இருக்க முடியும்தான். இருந்தபோதிலும் அவள் என் தற்காலிக வானவில்லாக மட்டுமே இருந்து விட்டு போகட்டுமே! என்ன சொல்கிறீர்கள்!

– பிரான்சிஸ் திவாகர்.

]]>
https://new2.orinam.net/ta/yenn-tharkaaliga-vaanavil-aval-ta/feed/ 0
[கவிதை] பால் புதுமையினர்? https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/ https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/#respond Wed, 25 Nov 2020 08:12:39 +0000 https://new2.orinam.net/?p=15275

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற ஓரினக் கனிமங்களின் ஓரினச்சேர்க்கையே நம் வானில் ஞாயிறாக ஒளிரக் காண்கிறோம்;

புவி மற்றும் நிலவு என்ற ஓரினக் கோள்களின் தற்பாலீர்ப்பே நம் கடல்களின் ஓதங்களாக ஆர்ப்பரிக்கக் காண்கிறோம்;

ஓரினம் சார் ‘நிம்பஸ்’ முகில்களின் தன்பால் காதற் கூடல்களே மாமழையாக இப்பூவுலகை நனைக்கக் காண்கிறோம்;

இக்காதற் கூடல்களே ஊடல்களாக மாறுமிடத்து மின்னல்களாகவும் இடிகளாகவும் அம்பரத்தில் கர்ஜிக்கக் காண்கிறோம்;

இங்ஙனம், ஞாயிறு, முகில், மழை என ஓரினர்களின் சங்கமமே நம் நீள்நெடுவானின் மாயா ‘வானவில்‘ ஓவியமாக மிளிரக் காண்கிறோம்.

ஓரினராகிய யாம்,

மெசொப்பொத்தேமியாவின் கில்கமெஷ் என்க்கீடு ஆக இருந்திட்டோம்;

இசுரயேலின் தாவீது யோனத்தான் ஆக இருந்திட்டோம்;

யவனத்தின் அலெக்ஸாண்டர் ஹெஃபேஸ்ட்டியன் ஆக இருந்திட்டோம்;

தமிழகத்தின் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் ஆக இருந்திட்டோம்;

சேரளத்தின் ஐயப்பன் வாவர் ஆக இருந்திட்டோம்;

ஹிந்துஸ்தானத்தின் மாலிக் கஃபூர் அலாவுதீன் கில்ஜி ஆக இருந்திட்டோம்;

இவ்வாறாக வரலாற்றின் முழுமையிலும் வாழ்ந்திட்ட யாம் பால் புதுமையினர் ஆவது எங்ஙனம்

காதல் தோன்றிட்ட காலம் முதல் இருந்திட்ட எம் காதல் பழைமையே அன்றி புதுமையன்று;

யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.

‘பரிசுத்த தேவாகமம்’ அங்கீகரிக்கும் உம் எதிரினக் காதலோ –

சாதி-மத-இனம் பார்க்கும்,

சந்தான பாக்கியம் தேடும்,

சொத்து சம்பத்து கடத்தும்.

‘பரிசுத்த தேவகாமம்’ ஆகிய எம் ஓரினக் காதலோ –

மாந்தரிடையே மாறுபாடு ஒழிக்கும்,
மக்கட்பேறுக்காக மட்டுமென்பதை மறுதலிக்கும்,

மாட்சிமை மனிதத்தில் மீநிறுத்தும்.

மனிதனை மெய்யுள்ளத்தோடு மனிதனாக மட்டும் நேசிக்கும் எம் ஓரினச் சேர்க்கை இயற்கையே;

சாதி-சொத்து-சந்ததி வேண்டி சமூகத்திற்காக உடன்படிக்கை செய்யும் உம் எதிரினச் சேர்க்கை செயற்கையே.

மொழிக்கிறுக்கன்.


Acknowledgents:
Image source: https://newstm.in/

]]>
https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/feed/ 0
[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் https://new2.orinam.net/ta/a-conclusion-and-a-prologue/ https://new2.orinam.net/ta/a-conclusion-and-a-prologue/#comments Wed, 24 Jun 2020 16:38:51 +0000 https://new2.orinam.net/?p=15033 சில சமயங்களில் அளவுக்கதிகமான தனிமை நம்மை ஒரு சுய தேடலுக்கு இட்டுச் செல்லும். தேடலின் முடிவில் நாம் எதிர்பாராத திருப்பங்களையும் உண்மைகளையும் உணரத் தொடங்குவோம்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் அறிவியல் பயிலும் இருவர் தான் நம் கதை நாயகர்கள். பொதுவாக முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மார்ச்சு மாதம் என்பது பெரும் தலைவலி பிடித்த மாதம். கடைசி வருட ஆய்வு அறிக்கையை சமர்பிக்க வேண்டும், தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும், எல்லாவற்றையும் விட கல்லூரி வாழ்வில் கடைசி நாள்களின் வலியை சுமக்க வேண்டும். அப்படி பட்ட மாதத்தில் தான் இவ்வருடம் இந்தியாவில் கொரோனா என்ற நோய்த் தொற்று மக்களை அச்சுறுத்த ஆரம்பித்தது.

தமிழகத்தில் மார்ச் மாதம் 17 முதல் 31 வரை பள்ளி, கல்லூரிகள் செயல் படாது என அறிவிக்கப் பட்டப்போதும் டேனியலும், பரக்கத்தும் ஆய்வு அறிக்கை தொடர்பான வேலையால் தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிலே தங்கி இருந்தனர். மார்ச் 22 அன்று ஒரு நாள் அடையாள பொது முடக்கத்தின் போது கைத்தட்டி கொரோனாவை விரட்டி அடித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது, போக்கு வரத்துத் துறையில் பணி புரியும் நண்பனின் அப்பா கொடுத்த அறிவுரைப் படி ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். வரும் நாள்களில் பேருந்து பயணம் தடைச் செய்ய வாய்ப்புள்ளதாக நண்பனின் தந்தை தெரிவித்திருந்தார். ஆய்வு வேலையும் இறுதிக் கட்டத்தை நெருங்கியதால் மீதமுள்ளவற்றை ஊருக்குச் சென்று பார்க்கலாம் என்றும் அடுத்த நாள் காலை முதல் பேருந்தில் ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் முடிவெடுத்துக் கொண்டனர். டேனியல் கோவில்பட்டிக்கும், பரக்கத் திருப்பத்தூருக்கும் செல்வதற்காக சிதம்பரம் பேருந்து நிலையம் வந்தனர். டேனியலை திருச்சி பேருந்தில் வழியனுப்பி வைத்து விட்டு, பரக்கத் திருவண்ணாமலை பேருந்தைப் பிடித்தான்.

ஊருக்கு கிளம்பும் முதல் நாள் இரவு, டேனியல் மனதை இனம் புரியாத பயம் ஆட்கொண்டது. பள்ளிப்படிப்பை முடித்தப் பின் அவன் வீட்டிலும், அவனது சொந்த ஊரிலும் இருந்த நாள்கள் மிகக் குறைவு. கோடை விடுமுறையில் கூட ஏதாவது களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெளியிடங்களுக்குச் சென்று விடுவான். இப்போது இந்த பொதுமுடக்கத்தால் வீட்டில் எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறோமோ என்று பயங்கொள்ள ஆரம்பித்தான். இங்கு வாடகைக்கு இருக்கும் வீட்டிலே தங்கி விடலாம் என்றால் அதுவும் சிரமம். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, டேனியலின் முகத்தைப் பார்த்து என்னவென்று அனுமானித்துக் கொண்ட பரக்கத் அவனின் தன் மடியில் கிடத்தினான். ” மச்சான் நீ என்ன யோசிக்கிறனு புரியுது. யூஜி பர்ஸ்ட் இயர்ல இருந்து நான் உங்கூட படிக்கிறேன்; அந்த மூணு வருசம் உன்னோட மன நிலை எப்படி இருந்துச்சுனு நல்லாவே தெரியும். நீ யார் அப்படிங்கிற கேள்விக்கு பதில் தேட நம்ம காலேஜ் கவுன்சிலர்( மன நல ஆலோசகர்) மூலமாக முயற்சி செஞ்சப்ப நீ எவ்ளோ கஷ்டப் பட்டனு தெரியும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை உன்னோட நிலைப்பாடு மாறிட்டு இருக்கும்; ஒரு முறை வந்து நான் ஒரு சமபால் ஈர்ப்பாளன்னு சொல்லுவ; ஒரு ஆறு மாசம் கழிச்சி அப்படி இல்லனு சொல்லுவ. பட் ஒரு வழியா பைனல் இயர் படிக்கும் போது நீ தெளிவா சொன்ன, நீ ஒரு சமபால் ஈர்ப்பாளன்னு. அதுக்கு அப்பறம் நீ உன் முகமூடி மேல அவ்ளோ கவனமா இருந்த. யாருக்கும் உன்ன பத்தி தெரிஞ்சிட கூடாதுனு உன்னோட நடத்தையில, பேச்சுல ரொம்ப கவனமா இருப்ப. எங்கிட்ட மட்டும் உன்னோட முகமூடியை கழட்டி வச்சுருவ. ஊருல, வீட்ல இதுவரை யாருக்கும் உன்னப் பத்தி தெரியல. பட் இனிமே தெரிஞ்சு போயிடுமோனு பயப்புடுற, சரியா? கவலப் படாத மச்சான், அப்படி எதுவும் ஆகாது. நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணு. ஆனா மறுபடியும் ஒரு விசயத்த மட்டும் சொல்றேன். கேட்டுக்க. இந்த சமபால் ஈர்ப்புனு நீ சொல்றது எல்லாம் just a part of sex. அன்னைக்கு சரக்கடிச்ச போதைல நீயும் நானும் ஒரு முறை செக்ஸ் வச்சுகிட்டோம், அதுக்காக நான் என்ன சமபால் ஈர்ப்பாளனா? இது ஒரு வகையான செக்ஸ் மச்சான் அவ்ளோ தான். உனக்கு தான் ஊருல அத்தைப் பொண்ணுங்க நிறைய இருக்காங்கனு சொல்லுவியே, யாரையாச்சும் உசார் பண்ணு” பரக்கத் சொன்ன இந்த கடைசி விசயத்த கேட்ட டேனியல் சடாரென்று எழுந்து பரக்கத்தை கோபத்தோடு பார்த்தான். “உனக்கெல்லாம் எவ்ளோ சொன்னாலும் புரியாதுல, இவ்ளோ கஷ்டப் பட்டு எங்கூட நீ பழக வேண்டாம். உன் வேலைய பாத்துட்டுப் போ” என்று கோபத்தோடு கூறிய டேனியல் தன் துணிமணிகளை பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.

அவர்கள் ஊருக்குச் சென்ற அதே நாளில் 21 நாட்கள் பொதுமுடக்கம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் ஒன்றாம் தேதியே கல்லூரிக்கு சென்று விடலாம் என நினைத்த டேனியலுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்தது. பொது முடக்கத்தின் முதல் பத்து நாள்கள் வாட்சப்பில் பகிரப் பட்ட கேளிக்கை விளையாட்டுகளால் சந்தோசமாகச் சென்றது. அடுத்த பத்து நாள்கள் லூடோ போன்ற விளையாட்டுகளால் கடத்தப் பட்டது. அதற்குப் பின் அனைத்து சலித்து விட்டது. தினமும் டேனியலுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசிக்கொண்டிருந்த பரக்கத் அதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தான். டேனியல் வீட்டில் தலைக்கட்டுகள் அதிகம். டேனியலுக்கு 2 அண்ணன்கள் மற்றும் 1 தங்கை. அண்ணன்கள் அதே தெருவில் புது வீடு கட்டி தனித்தனியாக இருந்தனர். தங்கை கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவி. டேனியல் பெரும்பாலும் பகல் பொழுதில் வீட்டில் இருப்பதை தவிர்த்தான். காலையில் சாப்பிட்டு முடித்தவுடன் தோட்டத்திற்கு சென்று விடுவான். மாலையில் சூரியன் அடங்கியப் பின் தான் வீட்டிற்கு வருவான். முதல் கட்ட பொது முடக்கத்தில் இவனை யாரும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. இவனும் யாரிடம் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. நீட்டிக்கப் பட்ட பொது முடக்கக் காலத்தில் தோட்டத்திற்கு செல்வதும் இவனுக்கு சலிப்பாக்கி விட்டது. எனவே வீட்டில் அவன் அறைக்குள்ளே அடங்கிக் கொண்டான். 

இதே காலத்தில், கேளிக்கை விளையாட்டுகளிலும் லூடோவிலும் ஆர்வம் இல்லாத பரக்கத் பப்ஜி போன்ற விளையாட்டுகளில் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவை அவனுக்கு சலீப்பூட்டின. அந்த நேரத்தில் தான் லாரி உரிமையாளரான அவன் தந்தை சென்னை சென்று திரும்பினார். 14 நாள்கள் கழித்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டதுடன், வீட்டில் அவன் அம்மா, அத்தை மற்றும் தங்கைக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதிர்ஷ்டவசமாக இவனுக்கு தொற்று ஏற்பட வில்லை. மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப் பட்டோர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அதே வேளையில் இவனை வீட்டிலே தனிமைப் படுத்தினர். பக்கத்து ஊரில் இருந்த அக்கா இவனை பார்த்துக் கொள்ள அழைத்து வரப்பட்டார். இவனை அவன் அறையை விட்டு 15 நாள்களுக்கு வெளியேறக் கூடாது என சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டிப்புடன் அறிவுறுத்தி விட்டு சென்றனர். இரமலான் மாதமும் தொடங்கியது. இவனுக்கு தேவையான உணவை மட்டும் அவனது அறைக்கு தகுந்த பாதுகாப்புடன் அவனது அக்கா எடுத்துச் செல்வார். அந்த அறைக்குள்ளே அடைப்பட்டுக் கிடந்த பரக்கத்துக்கு செல்போன் மட்டுமே ஒரே துணையாக இருந்தது. ஒருகட்டத்தில் அதுவும் அவனுக்கு சலித்து விட்டது. நோன்பு இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக அல்லாவைப் பற்றி நினைப்பதும், தன் வாழ்வைப் பற்றி நினைப்பதுவுமாக நேரத்தைக் கடத்த ஆரம்பித்தான்.

டேனியலின் ஊரிலோ, வீட்டிலோ பொது முடக்கம் எவ்வித மாற்றத்தையும் பெரியளவில் ஏற்படுத்த வில்லை. தேவையான பொருட்கள் வண்டிகளில் விற்பனைச் செய்யப் பட்டது. பகல் நேரங்களில் பெரும்பாலான நேரங்கள் அவன் வீடு அண்ணிகளாலும், அண்ணன் குழந்தைகளாலும் நிரம்பியிருக்கும். எப்போதும் அரட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். முதல் பொதுமுடக்கத்தில் இவையனைத்திலும் நழுவிக் கொண்ட டேனியல் நீட்டிக்கப் பட்ட பொதுமுடக்கத்தில் மாட்டிக் கொண்டான். இவன் நழுவிச் சென்றதற்கான காரணம், எங்கே தன் முகமூடி அவர்கள் முன்னிலையில் கழன்று விடுமோ என்ற பயம் தான். பின் இவன் விரும்பா விட்டாலும் அண்ணியார்கள் அரட்டைப் பேச்சுக்கு அழைத்த சமயங்களில் தன் பேசும் முறையிலும் உடல் மொழியிலும் அதிக கவனம் செலுத்தி தன் முகமூடியை கவனமாக பார்த்துக் கொண்டான். சமயங்களில் அவனையும் மீறி அவனது முகமூடி கழன்று விடும். ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலும் அவனது கைபேசியை பிறர் தொடக் கூட அனுமதிக்க மாட்டான். ஆனால் ஒருநாள் அவனது கைப்பேசியின் கடவுச் சொல்லை தெரிந்து கொண்ட 5ஆம் வகுப்பு படிக்கும் அண்ணன் மகன், டேனியல் குளிக்கச் சென்ற நேரம் பார்த்து, அவனது கைபேசியில் விளையாட ஆரம்பித்தான்.  எதேச்சையாக அலைபேசியின் இணையத் தொடர்பு கிடைத்தவுடன், அவனது முகநூல் போலிக்கணக்கிலிருந்து குறுஞ்செய்திகளும், டேட்டிங் செயலிகளில் இருந்து அறிவிப்புகளும் வர ஆரம்பித்தன. இதை அந்த நேரம் பார்த்து அவனது அறைக்குள் நுழைந்த அவனது தங்கை கவனித்ததால் அலைபேசியை அச்சிறுவனிடமிருந்து கைப்பற்றி அந்த செய்திகளை படிக்க ஆரம்பித்தாள். தன் அண்ணன் ஒரு சமபால் ஈர்ப்பாளன் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருத்தத்தை விட கோபமும் அருவருப்புமே அவளுக்கு அதிகமாக வந்தது. அதே கோபத்துடன் தன் அப்பா, அம்மாவிடம் இந்த செய்தியை சொன்னாள். குளியலறையை விட்டு வெளியே வந்த டேனியலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அளவுக்கதிகமான தனிமை பரக்கத்தை ஒரு சுயத்தேடலுக்கு இட்டுச் சென்றது. சரக்கடித்த போதையில் டேனியலுடன் கழிந்த அந்த இரவு அடிக்கடி அவன் நினைவில் வந்து சென்றது. அது அவனுக்கு மிகவும் பிடித்தும் இருந்தது. அது வெறும் களவியலில் ஒரு பகுதியே என நினைத்திருந்த பரக்கத் அவ்வாறு இல்லையென தோன்றுவது போல இருந்தது. அதே சமயம் அவன் பல வருடங்களாக தொலை தூர காதலில் இருக்கும் தன் காதலியுடன் கழித்த நேரங்களும் அவன் நினைவில் வந்து சென்றது. டேனியலுடன் பழகிய இந்த 5 வருடங்களும் அவனுக்கு மிகவும் புதுமையாக இருந்தது. டேனியல் பற்றி நினைத்த போதெல்லாம் ஒருவித கிளர்ச்சி அவன் மனதில் உண்டானதை, அவன் அப்படியெல்லாம் இருக்காது என தவிர்த்து வந்த தருணங்களும் அவன் நினைவில் வந்து சென்றன. தன் காதலியின் முகத்தில் டேனியலின் முகமும், டேனியலின் முகத்தில் தன் காதலியின் முகமும் மாறிமாறி தோன்றியது போல இருந்தது அவனுக்கு. இதைப் பற்றி டேனியலிடம் பேச முயற்சித்த போது ஒரு வாரமாக டேனியலின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கணிணிக்குரல் தெரிவித்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் பலவாறு மனதை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட பரக்கத், தான் ஓர் இருபால் ஈர்ப்பாளன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் தன்னை அவ்வாறாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தான் டேனியல் பகிர்ந்திருந்த மன நல ஆலோசகரின் உளவியல் ஆலோசனைகள் பரக்கத்துக்கு இந்த முடிவை எடுக்க உதவி புரிந்தன. அதே உறுதியுடன் தன் காதலனான டேனியலை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

பாரம்பரியமிக்க கிறித்தவ குடும்பமான  டேனியலின் குடும்பத்தில் டேனியலால் பெரிய பிரளயமே உண்டானது. எந்த முகமூடியை தாண்டி தன் அடையாளம் தன் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியக் கூடாது என நினைத்தானோ அந்த முகமூடி இன்று கிழிந்து விட்டது. அதே நாளில் அவனது கைபேசி உடைக்கப்பட்டது அவனது மூத்த அண்ணனால். வீட்டிலிருந்த எல்லோரும் அவனுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் அவனை மனதளவில் துன்புறுத்தினர். போதாதக் குறைக்கு அச்சமயம் பார்த்து மருத்துவர் ஷாலினியின் conversion therapy ஐ ஆதரிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவைக் காட்டி அவனை மாறி விடுமாறு எல்லோரும் மிரட்டினர். சரியான உணவு மறுக்கப் பட்டது. அவனது அம்மா முதற்கொண்டு அவனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக எல்லோரும் அவனை புறக்கணித்தனர்; வெறுத்தனர்; தங்கள் குடும்பத்திற்கு வந்த களங்கம் என நினைத்தனர். அண்ணன் குழந்தைகளை அவன் பக்கத்தில் விடவே இல்லை. ஒரு வேலையும், பொருளாதார பிடிப்பும் கிடைத்தப் பின் தன் முகமூடியை கிழித்துவிட்டு இந்த குடும்பத்தை விட்டே வெளியேறி விடலாம் என்று தான் டேனியல் நினைத்திருந்தான். அவனுக்குத் தெரியும் மதத்திலும், குடும்ப பெருமையிலும்  ஊறிப்போன தன் குடும்பத்தினருக்கு தன்னை புரிந்து கொள்ளும் பொறுமையும் அவசியமும் இல்லை என்று. ஆனால் இந்த கொடூரமான பொதுமுடக்கம் அவன் எதிர்பாரா நேரத்தில் அவனது முகமூடியை கிழித்து விட்டது. கிட்டத்தட்ட பதினைந்து நாள்களுக்கும் மேலாக தன் மேல் நிகழ்த்தப்பட்ட உளவியல் வன்முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தான். எதிர்காலம் சூனியமாய் தெரியும் போது நிகழ்காலத்தை கொலை செய்வதே அவனுக்கு சரியான தீர்வாக தெரிந்தது. ஓர் இரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியவன் தோட்டத்து கிணற்று நீரோடு தன் உயிரை கலந்து கொண்டான். அடுத்த நாள் காலை கிணற்றில் மிதந்த அவனது உடலை கண்ட குடும்பத்தினர் கவலை அடைந்ததை விட தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கம் தீர்ந்து விட்டதென எண்ணி நிம்மதி அடைந்தனர். இருட்டில் தோட்டத்திற்குள் தனியாக கௌதாரி தட்டு வைக்க வந்த இடத்தில் கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்ததாக அவனது இறப்புக்கு ஒரு பொய்யான முடிவுரை எழுதப்பட்டது. பொதுமுடக்க காலம் என்பதால் டேனியலின் நண்பர்கள் யாருக்கு இறப்பைப் பற்றிய தகவல் பகிரப் பட வில்லை.

பெண்கள் பேசவே கூடாது என்று கற்பிக்கப் பட்ட அந்த கிறித்தவ குடும்பத்தில் டேனியலின் அம்மா மட்டும் மனதிற்குள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். 

இங்கே திருப்பத்தூரில் பலமுறை முயற்சித்தும் டேனியலை தொடர்பு கொள்ள முடியாத பரக்கத் எப்போது பொதுமுடக்கம் தளர்த்தப்படும்? எப்போது டேனியலை சந்தித்து அவனை பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்யும் இந்த செய்தியை சொல்வது என்று ஆவலோடு காத்திருந்தான்.


Image credits: Adapted from Arunshariharan’s image on Wikimedia Commons, licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.

]]>
https://new2.orinam.net/ta/a-conclusion-and-a-prologue/feed/ 1
பகடைக் காய்கள் https://new2.orinam.net/ta/dice-story-francis-dhivakar-2019/ https://new2.orinam.net/ta/dice-story-francis-dhivakar-2019/#respond Thu, 28 Nov 2019 11:30:43 +0000 https://new2.orinam.net/?p=14766 அன்றைய இரவை கடந்து செல்வதற்கு மதிவதனி அவ்வளவு முயற்சிகள் எடுத்தாள். எப்படி முயற்சித்தும் நித்திரை மட்டும் அவளுக்கு கைகூட வில்லை. அவளுக்கு மிகவும் பிடித்த சின்மயியின் பாடல்களை ஒலிக்க விட்டுப் பார்க்கிறாள்; அவள் மனதுக்கு நெருக்கமான தமிழ்ரோஜாவை காதலிக்கும் தண்ணீர் தேச கதாநாயகனை நினைத்துப் பார்கிறாள். எங்கெங்கெல்லாம் மனதை மடைமாற்ற முயற்சித்தாலும் இறுதியில் அவனைப் பற்றிய நினைவில் முட்டிக் கொள்கிறாள். அன்று தான் அவர்களது… இல்லை… இல்லை அவளது காதலுக்கு கடைசி அத்தியாயம் எழுதப் பட்டது.

ஒரு இரயில் பயணத்தில் முதலில் அந்நியமாக, பயமுறுத்துபவளாக தெரிந்த அவள் நாளடைவில் அவனுக்கு நெருக்கமானவளாக மாறிப் போனாள். வழக்கமாக அவன் அலுவலகம் செல்லும் அதே மின் தொடர் வண்டியில் தான் அவளும் கைத்தட்டி காசு கேட்க வருவாள். தினசரி நடந்த எதேச்சையான சந்திப்பு, ஒரு நாள் எண்களை மாற்றிக் கொள்ள வைத்தது. பிறகு அன்பிற்காக மட்டுமே ஏங்கிய இருமனங்களை நண்பர்களாக பரிணமிக்க வைத்தது.

வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல், தன்னை பெண்ணாக வாழ உதவிய தன் வளர்ப்பு அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்த மதிவதனிக்கு, பிரவினுடன் ஏற்பட்ட நட்பு சற்று புதிதாக இருந்தது.

அந்தப் பக்கம், தனிமை விரும்பியான பிரவினுக்கு, இந்த நட்பு புதிய அனுபவமாக இருந்தது. இதுவரை யாரிடமும் சொல்லாத பல இரகசியங்களை மதிவதனியிடம் சொல்ல ஆரம்பித்தான்; அவளை அளவுக்கதிகமாக அன்பு செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு இருக்கும் சொற்பமான நெருங்கிய நண்பர்களின் வரிசையில் முதல் இடத்தை மதிவதனிக்கு கொடுத்தான்..

இந்தப் பக்கம், இதுவரை தன்னை அனுபவிக்க, சுரண்ட மட்டுமே நினைத்த ஆண்களின் கூட்டத்திலிருந்து, தன்னுடன் நட்பு மட்டுமே பாரட்ட விரும்பிய ஆண்மகனை நினைத்து, ஒரு வித புதுமையாக இருந்தது மதிவதனிக்கு.

“மதி, இந்த ஒரு சின்ன விசயத்தினால், நம்முடைய நட்பை நான் இழக்க விரும்பவில்லை; என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆகச் சிறந்த நட்புனா அது இதுதான்; எனக்கு உன்மேல் எந்த கோபமும் இல்லை, ஆனால் புரிந்து கொள்ள முயற்சி செய்… இந்த நட்புதான் எனக்கு முக்கியம், மற்றவைகளை மறக்க முயற்சி செய்; நீ நினைக்கிற விசயம் எப்போதும் நடக்காது” இந்த வார்த்தைகளை குறைந்தது பத்து முறைகளாவது பிரவீன் மதியிடம் சொல்லியிருப்பான்”

“இல்லை நான் நினைப்பது தவறு; இது நடக்காது; நடக்கவும் கூடாது. ஆனா எனக்கு ஏன் இப்படி திடீரென்று மனது மாறிவிட்டது… ஒருவேளை நான் வீட்டை விட்டு வெளியே வர வரைக்கும் எனக்கு கிடைத்த, இடையில் கிடைக்காமல் போன எனது அப்பாவின் பாசத்தைப் போன்றதொரு பாசத்தையும் அன்பையும் இவன் என்மேல் காட்டியதால் இப்படி எனக்கு தோன்றுகிறதா? என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால் என்னுடைய இந்த ஆடை மட்டும் நினைவேறக் கூடாது, அது சரியும் இல்லை. ஆனாலும்…’ இதே மாதிரி குறைந்தது இருபது முறைகளாவது மதிவதனி தனக்குத் தானே சொல்லியிருப்பாள்.

அன்றைக்கு, பிரவீன் தனக்கு பதவி உயர்வு கிடைத்தற்கு, மதிவதனிக்கு, அவளுக்கு மிகவும் பிடித்த, ஒரு சைனிஸ் உணவகத்தில் விருந்து கொடுத்தான். விருந்தின் போது முதன் முறையாக மதிவதனி தயக்கத்தை உடைத்து, பிரவீனிடம் தன் காதலைச் சொன்னாள்.

அவள் சொன்னதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ தன்னிடம் விளையாடுகிறாள் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதற்குப் பின் வந்த நாட்களில் மதிவதனியிடம் தென்பட்ட மாற்றங்கள் பிரவீனை சற்றே கலங்க வைத்தது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளோடு ஏற்பட்ட நட்பில் மட்டும் விரிசலை உண்டாக்கி விடக் கூடாது என்று முயற்சித்தான். ஏற்கனவே பால்மாற்றத்தால் அவள் மனதில் உண்டாகி இருக்கும் பல மன வடுக்களின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகரித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் முடிந்தளவுக்கு அவளுக்கு இதமாக புரிய வைக்க முயற்சித்தான். தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளன் என தெரிந்தும் அவள் ஏன் என்னிடம் இப்படி நடந்துக் கொள்ள முயற்சிக்கிறாள் என சில சமயம் கவலையும் கொண்டான். பெண்ணாக மாறியிருக்கும் அவளை தன்னால் காதலிக்கவே முடியாது என்பது ஒருபக்கம் இருந்தாலும், மதிவதனியுடன் உள்ள நட்பையே அவன் பெரிதாக எண்ணுகிறான். நட்பைத் தாண்டி எதையும் அவனால் சிந்திக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் தனது காதலை அவனிடம் நிரூபிக்க முயலும் போதும், அதை நட்பின் அடையாளமாக, நட்பின் உன்னதமாக மாற்றுவதில் வெற்றிப் பெற்றிருந்தான்.

இந்த மதிவதனியின் ஒரு மனது இவ்வாறு புலம்புகிறது,”எனக்கு தெரிகிறது, அவனால் என்னை காதலிக்க முடியாது, ஒருவேளை நான் மறுபடியும் ஆணாக மாறினால், அவன் என்னை ஏற்றுக் கொள்வானோ…. இல்லை இல்லை அது என்னால் முடியாது; இந்த பெண்மை தான் நான். என் அறிவுக்கு தெளிவாக தெரிகிறது, அவன் எனக்கானவன் இல்லையென்று. இருந்தும் ஒரு நப்பாசை, எனக்கு அவன் கிடைத்து விட மாட்டானா என்று. ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து விடாதா என்ற தீரா ஏக்கம் என்னுள் எப்போதும் இருக்கிறது.”

இன்னொரு மனதோ, “நான் ஏன் அவனைச் சந்தித்தேன்? அவன் ஏன் இடையில் கிடைக்காமல் போன என் தந்தையின் அன்பை என் மேல் செலுத்த வேண்டும்? என்னைச் சுரண்டவும், காயப் படுத்தவும் மட்டுமே செய்த ஆண் வர்க்கத்தையே நான் வெறுத்த சமயத்தில், அதே ஆண் வர்க்கத்தில் இருந்து மட்டும் வந்த இவன் மட்டும் ஏன் என்மேல் இத்தணைப் பாசத்தை பொழிய வேண்டும்? அவன் சொல்கிறான் , இதை வெறும் நட்பென்று. ஆனால் என்னால் அப்படி நினைக்க முடியவில்லையே! அவன் எனக்கு வேண்டும். அவன் மட்டும் தான் எனக்கு வேண்டும்” என்று ஒரு பக்கம் முரண்டு பிடித்தது. இருதலை கொள்ளி எறும்பாய் தவித்த மதிவதனி இதிலிருந்து விடுதலை அடைய முயற்சித்தாள்.

இந்த எண்ணச் சுழற்சி பல நாட்களுக்குத் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் மதிவதனி தனது ஆசையை பிரவீனிடம் சொல்லும் போதும், பிரவீன் பொறுமையாக அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான். ” மதி, இந்த மாதிரி ஈர்ப்பு ஏற்படுவதில் தவறே இல்லை; என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு விசயம், உன்னை என் மேல் காதல் வைத்துள்ளது. அது மிகவும் இயற்கையானது, இதில் உன் மேல் எந்த தவறும் இல்லை. தன்மேல் அதிகளவு பாசம் காட்டும் நபர்கள் மேல் காதல் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று.. ஆனால் ஒன்றைப் புரிந்து கொள், ஒருவேளை நீ மறுபடியும் ஆணாக மாறி வந்தாலும் என்னால் உன்னை காதலிக்க முடியாது. ஏனென்றால் நீ என் தோழி. உன்னுடன் ஏற்பட்ட இந்த நட்பு தான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆகச் சிறந்த பொக்கிசம். அதை எக்காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பவில்லை. இந்த காதல் என்ற ஒரு விசயம் மட்டும் இல்லையென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கலாமே! இதைக் கடந்து வா! இந்த காதலை மறுபடியும் நட்பாக புதுப்பிக்க முயற்சி செய். உன் தோழன் எப்போதும் உன்னுடனே இருக்கிறேன்” என்பது போன்ற பல இலட்சம் வார்த்தைகளால் மதிவதனியின் மனதை மாற்ற முயற்சித்தான். ஏனென்றால் முன்னரே சொல்லியது போல் பிரவீன் கண்டடைந்த அற்புத நட்பு இது.

நட்பா, காதலா என்று நடந்த போராட்டத்திற்கு ஒரு முடிவுரை எழுத மதிவதனி முடிவு செய்தாள். அன்று அவனை முதன்முதலில் சந்தித்த தாம்பரம் இரயில் நிலையத்திற்கு வரச் சொன்னாள். அவனும் வந்தான்…

இதோ பார், பிரவீன் எனக்கு புரிகிறது, உன்னால் என்னை காதலிக்க முடியாதென்று. இருந்தும் கடைசியாக கேட்கிறேன். நீ என்னை காதலிக்க ஏதேனும் வாய்ப்புள்ளதா?…

மதிவதனி, இதற்கு முன்னரே சொன்ன பதில் தான். நீ என் தோழி, இதைத் தாண்டி என்னால் சிந்திக்க இயலாது. ஆனால் உன்னோடு என் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அன்பையே விரும்……

போதும் பிரவீன்.நீ விரும்புவது நிகழாது. நான் உன்னை காதலிக்க முடியாது- அது உன்னை மேலும் காயப் படுத்தும். அதே நேரம்….

நான் உன்னை இனிமேலும் நண்பனாக நினைக்க வாய்ப்பில்லை; அப்படி செய்தால் அது நான் என் மனதிற்கு செய்த துரோகம் ஆகிவிடும்..

நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.. இது சில காலம் காயப்படுத்தும். இனிமேல் நாம் சந்திக்கப் போவதில்லை. இதுவே நமது இறுதிச் சந்திப்பு. உன்னை, உன் மேல் கொண்ட காதலை மறக்க இதைத் தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. என்னோடு எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சிக்காதே…. என்னை மன்னித்து விடு…

மதிவதனி, நான் உன்னை விட்டு விலகிச் சென்றால் தான் நீ அமைதியடைவாய் என்றால் விலகிச் செல்கிறேன். ஆனால் என்னருமை தோழியே, என்றாவது ஒரு நாள் நான் நட்பு பழகிய நமது நட்புகாலம் உனக்கு ஞாபகம் வந்தால், அந்தக் காலத்திற்குள் மீண்டும் செல்ல நினைத்தால், உன் தோழன் நான் அப்போது தயாராக இருப்பேன், என்று கூறிய பிரவீன், தரைநோக்கியிருந்த அவளது வாயிலிருந்து சொல் வருமுன்னே படிக்கட்டுகளில் ஏறி மக்கள் கூட்டத்தில் கரைய ஆரம்பித்திருந்தான்.

அன்றைய இரவில் கர்ணமும் மன்மதனும் தாங்கள் ஆடிய சூதாட்டத்தில், பகடைக் காய்களான பிரவீனுக்கும் மதிவதனிக்கும் ஓர் இடைவெளி விட்டிருந்தனர்.


  • இந்த சிறுகதையை முதன்முதலில் பிரான்சிஸ் ஓரினம் ஏற்பாடு செய்த நவம்பர் 24 2019  ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் படித்தார்
  • Image credits: 2 Dice symbol by Steaphan Greene, Wikimedia Commons. 2008. Licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.
]]>
https://new2.orinam.net/ta/dice-story-francis-dhivakar-2019/feed/ 0
சிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம் https://new2.orinam.net/ta/short-story-hug-treatment-francis/ https://new2.orinam.net/ta/short-story-hug-treatment-francis/#respond Fri, 13 Sep 2019 23:51:04 +0000 https://new2.orinam.net/?p=14617 இன்னைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ண வருவான்ல, எப்படியாச்சும் இன்னைக்கு அவண்ட்ட சொல்லிடனும்… ஸ்டீபன் பள்ளி வளாகத்தில் கடந்த 30 நிமிடங்களாக காத்திருக்கிறான் செந்திலின் வருகைக்காக! அவர்கள் இருவரும் அமர்ந்து மதிய உணவு உண்ணும் பூவரச மர நிழலில் காத்திருக்கிறான். விடுமுறை நாள் என்ற போதும் ஸ்டீபனும் செந்திலும் இன்று சந்திப்பதாக முன்னரே பேசி வைத்திருந்தனர்.

ஸ்டீபன் – செந்தில் இருவரும் 6ஆம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வருகின்றனர். இந்த வருடம் 10ஆம் வகுப்பு, முதல் பொதுத் தேர்வு. அவர்கள் படிக்கும் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையும் கூட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இருக்கும். இந்த வாரம் மட்டும் அதிசயமாக விடுமுறை விட்டிருந்தனர்.
அது அவர்கள் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்…..

டேய் ஸ்டீபன், நேத்து சாய்ங்காலம் சன் டிவில புது படம் வசூல் ராஜா MBBS  போட்டாங்கல, பாத்தியாடா?..

ஆமாடா பாத்தேன்.. ஏன் கேக்குற??

இல்ல அதுல ஹீரோ கமல் கட்டிப்புடி வைத்தியம் செய்வாருல..

ஆமா…

எனக்கு இப்ப டென்சனா இருக்கு.. நாம கட்டிப்புடி வைத்தியம் செஞ்சுகலமா???

தாராளமாடா?? கட்டிப்புடி வைத்தியம் செஞ்சிகிறது என்ன தப்பு?? அது நல்லது தானே??

அன்றிலிருந்து அவர்களின் கட்டிப்புடி வைத்தியம் தினந்தோறும் தொடர்ந்தது..

6ஆம் வகுப்பிலிருந்து இணைப்பிரியா நண்பர்களாக இருக்கும் ஸ்டீபனும் செந்திலும் செய்யும் அலப்பறைகள் இருக்கிறதே!! அதற்கு அளவே இருக்காது. ஒரு நாள் செந்தில் ஜனனியை காதலிக்கிறேன் என்று இவனிடன் சொன்னப் போது, போட்டியாக இவனும் தான் ரோசியை காதலிப்பதாக சொல்ல, வகுப்பில் இருந்த கருப்பு ஆடு ஒன்று கடைசியில் வகுப்பு ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட, “ஏண்டா ஏழாங்கிளாசு படிக்கிற ஒங்களுக்கு லவ்வு கேக்குதோ” என்று சொல்லிக்கொண்டே பிரம்படி அபிசேகம் செய்ய, அது ஒரு சோக கதையாக முடிந்தது. இதில் கொடுமை என்னவென்றால் இருவருமே காதலிக்கவில்லை.. போட்டிக்கு போட்டியாக நடந்த வினையாய் முடிந்த விளையாட்டு அது.

வளர் இளம் பருவத்திற்கே உண்டான தடுமாற்றங்கள் இருவரிடமும் தென்படத் தொடங்கியத் தருணம். மஞ்சள் பத்திரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படிப்பது, காதல் பாடல்களையும், இரவு நேர பாடல்களையும் இரசிப்பது, யாருக்கும் தெரியாமல், வீட்டில் யாருமில்லா சமயங்களில் ஃபேஷன் டிவி பார்ப்பது என்று சென்றுக் கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை. நாளாக நாளாக ஸ்டீபன் செந்தில் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான்; அவனோடு அதிக நேரம் செலவிட விரும்பினான்; அவனுக்காக நிறைய செலவு செய்யத் தொடங்கினான். எப்போதும் அவனோடே இருக்க வேண்டும் என்று ஸ்டீபனுக்குத் தோன்றியது. ஒவ்வொரு முறை கட்டிப்புடி வைத்தியம் செய்யும் போது ஓர் இனம் புரியாத ஆனந்தம் ஸ்டீபன் மனதில் தோன்றியது. இதே தான் செந்திலுக்கும் தோன்றியதா என்றால் அதற்கான பதில் ஸ்டீபனிடம் இல்லை. ஆனால் செந்தில் எப்போதும் ஸ்டீபனுடனே இருந்தான்; கட்டிப்புடி வைத்தியத்தை ஸ்டீபனுக்கு தவறாமல் கொடுத்து வந்தான்.

இதோ தூரத்தில் செந்தில் வந்துக் கொண்டிருக்கிறான்.

வாரான் பாரு.. எப்ப வரச்சொன்ன எப்ப வாரான் பாரு.. வாடா ஒனக்கு இப்ப தான் 10 மணி ஆகுதா? ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா??

சரி சரி கோவப்படாத ஸ்டீபன்.. வீட்டுல அப்பாக்கு ஏதோ டிரான்பர் வந்திருக்காம்; அதப் பத்தி பேசிட்டு இருந்தாங்க; எங்கிட்ட இப்போ வேற ஸ்கூல் மாத்தி விட்டா நல்லாப் படிப்பியானு கேட்டாங்க, நான் மாட்டேன் இங்கயே இந்த ஸ்கூல்ல தான் படிப்பேன்னு சண்டப் போட்டேன்.. எப்படியோ என்னனமோ பேசி என்ன சம்மதிக்க வச்சுட்டாங்க.. அதான் லேட்டாயிருச்சு, நானே எவ்ளோ கடுப்புல இருக்கேனு தெரியுமா????
என்னடா இப்படி சொல்ற.. கிளாஸ் ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆவுது… வேற ஸ்கூல்ல இப்போ சேத்துப்பாங்கலா?? நீ பொய் தானே சொல்ற??

நான் ஏண்டா பொய் சொல்லப் போறேன்..ஏதோ அறந்தாங்கி ஸ்கூல் HM எங்க அப்பாக்கு தெரிஞ்சவராம், அவரு ஓக்கே சொல்லிட்டாராம். சொல்ல முடியாது இன்னும் ஒரு வாராத்துல கெளம்பிடுவோம்.

ஓ அப்டியா!! என்னனு தெரியல மனசு ஒரு மாதிரி இருக்கு செந்தில்…..

ஸ்டீபன் மனசு ஒரு மாதிரி இருந்தா என்னப் பண்ணனும்??…..

என்னப் பண்ணனும்?? கட்டிப்புடி வைத்தியம் பண்ணனும்..
,,,,,,…….,,,,,,,
செந்தில் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்…

என்னடா சொல்லு…

போன வாரம் தினத்தந்தி ஞாயிறு மலர்ல ஒரு செய்தி படிச்சேன்.. அமெரிக்காவுல ஆம்பளயும் ஆம்பளயும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்; தப்பில்லையாம். நாமளும் அந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிடலாமா டா?? என்ன சொல்ற??

போடா…லூசு…என்னமோ சொல்ற எனக்கு ஒன்னும் புரியல… சரி சரி எனக்கு டைம் ஆச்சு நான் கெளம்புறேன்.. பை பை….

என்றுக் கூறிய செந்தில் மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடி வைத்தியம் செய்து விட்டுச் சென்றான். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, அந்த வார இறுதியில் ஸ்டீபனுக்கு உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்கு வராத நாளில் செந்தில் மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு பள்ளியை விட்டும் ஊரை விட்டும் சென்றிருந்தான்.

திங்கள் கிழமை பள்ளிக்கு வந்த ஸ்டீபன், செந்தில் பள்ளியை விட்டு சென்றதை அறிந்து, எதுவும் புரியாமல்  அவர்கள் மதிய  உண்ணும் பூவரச மரத்தடியில் அவர்களின் கட்டிப்பிடி வைத்திய நினைவுகளை நினைத்துக் கொண்டிருந்தான்.


இந்த சிறுகதையை முதன்முதலில் பிரான்சிஸ் ஓரினம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் படித்தார்

]]>
https://new2.orinam.net/ta/short-story-hug-treatment-francis/feed/ 0
கவிதை: ஆம், அவன் தான் https://new2.orinam.net/ta/poem-aam-avan-thaan-francis/ https://new2.orinam.net/ta/poem-aam-avan-thaan-francis/#respond Fri, 13 Sep 2019 01:24:48 +0000 https://new2.orinam.net/?p=14610 ஆம், அவன் தான்.

அவனா நீ என்ற கேள்விக்கு
ஆம் அவன் தான் என பதிலுரைத்தப் போதும்
அவனை அவனாக வாழ விட விரும்பவில்லை
அவனின் இரத்த உறவுகள்….

திருமணம் செய்து கொள் என கட்டாயப் படுத்துகின்றனர்,
அவனும் அதைத் தான் விரும்புகிறான்.

அவர்கள் அவனுக்கான இல்லாத அவளைத் தேடுகின்றனர்.
அவன் அவனுக்கான இருக்கும் அவனைத் தேடுகிறான்…

அவர்களின் தேடலுக்கும் அவனின் தேடலுக்கும் இடையில் அவன் மட்டும் சில முறைகள் மரணத்தை அடையும் போட்டியில் தோற்றிருந்தான் அல்லது தோற்கடிக்கப் பட்டிருந்தான்…

 


இந்த கவிதையை ஓரினாம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் பிரான்சிஸ் வாசித்தார்

]]>
https://new2.orinam.net/ta/poem-aam-avan-thaan-francis/feed/ 0
கவிதை: மழலைக்குரல் https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/ https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/#comments Fri, 01 Dec 2017 11:28:48 +0000 https://new2.orinam.net/ta/?p=13521 கள்ளம் கயமை தீண்டாத
சூழ்ச்சி சூனியம் அண்டாத..
தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..!
நண்பர்களின் சிரிப்புச் சத்தம்
குறும்புகள் கொஞ்சும் நித்தம்..
இதுவே எங்கள் ராஜாங்கக் கொள்கை..!
இதழுரியாச் சிறுமொட்டைத் தழுவும் பனித்திட்டைப் போல்…
குளிர்ந்த மணம் எங்களுடையது..!
ஆனால்…
இன்றோ…
பதற்றம் அப்பிய பார்வையும்..
விம்மல் கவ்விய வார்த்தையும்..
கூட்டம் நிறைந்த தனிமையும்..
எங்கள் அடையாளங்கள்.!
இது உங்களால்..!
ஆம் உங்களால்..!
தொட்டிலிறங்காப் பருவத்தில் எங்களைக் கட்டிலில் இட்டுச் சிதைத்த உங்களால்..!
பால் பேதம் அறியாப் பச்சிளங் கண்டு சபலம் தட்டிய உங்களால்..!
கண்டவுடன் துள்ளத் துடிக்கும் துவாரம்தான் உங்களுக்கும் பிறப்பிடம் என்று உணராத உங்களால்..!
கேளுங்கள்..!
எங்களுள் சிலர் ஊர் துறந்தோம்..!
இன்னும் சிலர் உலகத்தையும்..!
இருக்கும் சிலரோ உள்ளம் செத்த உடல்கள்..!
தினமிருட்டில் மிருகம் இழுத்துச் செல்லும் கனவுகளில் இருந்து இன்னும் நாங்கள் எழவில்லை..!
சொல்லத் தெரியாத அந்தப் பயத்தின் கறைகள் எங்கள் வாழ்வில் இருந்து இன்னும் வெளுக்கவில்லை..!
திருத்தியெழுதுங்கள்..!
“மனிதன் ஒரு சமூக விலங்கு” எனும் கூற்றை..!
அறவே இல்லை.. ஆடைதுறந்த விலங்கினத்தில்
“குழந்தைப் பாலியல் வன்கொடுமை ”

IMG_8080-673x1030


Image credit: http://dailytrojan.com/

]]>
https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/feed/ 1