Uncategorized – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Tue, 22 Aug 2023 06:17:46 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Uncategorized – ஓரினம் https://new2.orinam.net 32 32 திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்: an explainer for policy makers [தமிழ்] https://new2.orinam.net/ta/trans-men-explainer-tamil/ https://new2.orinam.net/ta/trans-men-explainer-tamil/#respond Tue, 22 Aug 2023 06:17:05 +0000 https://new2.orinam.net/?p=16395 [மொழிபெயர்ப்பு ஸ்வேதா ஸ்ரீ] English version is here.


திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்

திருநம்பிகள்/திருநர் அனுபவமுள்ள ஆண்கள் என்பது பெற்றோர்/மருத்துவ வல்லுநர்களால் பிறப்புறுப்பின் அடிப்படையில் பெண்ணாக நியமிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் ஆண்களாக அடையாளப் படுத்துபவர்கள்.

இந்திய அளவில், ‘திருநர்’ என்ற சொல், திருநங்கைகள், ஹிஜ்ரா, கின்னர் போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைச் சேர்ந்த திருநங்கைகளையே பெரும்பான்மையான சமூகத்தால் குறிக்கப்படுகிறது. இதன் விளைவாக, திருநம்பிகள் அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் திருநர்களாக பார்க்கப்படுவதில்லை, இதனால் எங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகிறது.

எங்களைப் போன்ற திருநம்பிகள் எங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் போது பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் பிறக்கும்போதே பெண் என்ற அடிப்படையிலான ஆணாதிக்கக் கட்டமைப்புகளிலிருந்து ஒடுக்குமுறைகளை சமாளிக்க வேண்டும், அதே போல் திருநம்பிகள் என்ற பாலின அடையாளத்தின் அடிப்படையில் நம் வாழ்நாள் முழுவதும் பாகுபாடு மற்றும் வன்முறைகளை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. இது எங்கள் நடமாட்டம், பொது இடங்களுக்கான அணுகல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சிவில் உரிமைகள் (குடும்ப வழி சொத்துரிமை , குழந்தை வளர்ப்பு உரிமைகள்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் எங்கள் பிறப்பு குடும்பங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் கூட வன்முறைகளையும் அதிகமாக்குகிறது.

குடும்பம் மற்றும் சமூகத்தினிடம் இருந்து ஆதரவின்மை மற்றும் வன்முறை காரணமாக நாங்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். மேலும், பொது இடங்கள், கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, சுகாதாரம் போன்றவற்றை அணுகுவதில் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறோம். இதனால், எங்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முறையற்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாழ்வதற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை

நமது இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 வது பிரிவுகள் சமத்துவத்திற்கான உரிமை, பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது, இது பாலின அடையாளத்தையும் உள்ளடக்கியது (NALSA தீர்ப்பு மேற்கோள் AIR 2014 SC 1863), சுய வெளிப்பாட்டு உரிமை, வாழ்வுரிமை போன்றவற்றை நமக்கு வழங்கியுள்ளன. நமது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நமது பாலின அடையாளத்தை அறிந்து கொள்ளும் தருணத்தில், பாதுகாப்பானயிடமாக இருக்க வேண்டிய குடும்பமே எங்களில் பலருக்கு வன்முறையின் முதல் இடமாக மாறுகிறது. பல நேரங்களில் குடும்பங்களால் திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறோம், மேலும் மனமாற்ற சிகிச்சை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறை, குடும்பங்கள் மற்றும் சமூகத்தால் குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த வன்முறையில் பலர் தப்பிப்பிழைப்பதில்லை: வன்முறையை சமாளிக்க முடியாமல் பல திருநம்பிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாறு உள்ளது. எனவே திருநம்பிகளாகிய நாங்கள் நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான உரிமைகளை அணுக முடிவதில்லை.

கல்வி உரிமை 

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் அல்லது கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE) நமது இந்திய அரசியலமைப்பின் 21a பிரிவின் கீழ் இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. எவ்வாறாயினும், பிறக்கும்போதே பெண்ணாக கருதப்பட்ட சமூக பாலின விதிமுறைகளுக்கு இணங்காத குழந்தைகள், வலுக்கட்டாயமாக ஆண்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள், அவர்களில் சிலர் 14 வயதுடையவர்கள்.

நாங்கள் குடும்பங்களின் கட்டாய திருமண முயற்சிகளை எதிர்த்தால் கொடுமை, கற்பழிப்பு, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் மனமாற்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறோம், இது எங்கள் கல்வி வாய்ப்பை தடுக்கிறது மேலும் பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளுகிறது.

கல்வி நிறுவனங்களுக்கு அணுகல் உள்ளவர்களும் கூட, தங்களின் பாலின வெளிப்பாடு மற்றும் அடையாளத்தின் காரணமாக வன்முறை, கொடுமை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த வன்முறைகள் கல்வியை இடைநிற்க செய்கிறது, மேலும் நமது கல்வி வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை தடுக்கிறது. மேலும் கிடைமட்ட இடஒதுக்கீடு இல்லாத காரணயத்தீனால் சாதியின் அடிப்படையில் திருநம்பிகளிடையே மேலும் ஒதுக்கப்பட்ட நபர்களின் கல்வி வாய்ப்பை தடுக்கிறது.

வேலை செய்யும் உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(2) படி குடிமக்களுக்கு பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டவோ அல்லது வேலை செய்யத் தகுதியற்றவராகவோ கருத முடியாது என்று கூறுகிறது, இது பாலின அடையாளத்தின் அடிப்படையிலும் கூறலாம். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 இன் படி, பாதுகாப்பான வேலை சூழலை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், ஆனால் உண்மையில் திருநம்பிகள் தங்கள் பாலின அடையாளத்தின் காரணமாக வேலையில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

பணியிடங்களில் பாரபட்சத்திற்கு எதிரான கொள்கைகள், திருநர் மக்கள் அடங்கிய உள் குழு, தீர்வுக் கொள்கைகள், ஒரு அறை கொண்ட பாலின நடுநிலை கழிவறை ஆகியவை இல்லை. மேலும் தொழிலாளர்களில் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பாலினம்-பிரிவுபடுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

மேலும், கல்வித் தகுதிகள் இல்லாததால், எங்களில் பலர் ஒழுங்கமைக்கப்படாத  வேளைகளில் நுழைகிறார்கள், அங்கு திருநம்பிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

காவல்துறை மற்றும் பிற ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புகளில், திருநம்பிகள் மற்றும் பிறப்பால் ஆண்கள் வெவ்வேறு உடலியல்/உடல் திறன்களைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளாமல் உடல் பரிசோதனைகளில் பிறப்பால் ஆண்களின் தரத்திற்கு எதிராக போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய தரநிலைகள் திருநம்பிகள் பொது வேலைவாய்ப்பை அணுகுவதற்கான நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை தடுக்கிறது.

ஆரோக்கியத்திற்கான உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு, அடிப்படை வாழ்க்கை உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. கட்டுரைகள் 38,39,42,43 மற்றும் 47 ஆகியவை மாநில அரசுக்கு  ஆரோக்கியத்திற்கான உரிமையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடமையை அளிக்கின்றன.

திருநம்பிகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள், தோல் மருத்துவர்கள் போன்ற பல சிறப்பு நிபுணர்கள் தேவை. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார (SRH) சேவைகளை அணுக வேண்டிய திருநம்பிகள், பால் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் ஆண்-அடையாளம் மற்றும் ஆண்மையை வெளிப்படுத்தும் நபருக்கு கருப்பை நீக்கம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். , மேலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும்/அல்லது மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம், கரு பாதுகாப்பு, மகப்பேறியல் அல்லது மருத்துவம் மூலம் கர்ப்பம் களையும் சேவைகள்  பற்றிய புரிதலும் இல்லை.

கூடுதல் பாரமாக, பாலின இணக்கமின்மை/டிஸ்ஃபோரியா கடிதம் வழங்க மருத்துவ நிபுணர்களால் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த உடல் பரிசோதனைகள் தேவையற்றவை, மேலும் நமது உடல் ரீதியாக தனியுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமையை மீறுகின்றன.

ஹார்மோன்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது சுகாதாரத்தை அணுகுவதில் மருத்துவ அலட்சியம், புறக்கணிப்பு, நிபுணத்துவமின்மை மற்றும் அறியாமை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதனால் பல திருநர் மக்கள் தங்கள் உயிரைக் கூட இழந்துள்ளனர்.

சமூக உறுப்பினர்கள், சேவை வழங்குநர்கள் (சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சட்டம்) மற்றும் கொள்கை வல்லுநர்கள், திருநம்பிகளுக்கான குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொள்கை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளில் பல்வேறு சமூகப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

]]>
https://new2.orinam.net/ta/trans-men-explainer-tamil/feed/ 0
திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/ https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/#respond Sat, 06 May 2023 05:14:14 +0000 https://new2.orinam.net/?p=16301 Click here for English

மே 3, 2023

பெறுநர்: தமிழ்நாடு அரசு

பொருள்: தமிழ்நாடு  மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை

இந்திய உச்ச நீதிமன்றத்தில் திருமண சம உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் தருணத்தில், கடந்த ஏப்ரல் 23. 2023 அன்று சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் LGBTQIA+ சமூக மக்களுக்காகச் செயல்படும் குழுக்களான கட்டியக்காரி, Queerbatore,  நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், திருநர் உணவுக் கூடம் (சென்னை), தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தனிநபர் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பின் அங்கமாவர். 2009-ஆம் ஆண்டு சென்னை வானவில் கூட்டமைப்பு என ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைசாரா அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவுகளை அரசின் பார்வைக்குச் சமர்பிக்கிறோம். திருமண சம உரிமை வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும்போது இதில் உள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  • அறிமுகம் 
  • திருமணமும் அதன் பலன்களும் – LGBTQIA+ சமூக மக்கள் தங்கள் திருமணத்திற்குச் சமூகப் பாதுகாப்பு கோருவது ஏன்? 
  • LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா? 
  • சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 
  • தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

அறிமுகம்: 

1.1 தமிழ்நாடு அரசு திருநர் மக்களைச் சட்டரீதியாக அங்கீகரித்ததுடன் அவர்களுக்கான நலவாரியத்தையும் 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. நால்சா (NALS) vs ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அருண் குமார் மற்றும் பிறர்  vs பதிவுத்துறை தலைவர் மற்றும் பிறர் வழக்கில் திருநங்கைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எஸ். சுஷ்மா  vs காவல்துறை ஆணையர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் LGBTQIA+ சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கியது. 

1.2 கொள்கை மாற்றம், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் LGBTQIA+ சமூக மக்களை அங்கீகரித்து, ஆதரித்து வரும் மாநிலம் என்ற முறையில் மற்றும் சுய மரியாதை/சீர்த்திருத்தத் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 1968-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மாநிலம் என்ற முறையில்,  திருமண சம உரிமை விவகாரத்திலும், பாலின பாகுபாடின்றி (ஆண், பெண், திருநர்) LGBTQIA+ சமூக மக்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு LGBTQIA+ மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

1.3 இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் (இனி முதல் “திருமண சம உரிமை மனுக்கள்” எனக் குறிப்பிடப்படும்) மீதான விசாரணையின்போது, சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) மற்றும் மத ரீதியான தனிப்பட்டச் சட்டங்களின் (Religious Personal Laws) கீழ் LGBTQIA+ மக்கள் திருமணம் செய்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

2. திருமணமும் அதன் பலன்களும்

2.1 திருமணம் என்பது பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வயது வந்த இருவருக்கு இடையேயான சமூக ஒன்றிணைவு ஆகும். திருமண சம உரிமை மனுக்களிலும் இது குறித்து மனுதாரர்களால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

2.2 திருமணத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பைத் தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏழைப் பெற்றோரின் பெண் பிள்ளைகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள், விதவைகளின் மகள்கள், சாதி மறுப்பு/கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

.2.3 திருமணம் என்பது LGBTQIA+ சமூகத்தினருக்குத் தேவையானதோ முக்கியமானதோ இல்லை, திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது இருக்கும் திருமணச் சட்ட கட்டமைப்பில் உள்ள தடைகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒன்றிய அரசின் வாதம் பின்வருமாறு – “அவர்கள் இந்த நாட்டில் வாழலாம், ஆனால் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக அமையாது.” சட்டத்தையும், LGBTQIA+ சமூக மக்களின் தேவைகளையும் ஒன்றிய அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் இருப்பின் காரணமாக தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர். தங்களுக்கான இடத்தை இந்தச் சமூகத்தில் அடைய LGBTQIA+ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான குடும்பங்களை சுயமாகத் தாங்களே தேர்ந்தெடுத்து (Chosen Family) தங்களுக்கான சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது திருமண உறவு அளிக்கும் உரிமைகளை வழங்குவது இல்லை. டி. வேலுச்சாமி vs டி. பச்சையம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவின் தன்மை “திருமணத்தை ஒத்து இருந்தால்” மட்டுமே பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005-இன் கீழ் 

2.4 திருமணத்தின் அடிப்படையில் கிடைக்கும் பல்வேறு பலன்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் தற்போதைய திருமணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயல்வது, எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை  ஏற்கெனவே இந்தியச் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ மக்களுக்கு வேண்டுமென்றே கிடைக்கவிடாமல் செய்வதற்குச் சமமானது.

2.5 சமூக அமைப்பு என்ற முறையில் திருமணமானது பல்வேறு பலன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சட்டக் கட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சாரச் சூழலில் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அந்தஸ்தானது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வேறு எந்த உறவின் மூலமும் கிடைக்காது. திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்த சிறிய பட்டியல் பின்வருமாறு (இவை மட்டுமே அல்ல):

திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு

  • திருமண பந்தத்தில் உள்ள இருவர் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடியும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. LGBTQIA+ மக்களின் உறவானது அவர்களது பெற்றோரால் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருவதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிக முக்கியமானது மற்றும் மிகுந்த பலனளிக்கக்கூடியது ஆகும்.
  • இந்தியாவில் தற்போது திருமண ஆகாத ஜோடிகளை விடத் திருமணமானவர்களுக்கு எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் LGBTQIA+ சமூக மக்கள், தங்களின் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்களை வீட்டில் இருந்து உடனடியாக எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் தங்குவதற்கான இடத்தைக் கண்டறிந்து பெற திருமண உரிமை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடுகளில் இணையரைப் பலனாளியாகச் சேர்த்தல் போன்ற பலன்கள் LGBTQIA+ சமூகத்தினருக்கும் கிடைக்கும்.
  • தங்கள் இணையரின் உடல் நலம் தொடர்பான முடிவுகளை எடுத்தல், அவசரக் காலங்களில் இணையரின் பிரதிநிதியாகச் செயல்படுதல் போன்ற உரிமைகள் LGBTQIA+ சமூக மக்களுக்குத் திருமணம் மூலம் கிடைக்கும். உயிர் காக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உறவினர்கள் அல்லது இணையரின் கையொப்ப ஒப்புதலை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த மிக முக்கியமான உரிமை கிடைப்பதில்லை. பெரும்பாலான LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களின் சார்பாக இந்த முடிவுகளை எடுக்க அவர்களின் இணையருக்குத் திருமண உரிமை உதவிகரமாக இருக்கும்.
  • திருமணமானது ஒரு தம்பதியின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதுடன், இணையரின் இறப்பின்போது அவரின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வாரிசுதாரர் சான்றைப் பெறுதல், உயிலைச் செயல்படுத்துதல், கருணையின் அடிப்படையில் பணி பெறுதல் போன்ற உரிமைகளையும் வழங்குகிறது. 

3. LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது உள்ள தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?  

3.1 இந்து திருமணச் சட்டத்தில் “மணமகள்”, “மணமகன்” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்புத் திருமணச் சட்டத்தில் “நபர்கள்”, “தரப்பினர்” ஆகிய வார்த்தைகளும், அதன் பிரகடனத்தில் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் “நபர்கள்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மணமகன், மணமகள், கணவன், மனைவி ஆகிய வார்த்தைகளுக்குப் பதிலாக நபர்கள், இணையர்கள் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாலினம் அடிப்படையிலான வார்த்தைகளினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.  

3.2 குடும்பத்திற்குள்ளான திருமணங்கள் குறித்த ஒன்றிய அரசின் கவலையைத் தீர்க்கும் பொருட்டு, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியலை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்க வேண்டும். 

3.3 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18-ஆக மாற்ற வேண்டும். LGBTQIA+ மக்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களை அவர்களின் பெற்றோர்கள் சிறிய வயதில் கண்டறிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிந்தவரை விரைவாகத் திருமணம் செய்து வைக்க முடியும் என்பதால் இந்த மாற்றம்  LGBTQIA+ மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

4. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 

4.1 தற்போதைய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் “அறிவிப்புக் காலம்” எனும் சட்டத்திற்கு முரணான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, திருமணம் செய்து கொள்பவர்கள் குறித்த விவரம் அவர்கள் மாவட்டத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் சிறைப்படுத்துதல், கட்டாய அடையாள மாற்றத்திற்கு உட்படுத்துதல், ஆணவக் கொலை போன்ற அபயாங்களை எதிர்கொள்ளும் LGBTQIA+ மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “மறுப்புத் தெரிவித்தல்” என்பது முறையாக வரையறுக்கப்படாததால் இந்த 30 நாள் அறிவிப்புக் காலத்தில் யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த அறிவிப்புக் காலம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.   

4.2 எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 சட்டத்திற்கு முரணானவை என அறிவிப்பதற்குத் தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 30 நாள் அறிவிப்புக் காலம் நடைமுறையில் இருக்கும் வரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் LGBTQIA+ சமூக மக்களுக்கு வழங்கப்படும் திருமணம் தொடர்பான உரிமைகளை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

5. தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

5.1 LGBTQIA+ மக்களுக்கான திருமண உரிமை அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக மேம்படுத்தும். ஆனால் தங்களுக்கான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை LGBTQIA+ மக்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட முடியும். பலமான குடும்ப மற்றும் சமூக உறவு பிணைப்பைக் கொண்ட ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு உடையவர்களைப் போல் அல்லாமல் LGBTQIA+ சமூக மக்கள் தாங்கள் பிறந்த குடும்பத்தையும் தங்களின் சொந்த ஊர்/சமூகத்தையும் விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர். 

5.2 குடும்ப அட்டை வழங்குதல், ஒரே முகவரியில் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பிறந்த குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உரிமை, சொத்துரிமை, சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான உரிமை, காப்பீடு பெறுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும் பிற குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்கும் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். 

5.3 LGBTQIA+ சமூக மக்கள் ஆபத்துக் காலங்களில் உதவிக்காக நாடிச் செல்லும் சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையெனில் சட்டம் அல்லது கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பலனளிக்காது. எனவே சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் 07-06-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, காவல் துறையினர், சிறைத் துறையினர், மாவட்ட மற்றும் மாநிலச் சட்டச் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடிமட்டத்தில் பணியாற்றும் சமூகத் தலைவர்கள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உதவியை வழங்குவோம் எனும் உறுதியை தமிழ்நாடு அரசிற்கு அளிக்கிறோம்.

நன்றி,

கட்டியக்காரி, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர் சமூகச் செயற்பாட்டாளர்கள்

Click here for English


Translation credits: Anish Anto
Image credits: Gokul

]]>
https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/feed/ 0
[ஓவியம்] PS – சொல்லப்படாத காதல் கதை https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/ https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/#respond Mon, 30 Jan 2023 10:31:11 +0000 https://new2.orinam.net/vandiyathevan-x-senthan-amuthan/ பொன்னியின் செல்வன் கதையை பெரும்பாலும் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் என நம்புகிறேன். இந்த கதையில் சிறு மாறுதல்கள் செய்து குயர் சமூகத்திற்கு ஏற்றவாறு நான் வரைந்திருக்கிரேன். இது முற்றிலும் ஒரு கற்பனையே.

.
வந்தியத்தேவன் 💜 சேந்தன் அமுதன்
.
“உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ என்னை தொட்டு திலகமிட்ட
அந்த அழகிய தருணம்தான்
நினைவிருக்கிறது என்னவனே”
.
என்று காதல் மலர வந்தியத்தேவனை நோக்கி கூறினான் சேந்தன் அமுதன் !!
.
ஹம், நான் படித்த பொன்னியின் செல்வனில் இதை நான் பார்த்ததே இல்லையே என்று யோசித்தேன்…
.
ஆனால் இது யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய காதல் கதை ஆயிற்றே!

]]>
https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/feed/ 0
[கதை] இரகசிய சிநேகிதனே https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/ https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/#respond Thu, 26 Jan 2023 16:50:55 +0000 https://new2.orinam.net/?p=16143 AI-generated line drawing of two men embracing each other while a woman looks on.எத்தணை நாள் தான் இந்த நாடகத்தை கொண்டு செல்வது? இதற்கு ஒரு முடிவு எழுதுவது எப்போது? கானல் நீராய் செல்லும் என் காதல் எப்போது உண்மையாகும்? என் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கும் என் மனைவிக்கு, இந்த உண்மைகள் தெரிய வந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? கேள்விகள் மட்டுமே என்னிடம் உள்ளது. பதில் கிடைக்க உதவ வேண்டியவனோ கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறான். தவறு தான் தன்பாலின ஈர்ப்பாளனான நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது தவறு தான். என்ன செய்வது அவனை சந்திக்கும் நாள் வரையிலும் என்னைப் பற்றிய என் பாலீர்ப்புப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், குழப்பத்தில் இருந்த நான் குடும்பத்தாரின் அழுத்தத்தினால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. நான் தான் தடுமாறி விட்டேன் அவனைப் பார்த்த அந்த நொடி. அவன் ஏன் நான் வேலைக்குச் சேர்ந்த அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர வேண்டும்? அதுவும் எனது திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு? ஏன் நானாக அவனது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அதே நாளில் அவனிடம் பேச வேண்டும்? கடந்த ஆறுமாத காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்.

ஒரு ஜீன் மாதத்தில் நான் அக்கௌண்டண்டாக* வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அதே நிறுவனத்தில் மனித வளத் துறையின் இளநிலை அலுவலராக பீட்டர் வேலைக்குச் சேர்ந்தான். திருப்பூரில் இருந்த நூற்றுக்கணக்கான மில்களில் அதுவும் ஒன்று. பீட்டர் என்னை விட 5 வயது சிறியவன் தான். ஆனால் 35 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தான். 30 வயதைக் கடந்த நானோ 25 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தேன். என்னவோ தெரியவில்லை பார்த்த அன்றே அவனிடமிருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அன்று மாலையே அவனது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவனுடன் பேசினேன். ஜீலை மாதத் தொடக்கத்தில் எனக்கு திருமணம் முடிவாகி இருந்ததால் அதற்கு அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலையில் பிசியாகி விட்டேன். திருமணத்திற்கு 15 நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டியதாகி இருந்தது. அதே வேளையில் நிறுவன கணக்கு வழக்கிலும் ஒரு முக்கிய வேலை இருந்தது. எனவே மேலாளரிடம் பேசி, பி.காம் முடித்துவிட்டு ஹெச். ஆர் சம்பந்தப்பட்ட படிப்பு படித்து இருந்த பீட்டரிடம் அந்த வேலையை கொடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தேன். இந்த ஏற்பாடு பீட்டருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவன் என்னிடம் பேசிய விதத்தில் இருந்து தெரிய வந்தது. எனக்கும் வேறு வழி இல்லை. அன்றிலிருந்து பீட்டர் என்னை வேண்டாதவனாகவே பார்க்க ஆரம்பித்தான்.

எனது திருமணத்திற்காக எடுத்த விடுப்புகள் முடிந்து வேலைக்கு திரும்பி வந்தப்பின்பும் பீட்டர் என்னிடம் வேண்டாவெறுப்பாகவே பேசிக்கொண்டிருந்தான். மதிய உணவு வேலையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வேளையில் புதிதாக திருமணம் ஆனவன் தான் பொழுது போக்குக்கான டார்கெட். அப்படி என்னை கேலி பேசி கிண்டலடிக்க ஆரம்பித்தவன் கொஞ்ச நாட்களில் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை எனது வாழ்க்கையை மாற்றிப் போட்ட நாள். அப்போது பீட்டர் திருப்பூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். அலுவலக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டரின் வீட்டில் சரக்கு அடித்தோம். சரக்கு அடித்தப் பின் மற்ற நண்பர்கள் அனைவரின் வீடுகளும் அருகே இருந்ததால் அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டனர். நான் பீட்டரின் வீட்டில் இரவு தங்கும் முடிவுடன் தான் வந்து இருந்தேன்.அந்த இரவு ஒரே கட்டிலை பகிர்ந்திருந்த நாங்கள், எங்கள் உடல்களையும் கலக்க விட்டோம். எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல், அதுவாகவே தோன்றிய காட்டுத்தீ போல எங்களது உடல்கள் தங்களை தழுவிக்கொண்டன. ஆம் அது காட்டுத்தீ தான். அந்த காட்டுத்தீயிற்கான முகாந்திரமோ தொடக்கமோ இன்று வரையிலும் எங்கள் இருவருக்கும் புலப்படவில்லை. மிகவும் இயல்பாய், இலகுவாய் பல வருடம் பழகிய நண்பர்கள் போல் எங்களது உடல்கள் காமம் பேசி பழகிக் கொண்டன அந்த இரவில். திருமணத்திற்குப் பின் மனைவியுடன் பலமுறை உடலுறவு வைத்திருந்தப் போது கிடைக்காத ஒரு முழுமை பீட்டரிடம் எனக்கு கிடைத்தது. அந்த போதை மயக்கத்தில் பீட்டர் சொல்லித் தான் எனக்கு தெரிய வந்தது பீட்டர் என்னை எந்த அளவுக்கு விரும்பி இருக்கிறான் என்று.

“விக்னேஷ், நான் உன்னை பார்த்த அன்றே எனக்கு உன்னை அவ்வளவு பிடித்து இருந்தது, ஆம் நான் ஒரு தன்பால் ஈர்ப்பாளன். ஆனால் அன்று மாலையே உனக்கு திருமணமாகப் போகும் செய்தி கிடைத்தவுடன் எனது மனதில் இருந்த ஆசையை முற்றிலுமாக நீக்க முயற்சி செய்தேன். அதனால் தான் உன்னிடம் சிடுசிடுப்பாக நடந்து கொண்டேன். இன்று இரவு நீ இங்கு தங்கப்போவதாய் சொன்னதும் அடக்கம் செய்திருந்த எனது ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. நமக்குள் நடந்த இந்த உறவு என்னை எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என உனக்கு தெரியாது. இப்போது எனக்கு வருத்தம் மட்டுமே உள்ளது. இந்த மது போதை தெளிந்ததும் நீ என்னை மறந்துவிடுவாய், உன் மனைவியிடம் சென்று விடுவாய். எனக்கும் இது புதிதில்லை” என்று சொன்ன பீட்டரிடம் நான் எப்படிச் சொல்வேன், இந்த இரவு தான் என்னை எனக்கு காட்டிய இரவு என்று. ஆம், பீட்டருடன் இருக்கும் இந்த இரவு தான் என்னைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை எனக்கு கொடுத்துள்ளது. ஆம் நானும் ஒரு தன்பால் ஈர்ப்பாளன் தான். இது நாள் வரையிலும் இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த ஆண் என்ற பிம்பத்தை, கர்வத்தை நம்பி என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். பீட்டர்தான் என்னை முழுமையாக்கி, என்னை எனக்கே காட்டியவன்.

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு குழப்பத்தின் நாட்களாக அமைந்தது. இந்த சமூக அமைப்பை எதிர்க்கும் துணிவு என்னிடம் சுத்தமாக இல்லை. என் மனைவியை விட நான் பீட்டரை அதிகம் நேசித்தாலும் எனது மனைவியையும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவள் மூலம் கிடைத்திருக்கும் இந்த சமூக அங்கீகாரம் அவள் என் மீது வைத்திருக்கும் காதலையும் மரியாதையையும் விட பெரியது. அதை இழந்து நிற்கும் தைரியம் இல்லை. அதே நேரத்தில் பீட்டரையும் என்னால் விட முடியாது. அவனை நான் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்.என் இரகசிய காதலன் அவன். என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் ஒரு வாரம் கழித்து பீட்டரிடம் எனது காதலைத் தெரிவித்தேன்.

சில சமயங்களில் நாம் எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும், நாம் செய்வது நெறிமுறை அளவில் தவறு என்று நமது மனசாட்சி தடுத்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, உணர்ச்சிகளின் போக்கில் சில செயல்களை செய்து விடுவோம். அத்தகைய ஒரு செயல் தான் நான் பீட்டரை காதலித்தது. பீட்டருக்கோ இருதலை கொள்ளி எறும்பின் நிலை. ஒரு பக்கம் நெறிமுறை/ ஒழுக்க மதிப்பீட்டு அளவில் தவறான ஒரு செயல். மறுபக்கம் தனிமையும் காதலின் ஏக்கமும் சூழ் வாழ்வில் ஒழுக்க மதிப்பீடுகளுக்கு முரணாக வந்துள்ள காதல் அழைப்பு.

கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவில் எங்களுக்குள் தர்க்க ரீதியான, சமூக ஒழுக்க அளவீடுகள் ரீதியான விவாதங்களே தொடர்ந்தன. இன்னொருவரின் இணையர் உன்னை எப்படி என் காதலனாக ஏற்றுக் கொள்வது? இது பீட்டரின் முறைப்பாடு. என்னுள் இருந்த காதல் உணர்வு உன் மூலமாக மட்டுமே தூண்டப் பட்டதற்கும் என்னை நானே கண்டடைந்ததும் உன் மூலமாக நடந்ததற்கு நான் என்னச் செய்வது? இது எனது தன்னிலை விளக்கம். உன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன் காதலை என்னிடம் சொல் – இது பீட்டர். திருமணம் எனும் சமூக அங்கீகாரத்தை இழக்க நான் தயாரில்லை – இது நான். இப்படி ஆரம்பித்த தர்க்கங்கள், இவ்வாறாக முடிவுப் பெற்றது.

மனைவியுடன் இருந்தாலும் நான் தான் உன் முதல் காதலெனச் சொல் – இது பீட்டர்.
மனைவியுடன் இருந்தாலும் நீயே என் உயிரானவன், என் காதலன்- இது நான்.

இந்த தர்க்கங்களின் முடிவில் உணர்ச்சிகளே வென்றது. ஏனெனில் எங்கள் இருவருக்கும் தெரியும், எங்களால் ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ்வது கடினம் என. எனவே எங்களின் இந்த இரகசிய உறவை தொடர்வோம் என்ற நிலைக்கு வந்தோம்.

நீங்கள் நினைப்பது சரிதான், எங்கள் வாழ்வில் நாங்கள் செய்த சிறுமைகள் இவை. எங்களுக்கும் அந்தந்த நேரத்து நியாயங்கள் இருந்தன. அடுத்த மூன்று மாதங்கள் எங்களின் காதல் தேனிலவு மாதங்களாக இருந்தன. திருப்பூரும் கோயம்புத்தூரும் எங்கள் காதலின் சாட்சியங்களை பதிவு செய்து வந்தன. வாழ்வில் முதல் காதலை சுவைக்கும் எங்கள் இருவருக்கும் அந்த மூன்று மாதங்கள் இன்பத்தின் மாதங்களாகத் தெரிந்தது.

அதே வருடம் டிசம்பர் மாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில், இந்த கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது போல் நான் என் மனதுடன் போராடிக் கொண்டிருந்த போது, எனது மனைவிக்கு எங்களின் இந்த இரகசிய உறவு நிலை பற்றி எனது கைப்பேசி உரையாடல்கள் மூலம் தெரிய வந்தது.

உறவினர்கள், பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து ஏற்பாடானது. மனைவியா, இரகசிய காதலனா என முடிவெடுக்க வேண்டிய தருணம். மனைவிக்காக இரகசிய காதலனை கைவிட்டு விட்டு மனைவியுடன் வாழ நினைத்தேன். என் காதலனும் எல்லா பழியையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு, என்னை நிராபராதியாக்கப் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் என் மனைவியும் உறவினர்களும் என் காதலனை தாக்கவும் செய்தனர். அப்போது அவன் என்னை பார்த்த ஒரு பார்வை, கூறிய ஒரு வார்த்தை என்னை கொடும் நெருப்பாய் சுட்டெரித்தது. என்னைக் காதலித்ததைத் தவிர வேறொரு தவறும் இழைக்காத என் காதலன் என்னை நிராபராதி கூண்டில் ஏற்றி விட்டு குற்றவாளியாய் நிற்கிறான். முன்னை விட்ட என் மனசாட்சி என்னை அதிகம் குத்தியது, கேள்வி கேட்டது.

அப்போது நான் ஒரு உரக்கக் கத்தி கூறிய ஒரு சொல், ஒரு செயல் அந்த இடத்தில் ஒரு மயான அமைதியைக் கொண்டு வந்து இருந்தது.

கண்ணீரை அடக்க முடியாமல், ஓடிச்சென்று என் காதலனின் இதழில் இதழ் பதித்தேன். நானும் குற்றவாளிதான், என் மனைவியை விவாகரத்து செய்கிறான் என்று நான் உரக்க கத்தியதில் பஞ்சாயத்தில் சடுதியில் ஒரு மயான அமைதி தோன்றியது. ஆம், திருமணமானவன் என சமூகம் கொடுக்கும் அங்கீகாரத்தை விட என் காதல் எனக்கு கொடுக்கும் காதலன் என்கிற அங்கீகாரமே பெரிது. விவாகரத்து ஒன்றே நான் இதுவரை ஏமாற்றிய என் மனைவிக்கு செய்யும் பரிகாரம். என் காதலுக்கு நான் செய்யும் நியாயம். இம்முறை என் மனசாட்சி உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் என்னைக் காப்பாற்றியது. என் மனைவிக்கு இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தான். ஆனால், அவளுக்கு கடைசி 3 மாதங்களாக நான் செய்த துரோகம் போதும். என்னாலும் பொய்யாய் இரட்டை வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என் காதலனின் ஒரு தீர்க்கமான பார்வை என் வாழ்வை இப்படி தலைகீழாக மாற்றும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பஞ்சாயத்து முடிந்த அந்த நாளில், என் இரகசிய சிநேகிதனாய் இருந்த பீட்டர் என் கைகளைக் கோர்த்துக்கொண்டு என் காதலனாக, நானும் அவனும் அந்த அறையை விட்டு வெளியேறினோம், எதிர்வரும் இடர்களையும் பிரச்சனைகளையும் ஒன்றாக சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.


The image was generated using AI.

]]>
https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/feed/ 0
பாலியல் கல்வி: நீலம் சோசியல் முன்னெடுப்பு https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/ https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/#respond Wed, 14 Jul 2021 08:05:00 +0000 https://new2.orinam.net/?p=15669 நீலம் வெப் சோசியல் (Neelam web social) என்னும் YouTube அலைவரிசை, இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டு வருகிறது. சமூகம் மற்றும் அரசியல் சூழல் சார்ந்த பல உரையாடல்கள் மற்றும் நேர்கானல்களை, இளைஞர்களின் மொழியில் பல்சுவையாக தயாரித்தளிக்கிறது இந்த தளம்.

அதன் ஒரு பகுதியாக, பாலியல் கல்வி சார்ந்த கலகலப்பான ஒரு தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பால், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த அடிப்படை புரிதல்களை சுவையாக தொகுத்து வழங்கியுள்ளனர். ஜூலை 2 2021 மற்றும் ஜூலை 9 2021 அன்று இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஓரினத்தின் ஆர்வலர், சதீஸ் பங்கெடுத்து பாலியல் சார்ந்த உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

நீலம் நிறவனத்தின் இந்த முன்னெடுப்பை ஓரினம் வெகுவாக பாராட்டுகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் மேலும் பல வந்திடவும், அதற்கு ஓரினம் துணை நிற்கும் எனவும் பதிகிறோம். கானொளிகளின் இணைப்பு கீழே.

]]>
https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/feed/ 0
மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு https://new2.orinam.net/ta/gracebanu-to-pm-modi-tamil/ https://new2.orinam.net/ta/gracebanu-to-pm-modi-tamil/#respond Wed, 31 Aug 2016 03:33:51 +0000 https://new2.orinam.net/ta/?p=12700 மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு,

உலகில் இயங்கும் ஜனநாயக தேசங்கள் எதுவும் இதுவரை மாற்றுப்பாலினத்தோரின் உடல் இயங்கியலையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் களைய பொறுப்பற்று கிடக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிந் துவக்கத்தில்,மாற்றுப்பாலினத்தோராகிய எங்களின் உடல்,வாழ்வியல் அனைத்தையும் கணக்கில் கொண்டு ,எங்கெளுக்கென்று ஒரு தனி மசோதாவை தங்கள் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் மகிழ்வுறுகிறேன்.

    அதே நேரத்தில் தங்கள் அரசு இயற்றிட இருக்கிற இந்த மசோதாவோடு தொடர்புடைய ,அதற்கு அடிப்படையாக அமைந்த மூன்று விஷயங்களுடன் மாற்றுபாலினத்தோர் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 யை பொருத்திப்பார்க்கையில் எங்கள் பாலினம் மிக நுண்ணிய முறையில் கொடூரமாக ஏமாற்றப்பட்டதாகவே நான் உணர்கிறேன்,

எங்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென 2013ல் தங்கள் உரிமைகளை வீரியத்தோடு இத்தேசம் முழுவதும் எங்கள் பாலினம் முழங்கியது .தமிழகத்தில் நானும் கூட எம் பாலினத்தினவர்களின் உரிமைகளுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறேன் ,பலமுறை கைதுசெய்யப்பட்டும் இருக்கிறேன் .இரண்டாவதாக எங்கள் சமூகம் அரசிடம் முறையிட்டு அடக்குமுறைக்கு உள்ளாவதை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடினோம் மக்கள் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வலியை உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டு வேலைவாய்ப்பில் ,கல்வியில் முன்னுரிமை உட்பட எங்கள் விடுதலைக்கான சில தீர்வுகளை தீர்ப்பாக 2014 ஏப்ரல் 15 அன்று உரத்து கூறியது.

மூன்றாவதாக நீதிமன்றத்தின் அக்குரலை முழுமையாக உள்வாங்கிய தமிழகத்தைச்சேர்ந்த திரு. திருச்சி சிவா அவர்கள் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உட்பட பல்வேறு நல் அம்சங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மாற்றுபாலினத்தோருக்கான தனிநபர் மசோதாவை முன் வைத்தார்.தேசத்தின் முழுமையிலிருந்தும் அங்கு குழுமியிருக்கும் அனைத்து பிரதிநிதிகளால் அம்மசோதா எவ்வித எதிர்ப்பும் இன்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேற்கூறிய இந்த மூன்று விஷயங்களை முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல மறைத்து விட்டு தங்கள் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மூலமாக மாற்றுப்பாலினத்தோர்(உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 யை மக்களவையில் தாக்கல் செய்துள்ளீர்கள்.

தங்கள் அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவை முழுமையாக படித்தேன் அதில் எங்கள் சமூகத்தின் இடஒதுக்கீடு கோதிக்கையும் ,உச்சநீதிமன்றத்தின் அக்கறைமிக்க தீர்ப்பும் ,திரு.திருச்சி சிவா அவர்களின் நல்லெண்ண உழைப்பும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுறுப்பதை கண்டு ம வெதும்பினேன்.அந்த மசோதாவில் நாங்கள் மானுடமாக மட்டுமே அங்கிகரிக்கப்பட்டுள்ளதை கண்டு நகைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை .காரணம் உலகில் ஆதிக்கங்களை எதிர்த்து அதிகமாக ரத்தம் சிந்தியதேசம் நம்தேசமாகதான் இருக்கமுடியும்.அத்தகைய ரத்தத்தில் பூத்த “ஜனநாயத்தில்” நாங்கள் மானுடமாக அங்கீகரிக்கப்படவே 69 ஆண்டுகாலம் ஆயிற்று எனில் இன்னும் எங்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை வென்றிட இன்னும் எத்துனை ஆண்டுகள் ஆகிடுமோ?? அந்த சிந்தனையின் போது என் மன சோகம் சிறு புன்னகையாக முகத்தில் வெளிப்படும் .இந்தப்சிறு சோக புன்னகையை உங்கள் ஆசிற்கு பரிசளிக்கிறேன்..

இந்த மசோதாவை படித்த முடித்தவுடன் அரசியலமைப்பின் தந்தை அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு முறை கூறிய வார்த்தைகள் என்னுள் எழுந்தது’கால் உடைந்த குதிரையையும் ஆரோக்கியமான குதிரையையும் ஒன்றாக பந்தயத்தில் கலந்துகொள்ள செய்வது கொடும் அநீதி’என்பார் அவர்.அவரின் வார்த்தைகளையே நான் உங்களுக்கு பரிசளிக்கிறேன். இந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக…

இறுதியாக…

விலங்குகளாக திரியும் எங்களை 21ஆம் நூற்றாண்டின்  காலைப்பொழுதில் இயங்கும் உங்கள் ‘ஜனநாயக அரசு’ மனிதர்களாக அங்கீகரித்ததற்கு நன்றி …

மேலும் நாங்கள் கண்ணிய  மனிதர்களாகவும் இயங்கிட கல்வி,வேலைவாய்ப்பு,அரசியலில் எங்களுக்கான இடம் பங்கிடப்பட்டால் ,எம் சமூகத்தின் சோகமற்ற முழு புன்னகையை உங்கள் அரசிற்கு பரிசளிக்க நாங்கள் கடமை ப்பட்டுள்ளோம்.எங்களை புன்னகை சிந்த அனுமதியுங்கள் !!மீண்டும் முழக்கமிட வைக்காதீர்கள் .

 நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,

கிரேஸ் பானு

Click here for English

]]>
https://new2.orinam.net/ta/gracebanu-to-pm-modi-tamil/feed/ 0
அறிவிப்பு https://new2.orinam.net/ta/announcement/ https://new2.orinam.net/ta/announcement/#respond Sun, 29 Mar 2015 18:31:40 +0000 https://new2.orinam.net/?p=11247 மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? கொன்ஞம் பேசனும் வாங்க
பாலின-பாலீர்ப்பு அடையாள சொற்பொருள்கள் ]]>
சென்னை வானவில்-சுயமரியாதை மாதத்தில் நடக்கவிருக்கும் <a href=”https://new2.orinam.net/events/upcoming-events//”>நிகழ்ச்சிகள்</a>

<hr />

மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? கொன்ஞம் பேசனும் வாங்க

2015 சென்னை வானவில்-சுயமரியாதை விழாவின் இரண்டாவது ஒருங்கினைப்பு கூட்டம் சகோதரன் யூனிட் 2 அலுவலகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி, சனிகிழமை காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெர இருக்கிரது மேலும்…

<hr />

2015 சென்னை வானவில்-சுயமரியாதை விழாவின் முதல் ஒருங்கினைப்பு கூட்டம் சகோதரன் அலுவலகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி, சனிகிழமை மதியம் 3.30 மணிக்கு நடைபெர இருக்கிரது மேலும்…
ரீல் டிசயர்ஸ்: சென்னை சர்வதேச பாலின-பாலீர்ப்பு திரைப்பட விழா 2015இல் உங்கள் திரைப்படங்களை சமர்ப்பியுங்கள் #CIQFF2015

படிவத்தை தமிழில் சமர்ப்பிக்க


தற்கொலை எண்ணமா? நீங்கள் தமிழகத்தில் இருந்தால், ஸ்னேஹா உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் (+91)044 22670050. நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அமைப்புகளிக்கு இங்கே சொடுக்கவும்.

]]>
https://new2.orinam.net/ta/announcement/feed/ 0
காத்திருப்பு https://new2.orinam.net/ta/kaatthirpu-poem/ https://new2.orinam.net/ta/kaatthirpu-poem/#respond Fri, 06 Mar 2015 11:28:44 +0000 https://new2.orinam.net/?p=11079 உணவையும் குருதியையும்
அன்புடன் ஊட்டி,
பல்லக்கு போலே
நாட்கள் பல
இடங்கள் சுற்றி,
சொற்கள் தீர்ந்து
மௌனத்தைப் பேருவகையுடன் பேசி,
தன் அருகாமையின்
வெம்மையுடனும் வாசத்துடனும்
ஏந்தியிருந்த தாய்
குழந்தையை நழுவ விடுகிறாள்.
வலிக்கட்டும் என்றா?
பிடிக்கவில்லை என்றா?
எதிர்காலத்தில் அறியநேரும் பிரிவுகளுக்கு
தொடக்கமாக இருக்கட்டும் என்றா?
மற்றொரு பொருத்தமான தாய்
ஏந்திக்கொள்வாள் என்றா?

குழந்தை பிடிவாதமாக
மண்ணில் விழவேயில்லை.
முடிவிலா பேரிருள் குழியில்
தாயை நோக்கி கைநீட்டியபடி
பயணித்துக்கொண்டிருக்கிறது.

 


இக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது. இதிலுள்ள அம்மாவும் குழந்தையும் அந்நபர்களின் குறியீடுகள். இக்கவிதை வாசகர்களிடம் பின்வரும் கேள்விகளைப் பற்றி யோசிக்கக் கோருகிறது: எதற்காக ஒருவர் ஓர் உறவை முறிக்கவேண்டும்? எதற்காக ஒருவர் தொலைந்த உறவு மறுபடியும் நிகழ முடிவில்லாமல் காத்திருக்கவேண்டும்?

]]>
https://new2.orinam.net/ta/kaatthirpu-poem/feed/ 0
கடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள் https://new2.orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/ https://new2.orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/#respond Fri, 12 Dec 2014 12:25:00 +0000 https://new2.orinam.net/?p=10883 கடந்த வருடம் டிசம்பர் மாதம் பதினோராம் நாள் அன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சென்னையிலும், தமிழகத்திலும் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

11 டிசம்பர் 2013

உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினம்.

இதைக் கண்டித்து சென்னை செய்தியாளர் சங்கம் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிரிவு 377 பற்றிய அனைத்து தகவல்களுக்கும் காப்பகமாக திகழ நிறுவப்பட்ட http://377.orinam.net/ என்னும் இணையதளம் இந்த வழக்கு சார்ந்த உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஊடக வெளியீடுகள், சட்டபூர்வமான ஆலோசனைகள், சமுதாயத்திலிருந்து வந்துக்கொண்டிருந்த பகுப்பாய்வுகள் போன்றவற்றை ஒன்று திரட்ட தொடங்கியது.

15 டிசம்பர் 2013

இந்த நாள் ‘Global Day of Rage’, அதாவது ‘உலகந்தழுவிய வெஞ்சின தினம்’ஆக அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த நாளில் சென்னை செய்தியாளர் சங்கத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

21 டிசம்பர் 2013

SIAAP/Pehchan நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் தமிழக மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள பாலியல்/பாலின சிறுபான்மயினருடனும், பாலியல்/பாலின சிறுபான்மையினருக்காக பணிபுரியும் அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை பற்றி கலந்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் விளைவாக இந்த நாளில் தமிழ்நாடு வானவில் கூட்டணி உருவானது.

22 டிசம்பர் 2013

சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் SAATHII அலுவலகத்தில் கூடி தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான strategy (யுக்திகள்) திட்டமிடல் ஆலோசனை சந்திப்பை skype மூலமாக கண்டனர். பின்னர் தங்கள் சிந்தனைகளை வானவில் உறுப்பினர்கள் இடையே பகிர்ந்துகொண்டனர்.

1 ஜனவரி 2014

தீர்ப்பு வந்த ஒரு மாத நிறைவை முன்னிட்டு செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் ‘ஒர்பாலீர்ப்பை எதிர்க்கும் கிறுத்துவர்கள்’ (‘Christians against Homosexuality’; CAH-) என்று சென்னையில் புதிதாக தோன்றியிருக்கும் குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் சென்னை வானவில் கூட்டணி ஒன்று கூடி சந்தித்து ஆலோசித்து.

4 ஜனவரி 2014

சென்னை வானவில் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்களும், கிறுத்துவ மதத்தைச் சார்ந்த பாலியல்/பாலின சிறுபான்மையினரும் இணைந்து   மத வெறியால் பரப்பப்படும் வெறுப்பை எதிர்த்து போராட ‘ஒர்பாலீர்ப்பாலர்களை வெறுக்கும் நபர்களுக்கு எதிரான கிறுத்துவர்கள்’ (‘Christians against Homophobia’; CAH+) என்ற குழுவை நிறுவினர்.

5 ஜனவரி 2014

CAH+ குழு சகோதரன் (Sahodaran) அலுவலகத்தில் அன்று காலை CAH- குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் விளைவாக ‘Christians against Homophobia’ என்ற ஒரு மின்னஞ்சல் பட்டியல் தொடங்கப்பட்டது. இந்த பட்டியல் பல்வேறு கிறுத்துவ மத போதகர்களை இணைத்து அவர்களது சமூகங்களை பாலியல்/பாலின  சிறுபான்மையினரையும் கொண்டு செயல்படும் சமூகங்களாக ஆக்க முயன்று வருகிறது.

Catalyst என்கிற சென்னையை சார்ந்த மாணவர் கூட்டணி பாலியல்/பாலின சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி பிரிவு 377 ஏன் மாற்றியமைக்கப்படவேண்டும்  என்ற கேள்வியை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது.

9 ஜனவரி 2014

சென்னையைச் சார்ந்த ஓரினம்/ Orinam என்ற கூட்டத்தின் துணையோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுதல் என்னும் தேசிய அளவிலான ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக திரண்டுவந்த கடிதங்கள் என்ற இணையதளத்தில் காப்பகப்படுத்தபட்டுள்ளது.

11 ஜனவரி 2014

தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் முடிந்ததை முன்னிட்டு இந்த நாளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (Tamil Nadu Progressive Writers’ Association), Save the Tamils என்னும் ஈழ தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் குழு மற்றும் பல மாணவர் குழுக்கள் பங்கேற்றன.

ஜனவரி 2014

11.12.13 தீர்ப்பை மறுபடி பரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்படவேண்டிய மனுவுடன் சேர்த்து சமர்ப்பிக்க affidavits (அப்பிடவிட்) எனப்படும் சத்திய கடிதாசிகள் சென்னையிலிருந்து தொகுத்து அனுப்பிவைக்க பட்டன.

23 பெப்ரவரி 2014

Nirmukta (Chennai FreeThinkers) எனப்படும் மதச்சார்பற்ற ஒரு மனிதநேய குழு பாலியல்/பாலின சிறுபான்மையினருக்கான உரிமைகள் பற்றியும், தவறான அபிப்ராயங்களுக்கு ஆளாகப்படும் நிலை பற்றியும், இவைகளை தவிர்க்க தேவையான சிந்தனைகளை பற்றியும் கலந்து உரையாட ஒரு பொது நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாலியல்/பாலின சிறுபான்மையினரை ஒன்று திரட்டி 377 ஏன் சீரமைக்க படவேண்டும் என்பதை பற்றி ஆலோசிக்கும் வாய்ப்பாக இருந்தது.

28 மார்ச் 2014

பிரிவு 377 பற்றி மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஒன்றை SIAAP/Pehchan ‘377ஐ எதிர்த்து 207’ (‘207 against 377’) என்ற குழுவின் மூலமாக நடத்தியது.

ஏப்ரல் – மே – ஜூன் – ஜூலை 2014

NALSA வழக்கில் திருநங்கை மற்றும் திருநம்பியினர் உரிமைகளை உறுதிப்படுத்தி வந்திருந்த தீர்ப்பை பற்றி பல கலந்துரையாடல்கள் இந்த இரு மாதங்களில் நடைபெற்றன. இந்த சந்திப்புகளில் NALSA தீர்ப்பும் 11.12.13 தீர்ப்பும் எந்தெந்த வகைகளில் முரண்பட்டிருக்கின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டது.

சென்னை வானவில் சுயமரியாதை மாதம் ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த மாதத்தில் பல்வேறு கலை நிகழ்சிகளும், pride walk எனப்படும் சுயமரியாதை நடை பவனியும் பிரிவு 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்பட்டன.

Reel Desires எனப்படும் பாலியல்/பாலின சிறுபான்மையினரின் அனுபவங்களை மையப்படுத்திய சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 24–26 ஜூலை நாட்களில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பல திரைப்படங்களும் கலந்துரையாடலும் பிரிவு 377ஐ பற்றி அமைக்கபட்டிருந்தது.

13 செப்டம்பர் 2014

மாநில அளவில் சட்டபூர்வமாக பிரிவு 377இல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தை நிறங்கள் (Nirangal) என்ற அமைப்பு தமிழ்நாடு வானவில் கூட்டணியின் துணையோடு நடத்தியது,

8 டிசம்பர் 2014

‘377ஐ எதிர்த்து 207’ என்ற குழுவின் மூலமாக பொதுமக்களுக்கான open hearing எனப்படும் பிரச்சனைகளை கேட்கும் நிகழ்ச்சியை SIAAP/Pehchan நடத்தியது. இதில் சென்னையை சார்ந்த பெண்கள் வழக்கறிஞர் சங்கம் இந்த இயக்கத்திற்காக ஆதரவும், மாநில அளவில் 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்காக தங்கள் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.

 


This timeline was compiled by volunteers from Orinam and Nirangal. If we have inadvertantly left out any events, please let us know and we will add them.

rainbow fist image

]]>
https://new2.orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/feed/ 0
கவிதை: உண்மையை காட்டினேன் நூறு பேருக்கு https://new2.orinam.net/ta/unmaiyai-kaattinen/ https://new2.orinam.net/ta/unmaiyai-kaattinen/#respond Wed, 30 Jul 2014 01:59:14 +0000 https://new2.orinam.net/?p=10534 Transcreation by Isaiswasan based on ‘One hundred people hear the truth’ by Guhan M.


image of person coming out of the closet

உண்மையை காட்டினேன் நூறு பேருக்கு 

நெஞ்சின் பாரம் தீர
நுறு பேருக்கு உண்மைதனை
உரைத்தல் தவிர வழியில்லை வேற

இருபத்தேழு ஆண்டு
முகமூடி அணிந்து கொண்டு
பொய்யில் மட்டுமே தோய்ந்து
பிறர்க் கெனவே வாழ்ந்தேன்

சொல்வதா? வேண்டாமா?
சொன்ன நண்பனிடம் யோசனை கேட்டேன்
அய்யய்யோ வேண்டாம் அது மிகக் கொடுமை என்றான்
பொய்யை சுமப்பதை விட, பழி வரினும் ஏற்கத் துணிந்தேன்

முதலாம் நபர் ஒரு நெடுங்கால நண்பன்
என்னை முழுதாய் அறிந்ததாய் நினைப்பு
அவனை திக்குமுக்காடச் செய்தது, சொன்ன உண்மையின் வியப்பு
“நெளிவில்லை, சுளிவில்லை, உன் ஆண்மைக்கொரு பங்கமில்லை
ஒளிந்தேன்னை ஏமாற்ற இதுவும் ஒரு விளையட்டா?” என்றான்
என்னை முழுதாய் அறிந்தவன்

இரண்டாம் நபரும் அவனேதான்
நம்ப மறுத்த காரணத்தால் மறுபடியும் முனைந்தேன்
மீண்டும் நம்ப மறுத்தான்
நம்பினானோ அன்றோ அறியேன்
நண்பன் பழைய நண்பனாகவே இருந்தான்

முதல் படி ஏறி விட்டதாச்சு
சற்றே சுமை இறக்கிய சிறு மூச்சு
நூற்றில் ஒன்று போச்சு
மிச்சம் சொல்லி விட்டால் சுதந்திரப் பேரு மூச்சு

உற்றோரை விடப் பெற்றோரிடம் சொல்வதே மிகக் கடினம்
சற்றே உரைக்க வாய் திறந்தால் வெற்றிடம் ஆகிடும் உள்ளம்
மற்றோர் மொழி நாடி மடல் எழுத முடிவெடுத்தேன்

செல்லத் தாய் தந்தை சொல்லும் மொழி தமிழ், அதில்
தெள்ள எழுதுகையில் மென்னியை கனத்தது பேனா
மெல்ல துளிர் விட்டு, பின்னால் மேனி கருத்து உதிரும் இலையை
நல்ல விவரிக்கும் சொற்கள் பதினெட்டு, அப்படி
வெள்ள அருவியாய் பொழியும் தமிழுக்கு
எந்தன் நிலை உரைக்க ஒரு வார்த்தை இல்லை அதற்கு

முடித்த கடிதத்தைக் கொடுத்து விட்டு மாய்ந்தேன்
அடுத்த பத்து நாட்கள் எங்கோ பொய் விட்டுத் திரும்பினேன்
படுத்த பாட்டிலெல்லாம் பெற்றோர் பக்கம் நின்று, பாடம்
கொடுத்துப் புரிய வைத்திருந்தான் கூடப் பிறந்தத் தோழன்

சொற்கள் தேடிச் சோர்ந்து போன எனக்கு
சொல்ல விரும்பிய செய்தியேல்லாம் தேவையற்றுப் போனது
“ஒன்றும் விளக்க வேண்டாம் எங்களுக்கு
என்றும் உன்னால் பெருமை குடும்பத்திற்கு
நன்றாய்ச் செய்து வைக்க இளையவனின் மணமிருக்கு” – இது பெற்றோர் வாக்கு

சொல்லாமலே புரிந்து கொண்டார், இதை விடச் சுலபமென்ன
கருமேகம் முழுதாய்க் கலைந்திடவே
தொண்ணூறு விண்மீன் தேடிப் புறப்பட்டேன்
என்னை பற்றிய உண்மை சொல்ல

வாரம் ஒருவரிடம் கூறினேன், பின்
நாளுக்கு ஒருவரிடம் கூறினேன், பின்
மணிக்கு ஒருவரிடம் கூறினேன்
அறிந்தவரிட மெல்லாம் கூறினேன்

சிலர் மணமார வாழ்த்தினார்
சிலர் புரியாது விழித்தார்
சிலர் நோயென நொந்தார்
சிலர் ஓடியே போனார்

ஓடியவரைக் கண்டு வாடாமல்
நாடிச் சென்று மேலும் சொன்னேன்
ஓடியதில் சிலர் மீண்டும் வந்தார்

இருபத்தேழு ஆண்டு அணிந்த முகமூடியைக்
கிழித்தேரிந்துக் காட்டினேன் நூறு பேருக்கு, உண்மைச்
சிரிதேழுந்துத் தந்ததெனக்குச் சுதந்திரச் சிறகு

 

]]>
https://new2.orinam.net/ta/unmaiyai-kaattinen/feed/ 0