கதை – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Thu, 26 Jan 2023 16:54:39 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png கதை – ஓரினம் https://new2.orinam.net 32 32 [கதை] இரகசிய சிநேகிதனே https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/ https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/#respond Thu, 26 Jan 2023 16:50:55 +0000 https://new2.orinam.net/?p=16143 AI-generated line drawing of two men embracing each other while a woman looks on.எத்தணை நாள் தான் இந்த நாடகத்தை கொண்டு செல்வது? இதற்கு ஒரு முடிவு எழுதுவது எப்போது? கானல் நீராய் செல்லும் என் காதல் எப்போது உண்மையாகும்? என் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கும் என் மனைவிக்கு, இந்த உண்மைகள் தெரிய வந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? கேள்விகள் மட்டுமே என்னிடம் உள்ளது. பதில் கிடைக்க உதவ வேண்டியவனோ கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறான். தவறு தான் தன்பாலின ஈர்ப்பாளனான நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது தவறு தான். என்ன செய்வது அவனை சந்திக்கும் நாள் வரையிலும் என்னைப் பற்றிய என் பாலீர்ப்புப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், குழப்பத்தில் இருந்த நான் குடும்பத்தாரின் அழுத்தத்தினால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. நான் தான் தடுமாறி விட்டேன் அவனைப் பார்த்த அந்த நொடி. அவன் ஏன் நான் வேலைக்குச் சேர்ந்த அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர வேண்டும்? அதுவும் எனது திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு? ஏன் நானாக அவனது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அதே நாளில் அவனிடம் பேச வேண்டும்? கடந்த ஆறுமாத காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்.

ஒரு ஜீன் மாதத்தில் நான் அக்கௌண்டண்டாக* வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அதே நிறுவனத்தில் மனித வளத் துறையின் இளநிலை அலுவலராக பீட்டர் வேலைக்குச் சேர்ந்தான். திருப்பூரில் இருந்த நூற்றுக்கணக்கான மில்களில் அதுவும் ஒன்று. பீட்டர் என்னை விட 5 வயது சிறியவன் தான். ஆனால் 35 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தான். 30 வயதைக் கடந்த நானோ 25 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தேன். என்னவோ தெரியவில்லை பார்த்த அன்றே அவனிடமிருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அன்று மாலையே அவனது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவனுடன் பேசினேன். ஜீலை மாதத் தொடக்கத்தில் எனக்கு திருமணம் முடிவாகி இருந்ததால் அதற்கு அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலையில் பிசியாகி விட்டேன். திருமணத்திற்கு 15 நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டியதாகி இருந்தது. அதே வேளையில் நிறுவன கணக்கு வழக்கிலும் ஒரு முக்கிய வேலை இருந்தது. எனவே மேலாளரிடம் பேசி, பி.காம் முடித்துவிட்டு ஹெச். ஆர் சம்பந்தப்பட்ட படிப்பு படித்து இருந்த பீட்டரிடம் அந்த வேலையை கொடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தேன். இந்த ஏற்பாடு பீட்டருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவன் என்னிடம் பேசிய விதத்தில் இருந்து தெரிய வந்தது. எனக்கும் வேறு வழி இல்லை. அன்றிலிருந்து பீட்டர் என்னை வேண்டாதவனாகவே பார்க்க ஆரம்பித்தான்.

எனது திருமணத்திற்காக எடுத்த விடுப்புகள் முடிந்து வேலைக்கு திரும்பி வந்தப்பின்பும் பீட்டர் என்னிடம் வேண்டாவெறுப்பாகவே பேசிக்கொண்டிருந்தான். மதிய உணவு வேலையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வேளையில் புதிதாக திருமணம் ஆனவன் தான் பொழுது போக்குக்கான டார்கெட். அப்படி என்னை கேலி பேசி கிண்டலடிக்க ஆரம்பித்தவன் கொஞ்ச நாட்களில் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை எனது வாழ்க்கையை மாற்றிப் போட்ட நாள். அப்போது பீட்டர் திருப்பூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். அலுவலக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டரின் வீட்டில் சரக்கு அடித்தோம். சரக்கு அடித்தப் பின் மற்ற நண்பர்கள் அனைவரின் வீடுகளும் அருகே இருந்ததால் அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டனர். நான் பீட்டரின் வீட்டில் இரவு தங்கும் முடிவுடன் தான் வந்து இருந்தேன்.அந்த இரவு ஒரே கட்டிலை பகிர்ந்திருந்த நாங்கள், எங்கள் உடல்களையும் கலக்க விட்டோம். எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல், அதுவாகவே தோன்றிய காட்டுத்தீ போல எங்களது உடல்கள் தங்களை தழுவிக்கொண்டன. ஆம் அது காட்டுத்தீ தான். அந்த காட்டுத்தீயிற்கான முகாந்திரமோ தொடக்கமோ இன்று வரையிலும் எங்கள் இருவருக்கும் புலப்படவில்லை. மிகவும் இயல்பாய், இலகுவாய் பல வருடம் பழகிய நண்பர்கள் போல் எங்களது உடல்கள் காமம் பேசி பழகிக் கொண்டன அந்த இரவில். திருமணத்திற்குப் பின் மனைவியுடன் பலமுறை உடலுறவு வைத்திருந்தப் போது கிடைக்காத ஒரு முழுமை பீட்டரிடம் எனக்கு கிடைத்தது. அந்த போதை மயக்கத்தில் பீட்டர் சொல்லித் தான் எனக்கு தெரிய வந்தது பீட்டர் என்னை எந்த அளவுக்கு விரும்பி இருக்கிறான் என்று.

“விக்னேஷ், நான் உன்னை பார்த்த அன்றே எனக்கு உன்னை அவ்வளவு பிடித்து இருந்தது, ஆம் நான் ஒரு தன்பால் ஈர்ப்பாளன். ஆனால் அன்று மாலையே உனக்கு திருமணமாகப் போகும் செய்தி கிடைத்தவுடன் எனது மனதில் இருந்த ஆசையை முற்றிலுமாக நீக்க முயற்சி செய்தேன். அதனால் தான் உன்னிடம் சிடுசிடுப்பாக நடந்து கொண்டேன். இன்று இரவு நீ இங்கு தங்கப்போவதாய் சொன்னதும் அடக்கம் செய்திருந்த எனது ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. நமக்குள் நடந்த இந்த உறவு என்னை எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என உனக்கு தெரியாது. இப்போது எனக்கு வருத்தம் மட்டுமே உள்ளது. இந்த மது போதை தெளிந்ததும் நீ என்னை மறந்துவிடுவாய், உன் மனைவியிடம் சென்று விடுவாய். எனக்கும் இது புதிதில்லை” என்று சொன்ன பீட்டரிடம் நான் எப்படிச் சொல்வேன், இந்த இரவு தான் என்னை எனக்கு காட்டிய இரவு என்று. ஆம், பீட்டருடன் இருக்கும் இந்த இரவு தான் என்னைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை எனக்கு கொடுத்துள்ளது. ஆம் நானும் ஒரு தன்பால் ஈர்ப்பாளன் தான். இது நாள் வரையிலும் இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த ஆண் என்ற பிம்பத்தை, கர்வத்தை நம்பி என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். பீட்டர்தான் என்னை முழுமையாக்கி, என்னை எனக்கே காட்டியவன்.

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு குழப்பத்தின் நாட்களாக அமைந்தது. இந்த சமூக அமைப்பை எதிர்க்கும் துணிவு என்னிடம் சுத்தமாக இல்லை. என் மனைவியை விட நான் பீட்டரை அதிகம் நேசித்தாலும் எனது மனைவியையும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவள் மூலம் கிடைத்திருக்கும் இந்த சமூக அங்கீகாரம் அவள் என் மீது வைத்திருக்கும் காதலையும் மரியாதையையும் விட பெரியது. அதை இழந்து நிற்கும் தைரியம் இல்லை. அதே நேரத்தில் பீட்டரையும் என்னால் விட முடியாது. அவனை நான் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்.என் இரகசிய காதலன் அவன். என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் ஒரு வாரம் கழித்து பீட்டரிடம் எனது காதலைத் தெரிவித்தேன்.

சில சமயங்களில் நாம் எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும், நாம் செய்வது நெறிமுறை அளவில் தவறு என்று நமது மனசாட்சி தடுத்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, உணர்ச்சிகளின் போக்கில் சில செயல்களை செய்து விடுவோம். அத்தகைய ஒரு செயல் தான் நான் பீட்டரை காதலித்தது. பீட்டருக்கோ இருதலை கொள்ளி எறும்பின் நிலை. ஒரு பக்கம் நெறிமுறை/ ஒழுக்க மதிப்பீட்டு அளவில் தவறான ஒரு செயல். மறுபக்கம் தனிமையும் காதலின் ஏக்கமும் சூழ் வாழ்வில் ஒழுக்க மதிப்பீடுகளுக்கு முரணாக வந்துள்ள காதல் அழைப்பு.

கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவில் எங்களுக்குள் தர்க்க ரீதியான, சமூக ஒழுக்க அளவீடுகள் ரீதியான விவாதங்களே தொடர்ந்தன. இன்னொருவரின் இணையர் உன்னை எப்படி என் காதலனாக ஏற்றுக் கொள்வது? இது பீட்டரின் முறைப்பாடு. என்னுள் இருந்த காதல் உணர்வு உன் மூலமாக மட்டுமே தூண்டப் பட்டதற்கும் என்னை நானே கண்டடைந்ததும் உன் மூலமாக நடந்ததற்கு நான் என்னச் செய்வது? இது எனது தன்னிலை விளக்கம். உன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன் காதலை என்னிடம் சொல் – இது பீட்டர். திருமணம் எனும் சமூக அங்கீகாரத்தை இழக்க நான் தயாரில்லை – இது நான். இப்படி ஆரம்பித்த தர்க்கங்கள், இவ்வாறாக முடிவுப் பெற்றது.

மனைவியுடன் இருந்தாலும் நான் தான் உன் முதல் காதலெனச் சொல் – இது பீட்டர்.
மனைவியுடன் இருந்தாலும் நீயே என் உயிரானவன், என் காதலன்- இது நான்.

இந்த தர்க்கங்களின் முடிவில் உணர்ச்சிகளே வென்றது. ஏனெனில் எங்கள் இருவருக்கும் தெரியும், எங்களால் ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ்வது கடினம் என. எனவே எங்களின் இந்த இரகசிய உறவை தொடர்வோம் என்ற நிலைக்கு வந்தோம்.

நீங்கள் நினைப்பது சரிதான், எங்கள் வாழ்வில் நாங்கள் செய்த சிறுமைகள் இவை. எங்களுக்கும் அந்தந்த நேரத்து நியாயங்கள் இருந்தன. அடுத்த மூன்று மாதங்கள் எங்களின் காதல் தேனிலவு மாதங்களாக இருந்தன. திருப்பூரும் கோயம்புத்தூரும் எங்கள் காதலின் சாட்சியங்களை பதிவு செய்து வந்தன. வாழ்வில் முதல் காதலை சுவைக்கும் எங்கள் இருவருக்கும் அந்த மூன்று மாதங்கள் இன்பத்தின் மாதங்களாகத் தெரிந்தது.

அதே வருடம் டிசம்பர் மாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில், இந்த கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது போல் நான் என் மனதுடன் போராடிக் கொண்டிருந்த போது, எனது மனைவிக்கு எங்களின் இந்த இரகசிய உறவு நிலை பற்றி எனது கைப்பேசி உரையாடல்கள் மூலம் தெரிய வந்தது.

உறவினர்கள், பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து ஏற்பாடானது. மனைவியா, இரகசிய காதலனா என முடிவெடுக்க வேண்டிய தருணம். மனைவிக்காக இரகசிய காதலனை கைவிட்டு விட்டு மனைவியுடன் வாழ நினைத்தேன். என் காதலனும் எல்லா பழியையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு, என்னை நிராபராதியாக்கப் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் என் மனைவியும் உறவினர்களும் என் காதலனை தாக்கவும் செய்தனர். அப்போது அவன் என்னை பார்த்த ஒரு பார்வை, கூறிய ஒரு வார்த்தை என்னை கொடும் நெருப்பாய் சுட்டெரித்தது. என்னைக் காதலித்ததைத் தவிர வேறொரு தவறும் இழைக்காத என் காதலன் என்னை நிராபராதி கூண்டில் ஏற்றி விட்டு குற்றவாளியாய் நிற்கிறான். முன்னை விட்ட என் மனசாட்சி என்னை அதிகம் குத்தியது, கேள்வி கேட்டது.

அப்போது நான் ஒரு உரக்கக் கத்தி கூறிய ஒரு சொல், ஒரு செயல் அந்த இடத்தில் ஒரு மயான அமைதியைக் கொண்டு வந்து இருந்தது.

கண்ணீரை அடக்க முடியாமல், ஓடிச்சென்று என் காதலனின் இதழில் இதழ் பதித்தேன். நானும் குற்றவாளிதான், என் மனைவியை விவாகரத்து செய்கிறான் என்று நான் உரக்க கத்தியதில் பஞ்சாயத்தில் சடுதியில் ஒரு மயான அமைதி தோன்றியது. ஆம், திருமணமானவன் என சமூகம் கொடுக்கும் அங்கீகாரத்தை விட என் காதல் எனக்கு கொடுக்கும் காதலன் என்கிற அங்கீகாரமே பெரிது. விவாகரத்து ஒன்றே நான் இதுவரை ஏமாற்றிய என் மனைவிக்கு செய்யும் பரிகாரம். என் காதலுக்கு நான் செய்யும் நியாயம். இம்முறை என் மனசாட்சி உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் என்னைக் காப்பாற்றியது. என் மனைவிக்கு இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தான். ஆனால், அவளுக்கு கடைசி 3 மாதங்களாக நான் செய்த துரோகம் போதும். என்னாலும் பொய்யாய் இரட்டை வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என் காதலனின் ஒரு தீர்க்கமான பார்வை என் வாழ்வை இப்படி தலைகீழாக மாற்றும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பஞ்சாயத்து முடிந்த அந்த நாளில், என் இரகசிய சிநேகிதனாய் இருந்த பீட்டர் என் கைகளைக் கோர்த்துக்கொண்டு என் காதலனாக, நானும் அவனும் அந்த அறையை விட்டு வெளியேறினோம், எதிர்வரும் இடர்களையும் பிரச்சனைகளையும் ஒன்றாக சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.


The image was generated using AI.

]]>
https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/feed/ 0
முகூர்த்த நேரம் https://new2.orinam.net/ta/muhoorthaneram-ta/ https://new2.orinam.net/ta/muhoorthaneram-ta/#comments Thu, 21 Feb 2013 19:03:33 +0000 https://new2.orinam.net/?p=8412 MNeram

 

இன்று:
“சித்தப்பா லேட் ஆச்சி, சீக்கிரமா கிளம்பு” என்றாள் மீனா குட்டி.
“நீ போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு, நான் வந்துட்டேன்” என்று சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு, திலீப் ஷு லேசை அவசரமாய்க் கட்டினான்.
பட்டன் ஸ்டார்ட் வண்டியை தயக்கமின்றி விர்ரென எழுப்பினாள் மீனா.
“தம்பி வரும்போது இன்னைக்கு மறக்காம வெளிய சாப்பிட்டு வந்துடுங்க. நாங்க எல்லாம் செங்கல்பட்டு போறோம்” என்று சொல்லி முடிக்கும் முன் “டேய் அடி வாங்க போற” என்று அதட்டி மீனாவின் முன்று வயதுத் தம்பியை அடக்க முயன்றாள் மீனாவின் அம்மா.
அதற்குள் வண்டி வேகம் பிடிக்கவே, “சரி அண்ணி” என்று உரக்கக் கத்தி விட்டுச் சூடு பிடிக்கப் பறந்தான் திலீப்.

அன்று:
“சார் சார், ப்ளீஸ் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க” என்று குரல் கேட்டது. சாதரணமாய் வண்டியை நிறுத்த மாட்டான் திலீப் என்றாலும், அதைச் சொன்ன கண்களுக்கு அடிபணிவதை விட அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கூர்மையான பார்வை, அதை விட கூர்மையான மீசை, உறுதியான இரும்பு எலும்புகளின் மேல் இறுக்கமாய் போர்த்திய கருப்புத் தோலின் மீது ஆழுக்குச் சட்டை.
“பிச்சைக்காரனா?” என்று திலீப் வியந்திருக்கையில், “சார் சார், நீங்க பாம்பு ஹௌசு பக்கம் போறதா இருந்தா, என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிட்டு போங்க சார். பஸ் மிஸ் ஆயிடிச்சி. லேட்டா போனா முதலாளி என்ன வேலைய வுட்டு தூக்கிருவாறு சார். என்னைக்காவது உங்க பைக்கு ரிப்பேர் ஆனா, என்ன கூப்பிடுங்க, ப்ரீயா பண்ணித் தர்றேன் சார்” என்று முத்து சொன்ன பண்ட மாற்றை விட, அவன் கண்களுக்கு மீண்டும் அடி பணிந்தான் திலீப்.

இன்று:
“மிஸ்டர் திலீப், உங்க எக்ஸ்ப்ளனேஷனேல்லாம் சரிதான். இந்த ‘பக்கி’ சாப்ட்வேர நாம கிளையண்டுக்கு அனுப்பினா, அடுத்த டேர்முக்கு நமக்கு ப்ராஜெக்ட் கிடைக்கிற சன்செஸ் ரொம்பக் கம்மி” – இது மேனேஜர்.
“சார், பர்ஸ்ட் இது நம்ம ப்ராஜெக்டே இல்லை. சிங்கப்பூர் ஆபிஸ் இதை தெரியாத்தனமா சைன் பண்ணி, எக்குத்தப்பா மாட்டிக்கிட்டதால, நைசா நம்ம தலைல கட்டிட்டாங்க. அவங்க கேக்கர அவுட்புட் வேணும்னா, இன்னும் ஆறு மாசமாவது ஆகும். ஒரு வாரத்துலல எல்லாம் முடிக்க முடியாது சார்” என்று உறுதியாகச் சொன்னான் திலீப்.
“சரி இன்னைக்கு எப். சி. ஆர். டாகுமெண்டையாவது முடிச்சி குடுத்துட்டுப் போங்க” என்றார் மேனஜர்.
“சார் மண்டே வந்து உங்களுக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு குடுக்கறேன். இன்னைக்கு அஞ்சு மணிக்கு நான் கிளம்பியே ஆகணும்” என்று திலீப் முடிவாகச் சொன்னான்
“என்ன வீகெண்ட் பெங்க்ளூருக்குப் போய் பொறுக்கப் போறியா? செய் செய் உனக்கு என்ன பிள்ளையா குட்டியா” என் சலித்துக் கொண்டார் மேனேஜர்.

அன்று:
“சார், சைலன்சரக் கழட்டி, கலர் கலரா லைட்டுப் போட்டு, சைரன் சவுண்டு எல்லாம் வரணும்னா, அதுக்கு ரொம்பச் செலவாகும்” என்று முத்து சொல்லி முடிக்கும் முன், அவன் வாயை தனது வாயால் மூடி, ஐந்து நிமிட இறுக்கத்திற்கு பிறகு திலீப் சொன்னான் “பாதி பேமண்ட் குடுத்தாச்சு, மீதிய ராத்திரி குடுக்கறேன்”
முத்துவை அவன் குறும்பு, இல்லை, குத்தும் பார்வை பார்த்தான்.
“இந்த ஸ்டைலெல்லாம் நல்லாத்தான் இருக்கு, இன்னைக்கு ராத்திரி என்னை மரியாதையா கொண்டு போய் மெட்ராஸ்ல விடு, நாளைக்கு நான் வேலை பாக்கணும்” என்றான் முத்து.
“சண்டே கூட வேலையா? என்னோட இருக்ககூடாதா” என்று திலீப் சிணுங்கினான்.
“உனக்கு என்ன நீ சாப்ட்வேர் இஞ்சினீயர், உக்காந்து தேய்க்கர வேலை, வீக்கென்ட் எல்லாம் ‘ப்ரீ’தான். நான் உடம்பு வளைச்சு உழைச்சாத்தான், என் குடிகார அப்பன் வெச்ச கடனையும், என் வாழாவெட்டி தங்கச்சிக்கும், அவ பிள்ளைக்கும் ஒரு வழியைச் செய்ய முடியும்” என்று முடித்தான் முத்து.
“உடம்ப ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, அது எனக்குச் சொந்தம்” என்று திலீப் கூலாகச் சொன்னான்.

இன்று:
திலீப் சாப்பிட்டுக் கொண்டே அம்மாவிடம் போனில், “இதுக்கெல்லாம் ஏம்மா டென்ஷன் ஆகுற, அண்ணி அண்ணா கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆச்சு, இன்னும் நீ என்னவோ புது சம்மந்தி மாதிரி அவங்க அத கண்டுக்கல, இத மதிக்கலன்னு அலட்டிக்காம , பேரன் பேத்தியோட போய் சேரு. ஐ மீன், செங்கல்பட்டுக்கு” என்றான்.
“ஏன்டா சுடுகாட்டுக்குன்னு சொல்லேன். அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன். உங்க அண்ணன் தலையணை மந்திரத்துக்கு மயங்கி, அவளோட தலையாட்டி பொம்மையா மாறிட்டான். நீயாவது வீட்ட மதிக்கரவளா ஒருத்திய கட்டுவன்னு பர்த்தா, ஒரு வழிக்கும் வர மாட்டேங்கற. உங்க அப்பா அவர் பாட்டுக்கு என்னை நிர்கதியா உங்க தலைல கட்டிட்டு, நிம்மதியா போய் சேந்துட்டாரு. என் தலைல அவ்ளோதான் எழுதி இருக்கு” என்று திட்டித் தீர்த்தாள்.
திலிப்பிற்கு உணவை முடிக்கும் முன்பே, வயிறு நிறைந்து விட்டது.

அன்று:
“நமக்குப் பொண்ணு பொறந்தா அது உன்னை மாதிரிதான் இருக்கணும்” என்றான் தீலிப் .
இடைமறித்து “ஒண்ணும் வேணாம். நானே கருப்பு, அப்புறம் அவள எவனும் கட்ட மாட்டான்” என்றான் முத்து.
“கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்று பாடி நகைத்த திலீப் “பாத்தியா பாத்தியா, உனக்கு ஏன் இந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்? நீ மட்டும் வெள்ளையா இருந்தா, நான் உன்னை அன்னைக்கு பைக்ல ஏத்தி இருக்கவே மாட்டேன்” என்றான்.
“உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான். இப்படி வாய்ப்பேச்சுலயும், கனவிலேயும் தான் நாம குடும்பம் நடத்தி குழந்தையெல்லாம் பெத்துக்க முடியும். மத்தவங்களப் பொறுத்த வரைக்கும் நான் உனக்கு வெறும் ப்ரெண்டு. அன்னிக்கு உன்னோட அபீஸ் ‘ட்ரிப்பு’ன்னு வயநாடு போனப்ப உன்னோட கலீக்ஸ் கிட்ட எல்லாம் நான் யாரு, உனக்கு எப்படி பிரண்டுன்னு புளுகித் தள்ளி, சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி. உங்க வீட்டுக்கு வந்தா, உங்க அம்மா, இந்த மேக்கனிக்கு பயலோட உனக்கு என்ன சகவாசம்னு கேக்கறாங்க” என்று முத்து தன் நிலைமையை வெளிப்படுத்தினான்.
சற்று நேரம் யோசித்த திலீப் “சரி வா ஓடிப்போய் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.
“இன்னைக்கு நீ அடிச்சா ஜோக்குல மட்டமான ஜோக் இதுதான்” என்று சிரித்தான் முத்து.
“இல்லடா ஸீரியஸா” என்று பதில் சொன்னான் திலீப்.

இன்று:
திலீப்பின் செல் போன் ஒலித்தது. அவன் அண்ணாவிடமிருந்து. “டேய் திலீப், உடனே கோயம்பேடு பஸ்டாண்டுக்குப் போய் அம்மாவ கூட்டிட்டு வந்து வீட்ல ட்ராப் பண்ணு” என்றது அண்ணாவின் குரல்.
“ஏன்ணா? அம்மா அண்ணியோட செங்கல்பட்டுக்குல போயிருக்கணும். என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று குழம்பினான் திலீப்.
“ஆமாம்டா. நேரம் காலம் தெரியாம அம்மா உன் அண்ணி கிட்ட சம்மந்தி வீட்டுப் பிரச்சனைய ஆரம்பிச்சிருக்கா. பதிலுக்கு உன் அண்ணியும் ‘சுருக்’குன்னு ஏதோ கேட்டுட்டா. அம்மா வீம்பா அவங்க வீட்டுப் பக்கம் தலை வெச்சி கூடப் படுக்க மாட்டேன். செங்கல்பட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டா. உங்க அண்ணி எவ்வளவோ சொல்லியும் கேக்கல, அவளும் கெளம்பிட்டா” என்று புலம்பித் தீர்த்தான் அண்ணன்.
“ச்சே என்ன நான்சென்ஸ், நான் அத்தனை சொல்லியும் அம்மா இப்படி பண்ணிட்டாங்களே. சரி, ஒரு ஆட்டோ புடிச்சி அம்மாவ நீ வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கக் கூடாதா” என திலீப் கேட்டான்.
“அது எனக்குத் தெரியாதா? அம்மா அப்செட் ஆகி அழுதுட்டு உட்கார்ந்திருக்காங்க. இப்ப நம்ம யாராவது போனாதான் அவங்க கொஞ்சம் சமாதானமாவாங்க. அதுவும் அவங்க செல்லப் புள்ள நீ போனீன்னா அவங்க மனசு கொஞ்சம் ரிலாக்சாகும்” அண்ணன் அவனை விடுவதாக இல்லை.
“அது இல்லண்ணா, எனக்கு 6.30 மணிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ போய்க் கூட்டிட்டு வாண்ணா, ப்ளீஸ்” என்று திலீப் மீண்டும் தப்பிக்கப் பார்த்தான்.
“இத பாரு இன்னைக்கு பேங்க்ல இயர்லி ஆடிட். லாக்கர் ரூமத் திறந்து உள்ள உட்கார்ந்திருக்கோம். மிட்நைட் குள்ள நான் முடிச்சி வெளிய வந்ததாலேப் பெரிய விஷயம். நீ போய்த்தான் ஆகணும், ஃப்ரைடே ஈவனிங் நீ என்ன வெட்டி முறிப்பன்னு எனக்குத் தெரியும்” என்று அண்ணன் கறாராய்ப் பேசினான்.
“அது இல்லண்ணா …” என்று திலீப் மீண்டும் பேச ஆரமிப்க்க, “ஜஸ்ட் டூ இட்” என்று சொல்லி அண்ணன் போனைக் கட் செய்தான்.

இதை முத்துவிடம் எப்படி விளக்குவது என்று திலீப் குழம்பி இருக்கையில், முத்துவிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ். “யே குருவி, சிட்டுக் குருவி” என்ற மெட்டு ஒலித்தது.
“Konjam late aagum inga periya problem” என்ற எஸ்.எம்.எஸ்சை கண்டபோது, வேதனைப்படுவதா, ஆறுதல் அடைவதா எனக் குழம்பினான்.
சுதாரித்தவன் “sari enakkum personal problem, 7.25 kku vantha pothum. manage pannalam” என பதில் எஸ்.எம்.எஸ். கொடுத்து விட்டு, அம்மாவை அழைத்து வரக் கிளம்பினான்.

கோபம் நிறைய இருந்தது. அத்தனைக் கூட்டம் மிக்க பேருந்து நிலையத்தில் அம்மாவைச் ‘சட்’டெனக் கண்டுபிடித்து “ஏறும்மா” என்றான். அம்மாவை வீட்டில் இறக்கி விட்ட போது மணி 6.57. வண்டியை விட்டு இறங்காமல் வாசலில் இருந்தே கிளம்பி விடலாம் என முடிவு செய்து இருந்த போதிலும், சிறுநீர் நிரம்பி வயிறு சிதறும் நிலையில் இருந்ததால், சற்றே உள்ளே சென்று விட்டு வரலாம் என்று முடிவை மாற்றிக் கொண்டான். கையை அலம்பி விட்டு, அதைத் துடைக்காமலேயே கிளம்ப இருந் திலீப்பை அம்மா மறித்து “சட்டுன்னு ஒரு உப்புமா பண்ணித் தரேன், சாப்பிட்டுப் போ” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், எனக்கு அவசரமா வேலை இருக்கு, நான் போகணும்” என்று சொல்லிக் கொண்டு வாசலுக்கு விரைந்த திலீப், ப்ரேக் அடித்தாற்போல் வேகம் குறைந்துத் திரும்ப வீட்டிற்குள் நுழைந்தான்.
“என்னடா ஏதாவது மறந்துட்டியா?” என்று அம்மா கேட்டாள் .
“என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா” என்று அம்மா காலில் விழுந்தான் திலீப்.
“உனக்கு ஒரு குறையும் வராது, நீ தீர்க்காயுசா இருப்ப. நல்லா இருடா கண்ணா” என்று வியப்புக் கலந்த புன்னகையுடன் வாழ்த்தினாள் அம்மா.

மாலை நேரச் சாலை வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்து வடபழனி வந்து சேருவதற்குள் மணி 7.50 ஆகி விட்டது. வண்டியை நிறுத்தி, முத்துவுக்கு செல் போனில் கால் அடிதான் திலீப். முத்து எடுக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து “owner paduthal. innum 15 min. apparam kilambiduven” என்று எஸ்.எம்.எஸ் வந்தது முத்துவிடமிருந்து.
“9o clock temple will be closed soon. pls hurry” என்று பதில் அனுப்பினான் திலீப். மணி ஆக ஆக, நெஞ்சை அடைத்தது திலீப்பிற்கு.

எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒவ்வொரு கணமும், யுகமாய் நீண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான் திலீப். பரபரப்பாய் கோவிலுக்குள் அலை மோதிய வண்ணம் பல்லாயிரம் ஜனங்கள். பிச்சை, பூ வியாபாரம், செருப்புக் காவல் எனக் கோவில் சார்ந்த வர்த்தகம் புரியும் சிறு நிலை முனைவர்கள், கூலிகள், கோவிலின் மணியோசை, அதன் பெருஞ்சுவர் மேல் முடுக்கப் பட்டிருந்த ஸ்பீக்கரின் சத்தமான பக்திப் பாடல்கள், உயர்ந்த கோபுரம், அதன் மீது வண்ண மின் விளக்குகள், அதன் பிரகாசத்தையும் பொருட்படுத்தாது மீறி ஒளிர்ந்த ஒன்றிரண்டு வின்மீன்கள் – அனைத்தும் சேர்ந்து அலை அலையாய் அடிப்பது போலவும், அலைகளை தாங்கும் ஒரு சிறிய தீவாய்ச் தான் சிதறாமல் நிற்பது போலவும் தோன்றியது திலீப்பிற்கு.

நேரம் ஆக, புயல்கள் தணிந்தன. அலைகள் ஓய்ந்தன. ஆனால் தனித்தீவில் பூகம்ப நிலை உருவாகிக் கொண்டிருந்தது.
8.37 க்கு ஒரு கை திலீப்பின் தோள்களை தட்டியது. “சாரிடா லேட் ஆயிடிச்சி” என்ற முத்து குரல் கேட்ட போது, அடக்கி வைத்திருந்த மூச்சு எரிமலையின் அனல் குழம்பாய் வெளியேறித் தணிந்தது திலீப்பிற்கு.
“புது சட்டையைக் குடு, ரெண்டு நிமிஷத்துல மாத்திட்டு வந்திடறேன்” என்றான் முத்து.
“அதுக்கெல்லாம் நேரம் இல்லை, வாப் போகலாம்” என்று அவசரப்படுத்தினான் திலீப்.
கோவிலுக்குள் அப்போது கூட்டம் அதிகம் இல்லை. தீபங்கள் எண்ணெய் தீர்ந்து அணையும் தருவாயில் இருந்தன. அர்ச்சனைகளும், ஸ்பீக்கரின் கர்ஜனைகளூம் நின்று போயிருந்தன. ஆண்டவன் சன்னிதானத்தில், ‘அவனும் அவனும்’ கைகூப்பிக் கும்பிட்டு விட்டு, மெல்லிய இரு தங்கச் சங்கிலிகளை ஒருவர் கழுத்தில் ஒருவர் மாட்டி, அதற்குள் ஈரமாகி விட்டிருந்த கண்களொடுக் கண்கள் பிணைத்துச் செய்தார்கள் ஒரு பிரமாணம்.

அது அவர்களின் முகூர்த்த நேரம்.

]]>
https://new2.orinam.net/ta/muhoorthaneram-ta/feed/ 6
1989: A Love Story https://new2.orinam.net/ta/1989-a-love-story/ https://new2.orinam.net/ta/1989-a-love-story/#comments Wed, 13 Feb 2013 04:22:10 +0000 https://new2.orinam.net/?p=8263
Radha, Alaigal Oivathillai

Shridhar Sadasivan’s Tamil story 1989 ஒரு காதல் கதை
(1989 – A Love story).
Work in progress version. Available for a limited time.

Audio: Lakshmi Sriraman


This post is part of the V-Day 2013 series called The Original L Word

]]>
https://new2.orinam.net/ta/1989-a-love-story/feed/ 1
உயிருடன் ஒரு சிரிப்பு https://new2.orinam.net/ta/uyirudan-oru-sirippu/ https://new2.orinam.net/ta/uyirudan-oru-sirippu/#comments Sun, 13 Nov 2011 19:44:22 +0000 https://new2.orinam.net/?p=4713 அன்று மதியம் மூன்று மணிக்கே வேலையில் மனம் செல்லாததால் களைப்புற்று அப்பார்ட்மெண்ட்டிற்கு திரும்பினாள் சரளா. மனம் ஏனோ தீபிகாவைப் பற்றியே நினைத்தது. ஒரு உருவம் இல்லாமலேயே தன்னை அழ வைத்துக்கொண்டு இருந்த தன் உணர்வுகள் இப்பொழது தீபிகாவின் உருவத்தில் தன்னை சித்ரவதை, இல்லை, இல்லை, மனம் அதை ரசிக்கும் பொழது, அது கிடைக்காத வேதனையில் தான் மருகுவதை உணர்ந்தாள். கெளச்சில் சரிந்த சரளா தன் மனபாரம் குறைய என்ன செய்வது என தெரியாமல் அழ ஆரம்பித்தாள்.
 

சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சி என மற்றவர்களால் வர்ணிக்கப் படும் பருவத்தில் தான் மட்டும் முள் சிறகில் இருந்த பட்டாம்பூச்சியாய், அழகாக பறக்க முடியாமல், மனம் சக மாணவிகளிடம் தோழமையுடன் பழக முடியாமல்… தொந்திரவு, ஆம், அதை தொந்திரவு என்றுதான் முதலில் விலக்க முற்பட்டாள். முடியாமல் போகவே சோர்ந்து போய், படிப்பில் தன் கவனத்தைத் திருப்பினாள். அவள் பெற்றோர் பெருமையுடன் பேசும்படி மாநிலத்திலேயே முதல் இடத்தில் ப்ளஸ் டூ பாஸ் செய்து மேலே மேலே படித்து இதோ டாக்டர் சரளாவாக நாஸாவில் வேலை செய்கிறாள். கல்யாணம் என்று அவளது பெற்றோர்களும் நச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்பொழது அவர்களுக்கு அது பெரிய கவலையாகவே மாறி விட்டது. மனம் கசந்து பேசஆரம்பித்து உள்ளார்கள். அவர்களை வேதனைப் படுத்துகிறோமே என்ற கவலை ஒரு பக்கமும், தான் யார் என்பதை எப்படி சொல்வது என்ற அச்சமும் சரளாவை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. வெளி உலகத்திற்காக சிரித்தாலும் அவளுக்கே அதில் உயிர் இல்லாதது தெரியும். எல்லாவற்றையும் நினைத்துத்தான் அழதாள்.
 

தீபிகா வரும் சத்தம் கேட்டது. தன்னை சரளா சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் உள்ளே நுழைந்து விட்டாள். அவளது முகத்தைப் பார்த்ததுமே, “அழுகிறாயா, என்ன?” என்று கேட்டவள், கவலையுடன் அருகில் வந்து அமர்ந்தாள்.
 

இந்த நிலையிலும் பாழாய்ப் போன மனம் அவள் கூர்மையான மூக்கையும் துருதுருப்பான கண்களையும் கவனிக்கத் தவறவில்லை. சரளாவிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே, மெதுவாக, “என்னிடம் சொல்லலாம் என்றால் சொல், சரள்” என்றாள்.
 

அவ்வளவுதான். அப்படியே உடைந்து போய்  விட்டாள். எப்படி இவளிடம் நான் கூறுவேன் என்று மனதிற்குள் போராட்டமே நடத்தினாள். தீபிகாவைப் பொறுத்தவரை, சரளா கலகலப்பாக பழகும் பெண் இல்லை என்றாலும் இப்படி காரணம் இல்லாமல் அழும் சாதாரண பெண் அல்ல. ஏதோ கவலை இவளை வாட்டுகிறது என்று உணர்ந்தவள், அவள் முகத்தைத்தன் கைகளில் ஏந்தி, “எதுவானாலும் சொல் சரள்” என்றாள்.
 

அதற்குமேல் பொறுக்க முடியாமல்போன சரளா, “தீபி, நான் சொல்வதைக் கேட்டால் இப்படி நீ என் பக்கத்தில் இருப்பாயோ, மாட்டாயோ, தெரியாது. ஆனாலும் சொல்லத்தான் போகிறேன். நான் பெண் என்றாலும் என் மனம் ஏனோ பெண்ணிடமே காதல் உணர்வு தோன்றுகிறது.” என்றவள், தொடரலாமா வேண்டாமா என்று யோசித்து, நிமிர்ந்து தீபிக்காவின் முகத்தைப் பார்க்கவே கூசி, மெள்ள நிமிர்ந்தாள்.ஆனால் அதில் எந்தவித மாற்றமும் இல்லாத்ததால், சற்று  தைரியம் அடைந்து, மேலே கூற ஆரம்பித்தாள். “உன்னைப் பார்த்த முதல்  இத்தனை வருடங்களாக கட்டுப்பாட்டிற்குள் அழது கொண்டு இருந்த என் மனம் அடக்க முடியாமல் என்னை தொந்திரவு செய்கிறது. என்னை மனித்துவிடு. என்னால் உன்னிடம் வெறும் தோழியாக பழக முடியவில்லை” என்றவள், வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நான் வெளியே இடம் பார்த்துக் கொள்கிறேன் என்பாளா, என்று பயந்து, எதுவானாலும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தீர்மானித்தவளாய், அவள் முடிவை சொல்லட்டும் என மொளனமாக தலை குனிந்து இருந்தாள். சற்று நேரம் கழித்தும் பதில் வராமல் போகவே, நிமிர்ந்த சரளா அதிர்ந்தாள். அவள் கண்களிலும் மாலை, மாலையாக கண்ணீர்.
 

பதறிப்போனவளை இதமாக அணைத்த தீபிகா, “சரள், உன்னிடம் எப்படி கூறுவது என்று நான் தவித்துக் கொண்டு இருந்ததைத்தான் நீ இப்பொழுது கூறினாய். உண்மையில் என் பாரமும் குறைத்து விட்டாய்” என்று திணறி,  திணறிக் கூறி முடித்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத சரளா, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாற்போல் மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தாள்.
தன் நிலை அடைந்து அவளை நிமிர்ந்துப் பார்த்தாள். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
 

பிறகு இருவரும் எவ்வளவு வேதனைகளை தேவை இல்லாமலே பட்டு இருக்கிறோம் என்று உணர்ந்தார்கள். இப்பொழுதும் அவர்களுக்கு எதிர்ப்புகள் வரும். அவர்கள் பெற்றோர் இதை புரிந்து கொள்வார்களா, மாட்டார்களா?, உலகம் இதை அங்கீகரிக்குமா என பல கேள்விகள் இருந்தாலும், அதை எல்லாம் மறந்து, பத்து வயதில் சிரித்த அதே ஆனந்த சிரிப்பை இத்தனை வருடங்களுக்கு வாய் விட்டு, மனம் விட்டு சிரித்தனர்.
 

அந்த சிரிப்பில் உயிர் இருந்தது.

]]>
https://new2.orinam.net/ta/uyirudan-oru-sirippu/feed/ 2
டயலாக் : அரசல் புரசல் https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/ https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/#comments Thu, 10 Mar 2011 11:25:10 +0000 https://new2.orinam.net/?p=2213 1. டூ மாமி-s
மாமி 1 : போன வாரம் லக்ஷ்மி  கல்யாணத்துக்கு தாமோதரன் சித்தப்பாவோட ரெண்டு மாப்பிள்ளைங்களும் வந்திருந்தா
மாமி 2 : என்ன சொல்றேள் மாமி, நேக்கு தெரிஞ்சு தாமோதரன் சித்தப்பாவுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு மாப்பிள்ளைங்க எப்படி இருக்க முடியும்? நமக்கு தெரியாம அவருக்கு இன்னொரு பொண்ணு இருக்காளா என்ன?
மாமி 1 : என்ன மாமி ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியாதா? அவர் பொண்ணு மூத்தவ, மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு ஆம்படையான கல்யாணம் பண்ணிண்டா. அவரோட பையன் போன வருஷம்தான் ஒரு அம்பளையோட செட்டில் ஆயிட்டான்.
மாமி 2 : அடக் கண்றாவியே, எல்லாம் கலிகாலம்!

2. பள்ளிக்கூடத்திலிருந்து கோபமாய் வீட்டுக்கு வந்தான் குட்டிப்பையன் விஷ்வேஷ்

விஷ்வேஷின் அம்மா : ஏன்டா கண்ணா மொரப்பா இருக்க?
விஷ்வேஷ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்னோட ப்ரெண்டு வினோத் என்னை எல்லாத்துலயும் பீட் பண்றான்
விஷ்வேஷின் அப்பா : அதவேற எங்ககிட்ட வந்து சொல்றியா? நீ நல்லா படிச்சா, ப்ராக்டிஸ் பண்ணா, அவன பீட் பண்ணலாம் இல்ல?
விஷ்வேஷ் : நான் எவ்ளோ படிச்சாலும் எனக்கு ரெண்டு அப்பா கிடைப்பாங்களா?
விஷ்வேஷின் அம்மா : என்னடா சொல்ற?
விஷ்வேஷ் : ஆமாம், அவனோட முதல் அப்பா ஸ்கூல்ல வந்து டிராப் பண்றார், ரெண்டாவது அப்பா சாயந்திரம் வந்து கூட்டிட்டு போறார்
விஷ்வேஷின் அம்மா : ஐய்யய்யோ இத கேட்டிங்களா

3. கொக்குவார்ப்பட்டி குழாயடியில் பெண்கள்

பெண் 1 : அடியே இந்த கூத்த கேட்டியா?
பெண் 2 : என்னடி?
பெண் 1 : ஒரே, நாள்ல, கவுண்டரோட பொண்ணும், கணக்கு வாத்தியோட பொண்ணும் காணாம போனாங்களே, நெனவிருக்கா?
பெண் 3 : ஆமாம், அது ஆகி ஒரு வருசம் மேல ஆயிடிச்சி. இன்னும் மர்மமாவே இருக்கு. ரெண்டும் ஜோடிப்புறா ஆட்டம் சுத்திக்கிட்டு இருக்கும். சரியா கவுண்டர் பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால எவன் வந்து அந்த சின்னஞ்சிறுசுகள என்ன பண்ணானோ, ‘பாடி’ கூட கெடைக்கல. ரெண்டு குடும்பமும் தேடாத எடம் இல்ல, வேண்டாத தெய்வமில்ல!
பெண் 1 : அடியே, அதான் இல்ல. நாம சின்னஞ்சிருசுங்கன்னு நெனைக்கறோம், அதுங்க பண்ண காரியத்த கேட்டா, இன்னும் ஒருவருசத்துக்கு தூங்க மாட்ட
பெண் 2 : விஷயத்த  சொல்றி
பெண் 1 : அந்த ‘வானவில்லின் வண்ணங்கள்’ னு டிவி ல போடறாங்களே தெரியுமா…
பெண் 3 : அந்த ஆம்பளையும் ஆம்பளையும் குடும்பம் நடத்தற கண்றாவிதானே அதுல காமிக்கிராக. அத யாரு பாக்கறா
பெண் 1 : அதுல பொம்பளையும் பொம்பளையும் குடும்பம் நடத்தரதையும் கூட காமிக்கிறாங்க. நேத்து வந்து நிகழ்ச்சில, இது ரெண்டும் வந்துசிங்க. வந்து, ‘அப்பா அம்மா, நாங்க ஒருத்தர ஒருத்தர் உயிருக்குயிரா காதலிக்கிறோம், எங்களுக்கு வேற வழி தெரில, எங்கள மன்னிச்சி ஏத்துக்கோங்க’ னு அழவுதுங்க
(சிறிது நேரம் மவுனம், முகச்சுளிப்பு)
பெண் 2 : இதுல ஒரு வசதி என்ன தெரியுமா, புருஷன் தொல்லையே இருக்காது
(சுளிப்புடன், சல சல வென சிரிப்பும்)

4. விடலைப் பெண்கள் கமலாவும் விமலாவும்

கமலா : நான் ஒண்னு சொன்ன கோச்சிக்கிவியா?
விமலா : சும்மா சொல்டி
கமலா: நேத்து உங்க அண்ணன காந்தி பூங்காவில பாத்தேன்
விமலா: அடச்ச அவளோதானா, அவன் எப்பயும் அங்கதாண்டி போய் சைட் அடிப்பான்
கமலா: அது இல்லடி, அவன சின்னியோட பாத்தேன்
விமலா: இருக்கும். அவனுக ரெண்டு பேரும் இப்ப ஒரே கிளாஸ்ல தான் இருக்காங்க
கமலா : ஐயோ அத நான் எப்படி சொல்லுவேன், உங்க அண்ணன் சின்னிய கிஸ் பண்ணிட்டு இருந்தாண்டி
விமலா : அப்படியா? என் அண்ணனுக்கு அறிவே இல்ல, சின்னி ஒரு நம்பி (gay), அவன போய் கிஸ் பண்ணானா?
கமலா: உனக்குதாண்டி அறிவே இல்ல, சரியான tubelightu, உங்க அண்ணன்  சின்னிய கிஸ் பண்றான்னா
விமலா : ஐயோ, அப்பா என் அண்ணனும்

5. மறுபடியும்  மாமி-s (can’t resist them)

மாமி 1 : நம்ம கோகிலாவுக்கு வந்த கதிய கேட்டியா?
மாமி 2 : என்ன மாமி சொல்றேள், நம்ம வட்டாரத்துலேயே, பாரின் போய் நிறைய பணம் பண்ணது அந்த மாமியோட பையன் முகுந்த் தான். அவங்களுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?  அதோட  மாமியும் வருஷா வருஷம் அமெரிக்கா போயிட்டு வராளே…
மாமி 1 : பணம் மட்டுமா மாமி வாழ்க்கை, இன்னும் எத்தனை இருக்கு? அவா பையனுக்கு வயசு முப்பத்தி ஆறு கை நிறைய சம்பாதிக்கிறான், பாரின்ல பெரிய வேலைல இருக்கான். அவன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலன்னா எதோ வில்லங்கம் இருக்கோன்னோ
மாமி 2 : ஒரு வேளை அங்கேயே ஏதாவது வெள்ளக்காரிய கட்டிண்டானோ என்னவோ
மாமி 2 : ஒரு வேளை அங்கேயே ஏதாவது வெள்ளக்காரிய கட்டிண்டானோ என்னவோ மாமியும், அவ பையனும், இந்த வெள்ளைக்காரனும் வடபழனி கோவில் ல எதோ பாமிலி  மாதிரி வளம் வந்தத பாத்தேனே.
மாமி 2 : அது அவன் ப்ரெண்டாஆ இருக்கும். இந்தியாவ பாக்க வந்து இருப்பான்
மாமி 1 : ப்ரெண்டா இருந்தா, ரெண்டு பெரும் வெள்ளை வேட்டி சட்டையோட மாமி கால்ல விழறா, மாமியும் அட்சதை போட்டு நீங்க ரெண்டு பெரும் பிரியமா என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்னு வாழ்தரான்னா பாத்துக்கோங்களேன், கழுத்துல மாலையும் தாலியும் தான் இல்ல
மாமி 2 : ஈஷ்வரா

]]>
https://new2.orinam.net/ta/dialogue-arasal-purasal/feed/ 1