சட்டம் சட்டஒழுங்கு – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Thu, 16 Jan 2014 03:45:45 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png சட்டம் சட்டஒழுங்கு – ஓரினம் https://new2.orinam.net 32 32 தமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி https://new2.orinam.net/ta/httporinam-nettamil-nadu-rainbow-coalition-organizes-377-protest-rally-valluvar-kottam-chennai-ta/ https://new2.orinam.net/ta/httporinam-nettamil-nadu-rainbow-coalition-organizes-377-protest-rally-valluvar-kottam-chennai-ta/#comments Thu, 16 Jan 2014 03:45:45 +0000 https://new2.orinam.net/?p=9589  

Tamil Nadu Rainbow Coaltion

பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.
தமிழகமெங்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (Lesbians, Gays, Bisexuals, Transgenders), மற்றும் எல்லா சமூகங்ககளை சார்ந்தவர்களின் மனித உரிமைகள், சுகாதாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றும் அமைப்புகள் ஒன்றாக இணைந்து அமைத்துள்ள கூட்டணி, தமிழ்நாடு வானவில் கூட்டணி.

டிசம்பர் 11, 2013 அன்று மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில், 377 சட்டப்பிரிவை நிலைநிறுத்தி, இந்திய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கி சரியாக ஒரு மாதமான இன்று, இந்தியாவெங்கிலும் தீர்ப்பை எதிர்த்து போராட்டங்களும், பேரணிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாடு வானவில் கூட்டணி இந்த போராட்டங்களில் இணைகிறது.
1975 ல் அவசர நிலையை அங்கீகரித்ததும், 1979 ல் (மதுரா வழக்கில்) பாலியல் பலாத்காரத்தை  நியாப்படுத்தியதும், பெருமை வாய்ந்த இந்திய உச்ச நீதி மன்றத்தின் வரலாற்றின் மீது படிந்திருக்கும், அழிக்க முடியாத கரைகள். அந்த வரிசையில் டிசம்பர் 11, 2013 அன்று வழங்கிய 377  தீர்ப்பும் இடம்பெறும்.
இந்த பின்னடைவு எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், இந்திய அரசு சமர்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பமும், மற்றும் நாடெங்கிலும் எங்களை ஆதரித்து எழும்பியுள்ள முற்போக்கான குரல்களும், எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கின்றன.  இன்றைய பேரணியில் தமிழ்நாடு வானவில் கூட்டணி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது:

 

  1.  மாநில அளவில் 377 பிரிவில் சட்ட திருத்தம் கொண்டுவந்து, 18 வயதிற்கு மேல் உள்ள இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் தனிமையில் நடக்கும் எந்த பால் சம்மந்தமான உறவையும், குற்றமாக்காமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 1967 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது போன்ற பல முற்போக்கான மாற்றங்களை பாரம்பரியமாக கொண்ட நம் தமிழ் நாட்டில், இந்த 377 சட்ட திருத்தம் இன்னொரு பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படும் என்பது மறுக்க முடியாதது.
  2. தேசிய அளவில், இந்திய அரசாங்கம், நாஸ் பவுண்டேஷன், வாய்சஸ் அகைன்ச்ட் 377, ஆகிய அமைப்புகள் சமர்ப்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பங்களை, சாதகமாக பரிசீலித்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்தை காக்குமாறு உச்ச நீதி மன்றத்தை கேட்டுக் கொள்கிறோம்.
  3. சம உரிமைகள் கொண்ட முழு குடிமக்களாக எங்களை நடத்துமாறு எங்கள் குடும்பங்கள், கல்வி  நிலையங்கள், பணி இடங்கள், அரசாங்கம், நம் தாய்நாடு, மற்றும் நம் சமுதாயம், ஆகியோரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதீத வெறுப்பினாலும், அறியாமையாலும் எங்கள் மேல் தவறான அபிப்பராயங்களை கொண்டவர்களை, அவற்றைக் களைந்து, திறந்த மனத்துடன், சொந்த குடும்பத்திற்குள்ளேயே சிறுபான்மையான எங்கள் வாழ்வுகளையும், போராட்டங்களையும், புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  4. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், பாலியல் தொழிலாளர் அமைப்புகள் ஆகியபல முற்போக்கான அமைப்புகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அமைப்புகளுடன், எங்களுக்கு பொதுவாக அமைந்துள்ள சவால்களையும், உரிமை போராட்டங்களையும் நாங்கள் நன்கு உணர்வோம். இவர்களுடன் இணைந்து, எல்லோருடைய சமூக நீதிக்கும், சமத்துவத்திற்குமான எங்கள் போராட்டம், பன்மடங்கு உறுதியுடன் தொடரும், என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Rally photos:

Media coverage:

]]>
https://new2.orinam.net/ta/httporinam-nettamil-nadu-rainbow-coalition-organizes-377-protest-rally-valluvar-kottam-chennai-ta/feed/ 1
பாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி https://new2.orinam.net/ta/human-chain-against-sexual-violence-ta/ https://new2.orinam.net/ta/human-chain-against-sexual-violence-ta/#respond Tue, 25 Dec 2012 03:57:29 +0000 https://new2.orinam.net/?p=7872
Image source: msn.co.in

அன்புடையீர்,

வணக்கம்.

தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை, இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் தூண்டிவிட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. இது குறித்து, டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறவுள்ள கண்டன போராட்டத்திற்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.

தில்லியில் நடைபெற்ற சம்பவம் தனித்துவம் வாய்ந்தது அல்ல. அருவெருக்கத்தக்க செய்கைகள், கேவலமான வார்த்தைகள், உரசல்கள், தீண்டுதல்கள் ஆகியவற்றில் தொடங்கி, மிகவும் கேடுவிளைவிக்க கூடிய மற்றும் பாதகமான பல வகையான பாலியல் வன்முறைகளை குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலியல் ‘பிறழ்வு கொண்டோர்’ [“Sexually deviant”]என்று கருதப்படுபவர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். கண்டிக்கத்தக்க இந்த நடத்தைகள் தினசரி வழக்கமாகிவிட்டன. குடும்பத்தினர், அண்டை வீட்டார், சமூகத் தலைவர்கள், நீதி காக்கவேண்டிய அமைப்புகளான காவல்துறை மற்றும் இராணுவம் அனைவரும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதற்கு மறுக்க இயலாத ஆதாரங்கள் இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. கீழ்சாதியின் மேல் மேல்சாதி; சிறுபான்மையினர் மீது வலதுசாரி பெருபான்மையினர்; தங்களது அதிகாரத்துக்கு அடங்காத, பயம்விளைவிக்க கூடிய குடியினர் மீது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தினர் – என்று பல நேரங்களில் இது அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. பாலியல் ரீதியாக வலு குறைந்த எந்தப் பிரிவினர் மீதும் நடத்தப்படலாம் என்றாலும், பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் பாலியல் வன்முறை பரவலாகக் காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பாலியல் வன்முறையை பற்றி கீழ்கண்ட கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது.

  • ஆண்கள் இந்த அளவிற்கு வன்முறையுடனும், இழிவான நோக்கங்களுடனும் நடந்துகொள்ள நமது சுழலில் எந்த விஷயங்கள் காரணமாகின்றன? வளர்ச்சி, முன்னேற்றம் என்று நாம் கருதுபவை இயலாமையையும், வறுமையையும், குற்றங்கள் செய்வதையும் உருவாக்கிவிடுகிறதா?
  • பாலியல் வன்முறை இழைப்பவர்கள் மனப் பிறழ்வு கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் செய்கைகளுக்கு பின்னால் நாம் சிந்திக்க வேண்டிய மேலும் பல விஷயங்கள் உள்ளனவா? அவற்றிக்கு பின்னால் பெண்கள் மீதான வெறுப்பு, வெறி, அலட்சியம், மரியாதையின்மை இவற்றை வளர்க்கும் ஒரு பண்பாடு இருக்கிறதா?
  • காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் பணியை சீராக செய்ய வேண்டும் என்று கோரும் நாம் இந்த விஷயத்தில் அதே அளவிலான பொறுப்புடைய மற்ற அமைப்புகளை கவனிக்காது விட்டுவிடுகிறோமா? மக்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்ற ஒரு பண்பாடு நம் நாட்டில் நிலவுகிறது. உதாரணத்திற்கு, ஊடகங்களை எடுத்துக்கொள்ளலாம். விளம்பரங்கள், பரபரப்பான செய்திகள் ஆகியவற்றின் மூலம் எல்லா விதமான பாலியல் தூண்டுதல்களையும் ஊடகங்கள் ‘விற்பனை’ செய்கின்றன. இது தவிர, பண்பாடு என்னும் பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகளையும் வெளியிடுகின்றன. இவற்றை நாம் கவனிக்காது விட்டுவிடுகின்றோமா?

இப்படிக்கு,

மனித சங்கிலி ஒருங்கிணைப்புக் குழு

மேலும் தகவலுக்கு: சிவகுமார் – 9840699776 | அனிருத்தன் – 8939609670

RSVP on Facebook: HumanChainDec29Chennai

Thanks: Sneha Krishnan, V Geetha and Shri Sadasivan for draft and Tamil translation

]]>
https://new2.orinam.net/ta/human-chain-against-sexual-violence-ta/feed/ 0
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை https://new2.orinam.net/ta/kavita-krishnan-on-violence-against-women-ta/ https://new2.orinam.net/ta/kavita-krishnan-on-violence-against-women-ta/#respond Sun, 23 Dec 2012 06:11:03 +0000 https://new2.orinam.net/?p=7826
Kavita Krishnan (Image source: aipwa-aipwa.blogspot.com)
]]>
https://new2.orinam.net/ta/kavita-krishnan-on-violence-against-women-ta/feed/ 0
ஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/ https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/#respond Wed, 05 Dec 2012 19:40:11 +0000 https://new2.orinam.net/?p=7706
Secretary Clinton, Dec 6th 2011, Geneva (Image: US Mission Geneva)

ஓரினம்.நெட் வெளியீடு
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
உதவி: பூங்கோதை பாலசுப்பிரமணியன் & மதன்

]]>
https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/feed/ 0
கவிதை: ஒபாமா – ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன் https://new2.orinam.net/ta/obama-oru-vaarthai/ https://new2.orinam.net/ta/obama-oru-vaarthai/#comments Thu, 10 May 2012 00:17:01 +0000 https://new2.orinam.net/?p=6570 In a historic and game changing moment, the President of the United States today announced his support for same-sex marriage. “Same-sex couples should be able to get married,” he said in an interview with Robin Roberts of ABC news. Obama has been dilly dallying on this issue for years now, trying to have it both ways and saying he was evolving on the issue. Looks like he finally evolved!

The Tamil song “ஒரு வார்த்தை” is one of my favorites. It is a song between a girl and her boyfriend. She tells him how she had to wait all these years for the boyfriend to say that word. The boyfriend admits he was scared, he didn’t have the guts and he tried his best to avoid the topic, but now he finally managed to say it.

I came across this song today accidentally. I couldn’t help but tweak it as a duet between me and President Obama about his evolution on same-sex marriage. If you are not familiar with the song, you may want to watch it before you read the modified version. I have included a video link below.

நான்: ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்

ஒபாமா: ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்

நான்: பெலோசி பைடன் என்று என்டோர்ஸ்மென்ட்கள் ஆயிரம் இருந்தும்
உன் என்டோர்ஸ்மென்ட்காகவே எந்தன் கண்கள் காந்து நிற்கும்

ஒபாமா: இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே
அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே

நான்: நீ தலையசைக்க வேண்டும் என்று, பெட்டிஷன் எழுதி போட்டே
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன!!
ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன்
எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்

நான்: அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
எங்கள் பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

ஒபாமா: இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன
அந்த வார்த்தை சொல்லி முதன்முதலா நிமிர்ந்து நின்னேன்
இனி எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் தயங்க மாட்டேன்

]]>
https://new2.orinam.net/ta/obama-oru-vaarthai/feed/ 1
அப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ! https://new2.orinam.net/ta/afsana-bina-mukti-sangita-sunita-our-heroes-too-ta/ https://new2.orinam.net/ta/afsana-bina-mukti-sangita-sunita-our-heroes-too-ta/#respond Thu, 15 Dec 2011 01:40:21 +0000 https://new2.orinam.net/?p=5454
source: The Hindu (click image for link)

போன வாரம், மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளான அப்சானா காடுன், பீனா களிண்டி, முக்தி மஜ்ஹி, சங்கீதா புவரி, சுனிதா மகாடோ ஆகியோர் குழந்தை திருமணத்தை எதிர்த்ததால், ஜனாதிபதி பிரதீபா பாட்டிலால், கௌரவப்படுத்தபட்டார்கள் என்ற செய்தியை படித்திருப்பீர்கள். மேலும் விவரகளுக்கு கீழ்கண்ட இணைப்புகளை பார்க்கவும்.

 

இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியானாலும், குழந்தை திருமணங்களை போன்று நியாயமற்ற, நெறிகெட்ட திருமணங்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில், இது போன்ற உங்கள் விருப்பத்திற்கு மாறான, கட்டாய திருமணங்களை எதிர்த்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்.

]]>
https://new2.orinam.net/ta/afsana-bina-mukti-sangita-sunita-our-heroes-too-ta/feed/ 0
நேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா https://new2.orinam.net/ta/interview-sri-lankan-activist-rosanna-flamer-caldera-ta/ https://new2.orinam.net/ta/interview-sri-lankan-activist-rosanna-flamer-caldera-ta/#respond Sun, 27 Nov 2011 21:44:08 +0000 https://new2.orinam.net/?p=5130
Photo: Indu Bandara

1999 ஆம் ஆண்டு முதல், இலங்கை மற்றும் உலகளவில், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் உரிமைகளுக்காக போராடிவரும் மனித உரிமை ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா. இவர் இலங்கையின் ஒரே திருனர் மற்றும் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட பெண்களுக்கான நிறுவனமான “வுமன்ஸ் சப்போர்ட் க்ரூப்” (1999) மற்றும் அனைத்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான உதவி நிறுவனமான ஈக்வல் கிரவுண்டு (2004) ஆகியவற்றின் நிறுவன உறுப்பினர். இந்த நேர்காணலில் ரோசானா ஓரினம்.நெட்டுடன், இலங்கையை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

தற்போது இலங்கையை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (LGBTIQ) முக்கியமாக கருதும் விஷயங்கள் என்னென்ன?
மாறுபட்ட பாலீர்ப்பை குற்றமற்றதாக்குவது, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இச்சிருபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு முடிவு காண்பது ஆகியவை முக்கியாமான, முதலில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்களை தாங்களே புரிந்து, ஏற்றுகொள்ள உதவுவதற்கும் தேவை இருக்கிறது.

பாராளுமன்றம் மூலமாக சட்ட மாற்றம், உரிமைகளை கேட்டு நீதிமன்றத்துக்கு போவது, வோட்டெடுப்பு – இவைகளில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள், மனித உரிமைகளை பெறுவதற்கான சாத்தியமான வழி என்று எதை நீங்கள் கூறுவீர்கள்?
கண்டிப்பாக முதல் இரண்டு வழிகள். ஆனால் சட்ட மாற்றம் உடனடியாக சமுதாய மாற்றத்தை கொண்டுவராது. மக்களிடம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் புரிதலை உண்டாக்கி, அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும்.

எத்தகைய சட்ட மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
தன்பாலீர்ப்பை குற்றமற்றதாக்குவது, மற்றும் நம் சமூகத்தினருக்கு சட்ட பாதுகாப்பு ஆகியவற்றிற்காக நாங்கள் போராடி வருகிறோம்.

இலங்கைக்குள் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் எற்றுக்கொள்ளப்படுதலில் மாறுபாடுகள் உள்ளனவா?
கண்டிப்பாக. நகர்புற பகுதிகளில் தைரியமாக வெளியே வந்து, தலைநிமிர்ந்து வாழும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை காண்பீர்கள். கிராமப்புரங்களில் பெரும்பாலும் இவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள். அதுபோல நகர் மற்றும் கிராமபுரங்கள் இரண்டிலும், ஆண்களை வீட பெண்களுக்கு பிரச்சனைகள் அதிகம். தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் எளிதாக வெளியே வரமுடிகிறது. ஆனால் தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் மற்றும் திருநம்பிகளுக்கான சவால்கள் அதிகம்.

இலங்கையின் ஊடகங்கள் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் பற்றிய செய்திகளை எவ்வாறு கையாளுகிறது?
சிலசமயம் நல்ல முறையில், சிலசமயம் மிக மோசமாக. தனித்தனி ஊடகத்தை பொறுத்து இது மாறுபடுகிறது. நாங்கள் பார்த்த வரையில், சிங்கள ஊடகங்கள் எங்களை மிகவும் மோசமான முறையில் சித்தரிக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் சிலசமயம் நல்ல முறையில் எங்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறது என்று சந்தோஷப்பட்டால், உடனே ஒரு மோசமான சித்தரிப்பு தென்படுகிறது. தமிழ் ஊடகங்கள் எங்களை பற்றிய செய்திகளை வெளியுடுவதே இல்லை. பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள். ஒருபுறம் அது வேதனையை தந்தாலும், குறைந்தபட்சம் எங்களை மோசமான முறையில் சித்தரிக்காமல் இருக்கிறார்களே என்பதில் ஒரு நிம்மதி!

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் மத்தியில் குறிப்பிட்ட பாலினம், இனம், மதம், மொழியை சார்ந்தவர்களின் பிரச்சனைகள் பிறரை வீட அதிகமாக, கடுமையாக இருக்கிறதா?
எல்லா இடங்களை போல, இங்கேயும் இஸ்லாம் சமூகத்தினர் மத்தியில் பாலீர்ப்பு, பாலடையாளம் போன்ற விஷயங்களை பற்றி கடுமையான, பழமையான கருத்துகளை காணமுடிகிறது. அதே நேரத்தில் இஸ்லாம் சமுகத்தில் எங்களுக்கு பல சகாக்கள் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அதேபோல சிங்கள சமூகத்தை வீட தமிழ் சமூகத்தில் எதிர்ப்பு அதிகம். ஆனால் நாங்கள் இவர்களுடன் பழகி, பேசி, எங்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும்பொழுது பலர் எங்களை புரிந்து, எற்றுக்கொண்டு, ஆதரிப்பதையும் காண்கிறோம்.

இலங்கையில் நங்கை(Lesbian) மற்றும் ஈரர்(Bisexual) பெண்களுக்கான பிரச்சனைகள் என்ன?
பெரும்பாலும் இவர்கள் மறைந்தே வாழ்கிறார்கள். ஆண்களுடன் கட்டாய கல்யாணம், குடும்பத்தினர் வன்முறை, குடும்பத்தால் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது, சமுதாயத்தில் சிறுமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்படுவது, ஆண்களிடமிருந்து வரவேற்க்கப்படாத பாலியல் நடத்தை, மன மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் என்று பல. இவர்களிடையே தற்கொலைகளும் அதிகம். இவர்கள் குடும்பங்கள் இது போன்ற பெண்களை தங்கள் பெண் துணைகளுடன் சேரவிடாமல் தடுப்பதும், வலுக்கட்டாயமாக இவர்களை பிரிப்பதும், ஆண்களுடன் திருமண வாழ்க்கையில் தள்ளுவதும், இவர்களை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

திருநம்பிகளின் (FTM) கதி என்ன?
பெரிதாக வித்தியாசமில்லை. இவர்களும் மறைந்தே வாழ்கிறார்கள். இவர்கள் சமுதாயத்தில் கிண்டல், கேலி, ஒத்துக்கப்படுதல் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள். சிலசமயம் இவை வன்முறையாகவும் உருவெடுக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் தனிமனிதர்களுக்கு எத்தகைய உதவிமுறைகள் உள்ளன?
ஈக்வுல் கிரவுண்டு நிறுவனம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்காக அவசர உதவி எண், மற்றும் பிரச்சனைகளில் உதவ தனியாக ஒரு குழு போன்றவற்றை உருவாக்கி நடத்திவருகிறது. நாங்கள் இவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து, இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறோம்.

தனிமனிதர்களின் பிரச்சனைகளில் உதவ உங்கள் நிறுவனத்துக்கு என்ன தேவை?
நிதி! ஒரு தனி நிறுவனத்தால் என்ன செய்யமுடியுமோ அதை நாங்கள் செய்கிறோம். முக்கால்வாசி நேரங்களில் போதிய நிதி இல்லாதது தான் எங்களது பெரிய பிரச்சனை.

இலங்கையில் ஒரு பால் உறவு (Same-sex relationship) பற்றிய சட்ட நிலை என்ன?
இலங்கையின் சட்டப்பிரிவின் 365A படி நங்கை(Lesbian) மற்றும் நம்பிகள்(Gays) குற்றவாளிகள்.

ஈக்வல் கிரவுண்டு நிறுவனம் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றங்களின் பொழுது, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறது. இதுபோன்ற பொதுவான பிரச்சனைகளில் நீங்கள் பங்குகொள்வதால், பொது மக்கள் மத்தியில் உங்களை பற்றிய மனமாற்றம் ஏற்ப்படுவதை பார்த்திருகிரீர்களா?
சில சமயங்களில். இன்றும் பலர் சுனாமி நேரத்தில் எங்கள் நிறுவம் செய்த உதவிகளை அன்புடன் நினைவு கூறுகிறார்கள். அதை வீட, கண்டிப்புடன், ஒழுக்கமான முறையில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு இருப்பது தான், மக்களை கவர்கிறது என்றால் அது மிகையாகாது.

மற்ற நாடுகள் உங்களுடன் எப்படி ஒத்துழைக்க முடியும் என்று நினைகிறீர்கள்? உதாரணமாக இந்தியா போன்ற தென்னாசிய நாடுகள் இலங்கையில் உள்ள மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் மனித உரிமை போராட்டத்திற்கு எப்படி உதவலாம்?
இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான உரிமைகளுக்காக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நாட்டில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழ்ந்தால் அது மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கிறது, மனமாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. மக்களை சிந்திக்க, விவாதிக்க தூண்டுகிறது. “இந்தியா, பாகிஸ்தான்,நேபால் போன்ற நாடுகளில் நடப்பது, நம் நாட்டில் ஏன் நடக்கக்கூடாது?” என்று மக்கள் பேச துவங்குகிறார்கள். இன்னும் நம் நாடுகள் இணைந்து செயல்பட, மேலும் பல வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.

]]>
https://new2.orinam.net/ta/interview-sri-lankan-activist-rosanna-flamer-caldera-ta/feed/ 0
நவம்பர் 20: திருனர்கள் நினைவு தினம் https://new2.orinam.net/ta/nov-20-transgender-day-of-remebarance-ta/ https://new2.orinam.net/ta/nov-20-transgender-day-of-remebarance-ta/#respond Thu, 17 Nov 2011 18:23:32 +0000 https://new2.orinam.net/?p=4981 [ தமிழாக்கம் : ஸ்ரீதர் சதாசிவன் ]

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். 1998 ஆம் ஆண்டு ரீடா ஹெஸ்தர் ஒரு மெழுகுவர்த்தி அஞ்சலியாக துவங்கிய இந்த நாள், இன்று உலகில் பல நகரங்களில் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, நண்பர்களுடன் ஒரு பாட்லக் நிகழ்ச்சி, உடைகள் பரிமாறும் நிகழ்ச்சி மற்றும் என் நண்பர் பால் (Paul) ஏற்பாடு செய்திருக்கும் ஒரு திறந்த மேடை நிகழ்ச்சி என்று நான் இந்த நாளை கழிக்கப்போகிறேன். சில ஆண்டுகளாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் திருனர்களின் பெற்றோர்களும் பங்குகொண்டு, தங்களது குழந்தைகள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், இந்த சமுதாயத்தில் நடக்கவேண்டிய மாற்றங்கள் பற்றி பேசுவதை பார்த்திருக்கிறேன். அவர்களின் வருகை, அவர்கள் தங்கள் குழந்தைகள் மேல் காட்டும் அக்கறைக்கும், ஆதரவிற்கும் ஒரு அடையாளம்.

எனக்கு இந்த நாள் ஒரு உணர்ச்சிகரமான நாள். இந்த சமுதாயத்தின் கொடுமைகளுக்கு பலியாகி, ஈனர்களால் கொலை செய்யப்பட்டு நம்மை விட்டு பிரிந்த உயிர்களையும், மற்றும் இந்து சமுதாயம் அவர்கள் மீது காட்டும் வேற்றுமையையும், வெறுப்பையும் தாங்கமுடியாமல் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்ட உயிர்களையும் நினைவுகூரும்போழுது என் மனம் கனக்கிறது. அவர்களின் இறப்பின் பொழுது கூட, ஊடகங்களும், சட்ட ஒழுங்கு அதிகாரிகளும் திருனர்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்கள் விரும்பி ஏற்கும் பாலடையாளத்தை சட்டை செய்யாமல், தவறான பாலை பயன்படுத்துவதை கண்டால் என்னால் கோபப்படாமல் இருக்கமுடியவில்லை. (அதாவது திருநங்கைகளை ஆண் என்றும், திருநம்பிகளை பெண் என்றும் தவறாக அடையாளப்படுத்துவது)
இறப்பில் கூட இந்த உயிர்களுக்கு மதிப்போ, மரியாதையோ கிடைப்பதில்லை. இத்தனை உயிர்கள் இறந்தாலும், இந்த சமுதாயம் திருனர்களை புரிந்துகொள்வதில்லை. இந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும், எதோ இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்பதில் ஒரு சந்தோஷம். வாழக்கையில் பல தருணங்களில் நான் என் உயிரை துறக்கும் முடிவிற்கு வந்திருக்கிறேன். நல்லவேளை அதை செயல்படுத்தவில்லை. என்னுள் இருக்கும் மனவலிமைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி.

இந்த ஆண்டு மிகவும் கடுமையாக இருந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் தலை நகரான வாஷிங்க்டன் டீ.சீ யில் திருனர்களுக்கு எதிராக பல சம்பவங்கள், தொடர் கொலைகள், அதுவும் குறிப்பாக வெள்ளையர் அற்ற பிற சமூகங்களில்! இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். மெக்டோனல்ட் கடையில் ஒரு திருநங்கை, பணியாளர்களால் கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டார். கடையில் இருந்தவர்களும், பிற பணியாளர்களும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நடந்ததை வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள். என்ன கொடுமை! அதேபோல, நான் வசிக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில், எனது இல்லத்திற்கு அருகாமையில் ஒரு திருநங்கை ஈனர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார தாமதத்திற்கு பிறகு கடைசியாக போலீஸ் அதை “ஹேட் கிரைம்ஸ்” (Hate crimes) என்று பதிவுசெய்தார்கள். இதுபோல கவனத்திற்கு வராத, தாக்குதல் நிகழ்வுகள் ஏராளம். கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், அதை பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் வெகு அபூர்வம் எனபது சோகமான உண்மை.

படம்: கடந்து மூன்று வருடத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட திருனர் கொலைகள் (Click to enlarge)

இணைப்புகள்:

 

]]>
https://new2.orinam.net/ta/nov-20-transgender-day-of-remebarance-ta/feed/ 0
ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/ https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/#comments Tue, 19 Apr 2011 02:16:26 +0000 https://new2.orinam.net/?p=2311 Excerpts from Barkha Dutt’s TV Show : Being Gay : The Parents’ Story. Watch the full video in English on NDTV’s website here .
Our sincere thanks to NDTV and Bharka Dutt for presenting this amazing show.

சித்ரா பாலேகர் : என் பொண்ணு என்கிட்ட தான் ஒரு லெஸ்பியன்னு வெளியே வந்தது 1993 ஆம் ஆண்டு. அவ அப்போதான் காலேஜ் முடிச்சிருந்தா. எனக்கு அவ சொன்னதை கேட்டப்போ, ஆச்சரியமா இருந்தது. பின்னாடி அவளே எனக்கு சொன்ன மாதிரி, அவ எல்லாரையும் போல எதிர்பாலீர்ப்புள்ளவளா தான் இருப்பான்னு எனக்கு நானே முடிவு பண்ணிகிட்டேன். இந்த மாதிரி ஒரு சாத்தியம் இருக்கும்னு கூட நினைக்கலை. மத்தபடி அவ சொன்னப்போ, நான் ஒன்னும் பெரிசா அதிர்ச்சியெல்லாம் அடையலை. அவள என் முழுமனசோட ஏத்துகிட்டேன்.

சித்ரா பாலேகர்

என்னோட ஆச்சரியத்துக்கு காரணம், எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அதைபத்தி சினிமால, வெளிநாட்டுக்கு போனப்போ, இது மாதிரி நேரத்துல கேட்டிருக்கேன், அவ்ளோதான். மத்தபடி என் வாழ்க்கைல, எனக்கு தெரிஞ்சவங்கள்ல, இது மாதிரி யாரும் இருக்கலை. நான் அவகிட்ட கேட்ட முதல் கேள்வி, “ஏன் இத்தனை நாளா என்கிட்ட இதை நீ சொல்லல? உனக்கு எப்போ இது தெரிஞ்சது”னு தான். அவளுக்கு ஒரு பதிமுணு, பதினாலு வயசுல தான் ஒரு லெஸ்பியன்னுதெரிஞ்சிருக்கு. ஸ்கூல்ல பொண்ணுங்க பசங்கள பத்தி, பசங்க பொண்ணுங்கள பத்தி பேசும்போது, இவளுக்கு அந்த மாதிரி ஒன்னும் பேசவோ, கேக்கவோ விருப்பம் இல்லை. ரொம்ப குழம்பியிருக்கா. அவள சுத்தி எல்லாரும், எல்லாமும் ஆண்-பெண் சமந்தப்பட்ட விஷயங்களா இருந்ததால, அவளோட இந்த ஒருபாலீர்ப்பை நினைச்சு அவ குழம்பியிருக்கா, எல்லாரையும் விட்டு ஒதுக்கப்பட்டவளா பீல் பண்ணியிருக்கா. எங்க குடும்பத்துல நாங்க எல்லாத்தையும் மனம்விட்டு பேசுவோம் , அரசியலோ, சமுதாயமோ எதை பத்தி வேணும்னா பேசுவோம். ஆனா அவ சொன்னா, “அம்மா, நாம எல்லாத்தையும் பத்தி பேசினோம். ஆனா செக்ஸ் பத்தியோ, பாலீர்ப்பு பத்தியோ பேசினதில்லை. அதுனால எனக்கு தயக்கமா இருந்தது, இதை பத்தி பேச பயமா இருந்தது”னு.

அவ ஒரு நல்ல பொண்ணு. எல்லாத்துலயும் முதல்ல வருவா. அவ என் பொண்ணுங்கறதுல எனக்கு ரொம்பவே பெருமை, பெருமிதம். அவ என்கிட்ட லெஸ்பியன்னு வெளிய வந்தப்போ நான் யோசிச்சேன் “இதுனால நம்ம பொண்ணு மேல நமக்கு இருக்கற பாசமும் , அவளால நாம அடைஞ்ச பெருமையும் குறைஞ்சு போகுமா? இல்ல மாறிடுமா?”னு. இல்லையே! உடனடியா என் மனசு திடமாச்சு, நம்ம பொண்ணு இவ. எப்படி இருந்தா என்ன, அப்படின்னு ஒரு தெளிவு.

இது கொஞ்சம் பர்சலனா விஷயம்ங்கறதுனால, சொந்தம் பந்தம், அக்கம் பக்கத்துல, யார்கிட்ட என்ன சொல்லனும்னு, இதெல்லாம் அவ முடிவிக்கே நான் விட்டுட்டேன். அவளும், அவளோட பார்ட்னரும் என்கூட, எங்க வீட்டுலதான் இரண்டு வருஷம் இருந்தாங்க. எங்க நெருங்கின சொந்தக்காரங்க, பிரெண்ட்ஸ் எல்லாம் என் பொண்ணையும், அவளோட பார்ட்னரையும் (பெண்) முழு மனசோட ஏத்துக்கிட்டாங்க.

பிந்துமாதவ் : எனக்கு ஒரு பன்னண்டு பதிமுணு வயசிருக்கும்போது நான் ஒரு “கே”னு எனக்கு தெரியவந்தது. என்னோட வெளிய வந்த கதை ரொம்பவே கஷ்டமான, வேதனையான கதை. என் காலத்துல இப்போ இருக்கற மாதிரி டி.வீ சானல்ஸ், இன்டர்நெட் இதெல்லாம் கிடையாது. நான் காலேஜ் போய், மருத்துவம் சம்மந்தமான புத்தகங்கள படிக்கற வரைக்கும் எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. அந்த வாரத்தையை கூட நான் கேட்டதில்லை. எனக்கு பசங்கமேல ஈர்ப்புனு தெரியும். ஆனா அதுக்கு ஒரு பேரு இருக்கு, என்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்க இதெல்லாம் அப்போ தெரியலை. என்கூட ஸ்கூல்ல படிக்கற பசங்க எல்லாம் பொண்ணுங்கள பத்தி பேசும்போது, எனக்கு அதுல எல்லாம் பெருசா நாட்டம் இல்லை. என்னோட ஒருபாலீர்ப்பை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாததுனால, என்னை நானே ரொம்ப கீழ்த்தரமா நினைச்சேன். நான் ஒரு தரம் கேட்டவன், பாவி, கேவலமானவன் அப்படி எல்லாம் என்னை நானே நினைச்சு வெறுத்திருக்கேன். அதனால என்னோட சுயமரியாதை சுத்தமா அழிஞ்சு போச்சு. இரண்டு மூணு தரவை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணினேன். என்னோட இந்த பாலீர்ப்பை பத்தி என் அம்மாக்கோ, அப்பாக்கோ தெரிஞ்சு போச்சுன்னா, எங்க குடும்ப மானமே போய்டும் அப்படி எல்லாம் நினைச்சு பயந்து நடுங்குவேன். இந்த கவலைகளால படிப்புல நாட்டம் குறைஞ்சது. இன்ஜினியரிங் மூணாவது வருஷத்துல ஒரு பேப்பர் தவிர, மீதி எல்லாத்துலயும் பெயில் ஆனேன். வேலைக்கு போனபிறகு எங்க வீட்டுல கல்யாணத்துக்காக ரொம்பவே நிர்பந்தம். வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன். கல்யாணம் தோல்வியில முடிஞ்சது. ஒரே வருஷத்துல விவாகரத்து. ரொம்பவே விவகாரமான விவாகரத்து. எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே மனகஷ்டம். அப்போ கூட எங்க அப்பா அம்மாகிட்ட நான் ஒரு “கே”, எனக்கு பசங்க மேல ஈர்ப்பு, இதெல்லாம் பேசமுடியலை. அப்புறம் நான் வேலை மாறி அமெரிக்கா போன பிறகு, அங்க இருக்கற என்னை போன்றவர்களுக்கான ஆதரவு நிறுவனமான “த்ரிகொன்” மூலமா என்னை மாதிரி இருக்கற பிற இந்தியர்கள சந்திச்ச அப்பறம்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்கையை பத்தி புரிய ஆரம்பிச்சது.என்னை நானே புரிஞ்சு, ஏத்துகிட்டேன். முதல்ல அமெரிக்காலேயே செட்டில் ஆய்டலாம்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சப்போ, இந்த மாதிரி பயந்து, குடும்பத்தை விட்டும், நாட்டை விட்டும் ஏன் தள்ளி இருக்கணும்னு தோணிச்சு. அதனால தைரியமா இந்தியாவுக்கு திரும்பினேன்.

பிந்துமாதவ் மற்றும் அவரது அம்மா

பிந்துமாதவின் அம்மா : மாதவ் வெளியே வந்தப்போ, அவன் ஒரு “கே”, அவனுக்கு பசங்க மேல தான் ஈர்ப்புனு சொன்னப்போ, எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. நான் உடனடியா அவன ஒரு சாமியார்கிட்ட கூட்டிகிட்டு போய் பரிகாரம் கேட்டேன். ஒண்னும் பலனில்லை. அப்புறம் ஒரு மருத்துவர போய் பாத்தோம். அவர் தெளிவா எனக்கு சொன்னாரு, ஒருபாலீர்ப்புனா என்ன, அதுக்கு என்ன அர்த்தம், அதை மாத்த முடியாதுனு எல்லாம் விவரமா சொன்னாரு. உன் பையன் மாறவேண்டியதில்லம்மா, நீதான் உன் மனச மாத்திகிட்டு அவன புரிஞ்சிக்கனும்னு சொன்னாரு. நான் கொஞ்சம், கொஞ்சமா மனசு மாறினேன். ஒருபாலீர்ப்பு பத்தின படங்களை பாத்தேன் (“மை ப்ரதர் நிகில்”,”பிலடெல்பியா”). இவனை மாதிரி நிறைய பேரு இருக்காங்கனு புரிஞ்சது.

எனக்கு மாதவ தவிர ஒரு பொண்ணும் இருக்கா. அவ கல்யாணம் முடியற வரைக்கும் யார்கிட்டயும் இதை பத்தி சொல்ல வேண்டாம், கொஞ்சம் அமைதியா இருன்னு நான் மாதவ்கிட்ட கேட்டுகிட்டேன்.  அதுக்கப்புரம், மாதவே எங்க குடும்பத்துல மத்த எல்லார்கிட்டயும் இத பத்தி சொன்னான். இன்னிக்கும் என்னால தைரியமா என் சொந்தகாரங்க கிட்ட இதை பத்தி பேசமுடியலைங்கறது தான் உண்மை.

பஞ்சாபி பாட்டி : இதபாருங்க, என் பேரன் “கே” தான். அவன் அப்படிதான், அவன் வாழ்க்கை அப்படிதான். இதை எதிர்கரவங்க, முதல்ல

பேரனும் பாட்டியும்

என்கிட்ட மோதட்டும், அப்புறம் என் பேரன்கிட்ட மோதலாம். அவங்க அவங்க வாழ்க்கைல ஆயிரம் ஓட்டை இருக்கு, அதை கவனிக்காம , அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி என்ன பேச்சு? அந்தகாலத்துலையே சுயம்வரம்ங்கர பேருல எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அதிகாரம் குடுத்தாங்க. ஆதி காலத்துலேயே அது சாத்தியம்னா, இப்போ ஏன் கூடாது? சட்டம் எழுதறவங்களுக்கு என்ன தெரியும், ஒரு அம்மா, ஒரு பாட்டிக்கு என்ன உணர்ச்சி இருக்குனு? எனக்கு என் பேரன் முக்கியம். என் பேரன் அவன் இஷ்டப்படி அவன் வாழ்க்கையை வாழனும். யாரு அதுக்கு தடை போடுவாங்க, பாப்போம். அட, இதோ ஜப்பான்ல பூகம்பத்துல ஊரே அடிச்சிகிட்டு போச்சு, ஒரு நொடில வாழ்கையே மாறி போச்சு. அங்க போன உசிருல “கே” பசங்க, மத்தவங்கன்னு எதுவும் வித்தியாசம் இருக்கா? இருக்கற வரைக்கும், மனுஷங்களா அவங்க இஷ்ட்டப்படி வாழ விடுங்க! உலகத்துல எல்லாருக்கும் அவங்க இஷடப்படி வாழ உரிமை இருக்கறப்போ, என் பேரனுக்கோ, அவனை மாதிரி இருக்கற மத்த பசங்களுக்கோ மட்டும் அந்த சுதந்திரம் இருக்க கூடாதா? பையனோ, பொண்ணோ, யார அவங்க விரும்பராங்களோ அவங்களோட சந்தோஷமா இருக்கட்டுமே. அதுல தலையிட நீங்க யாரு, கேக்கறேன்!

நிதினும் அவரது அம்மாவும்

நிதினின் அம்மா : சின்ன வயசுலேர்ந்தே என் பையன் வித்தியாசமா தான் இருந்தான். பொண்ணுங்களோட தான் விளையாடுவான், பசங்க கூட விளையாட மாட்டான். எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது. அவன் கடைசியா என்கிட்ட அவன் ஒரு “கே”னு சொன்னப்போ, எனக்கு அதிர்ச்சி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு தெரியும்னு சொன்னேன். உன் வாழ்க்கை, உன் இஷ்டப்படி இருப்பானு சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை. அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என்ன சொல்லும்னெல்லாம் நான் கவலையே படலை.  இப்போகூட எல்லார்கிட்டயும் நானே சொல்றேன், ஆமாம் என் பையன் ஒரு “கே” தான், அப்படின்னு. அப்புறம் என்னால முடிச்சவரை, அவங்களுக்கு இதபத்தி புரியவைக்கறேன். என்னதான் ஆனாலும், அவங்க நம்ம குழந்தைங்க, நம்மாளோட அன்பும் ஆதரவும் அவங்களுக்கு தேவை.

Image Source : NDTV.com

]]>
https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/feed/ 1
TV9 பிரச்சனை https://new2.orinam.net/ta/tv9-debacle-podcast-ta/ https://new2.orinam.net/ta/tv9-debacle-podcast-ta/#comments Sun, 06 Mar 2011 12:30:46 +0000 https://new2.orinam.net/?p=4372 அனிருத், பிரவீன், ராம்கி, ஸ்ரீ, மற்றும் வேலு இந்த பாட்காஸ்டில் சமீபத்திய TV9 பிரச்சனையை பற்றி பேசுகிறார்கள்.

]]>
https://new2.orinam.net/ta/tv9-debacle-podcast-ta/feed/ 1