கவிதை – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Thu, 16 Feb 2023 09:49:25 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png கவிதை – ஓரினம் https://new2.orinam.net 32 32 [கவிதை] என் வார்த்தைகள் https://new2.orinam.net/ta/poem-my-words-ta/ https://new2.orinam.net/ta/poem-my-words-ta/#respond Thu, 16 Feb 2023 07:37:05 +0000 https://new2.orinam.net/?p=16208 என் வார்த்தைகள்

 


வலுவிழந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்த கவிதை
காய்ந்த பூமாலை.

செத்த சொற்கள் மண்டி கிடக்கின்றன
புத்தகக் கல்லறையில்.

சொல்லி பயனில்லை
யார் அறிவார் என் நெஞ்சம்?

பிறந்து சாகும் பிஞ்சு குழந்தைகள் போல்
கேட்டும் கேட்கா என் ஒலியிலா வாக்குகள்
பிறர் கேளாச் செவிகள்.

“நான் இது தான், நான் இது தான்.”
என்று பல முறை கூறியும்
வார்த்தைகள் ஏனோ என்னை தான் தாக்கின
உங்களை அடையவில்லை.

உங்கள் முகச்சுழிவில் அருவருப்பு கண்டு
அவமானம் கொண்டு என் வார்த்தைகள்
திசை மாறி போயின.

வலி சுமந்து
கீழே விழுந்த என் வார்த்தைகள்
எப்படி அடையும் உங்களை?

வாக்கு போரில்
என் சொல் அம்புகளை
வீழ்த்தின உங்கள் சொல் அஸ்திரங்கள்.

அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை
விரட்டி மிரள செய்து
பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள்
நியாயமா?


Image submitted by author, courtesy OpenAI.

]]>
https://new2.orinam.net/ta/poem-my-words-ta/feed/ 0
[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்) https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/ https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/#respond Sun, 29 Jan 2023 17:16:11 +0000 https://new2.orinam.net/?p=16151 அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவன் ஊஹானின் ஆய்வகத்தில் தோன்றினான்… இவனோ தமிழ்நாடு என்னும் தாயகத்தில் வேரூன்றினான்;

அவன் என் முகத்தின் துளைகளில் காமம் கொண்டு உட்புகுந்தான்… இவனோ என் அகத்தின் துளைகளில் காதல் கொண்டு உள்நிறைந்தான்;

அவன் என் உடம்பெனும் சிறையுனுள் அகப்பட்ட போது மட்டுமே மூச்சு முட்டுகிறது… இவனோ என் உடம்பெனும் கூட்டினுள் கூடாமல் தனித்திடும் போது சுவாசம் விம்முகிறது;

அவன் என்னுள் பிரவேசித்த பிறகே என்னூன் வெப்பம் கொள்கிறது… இவன் என்னை விட்டு நீங்கினால் என்னூனுயிரெலாம் வெந்து வெந்து ஊதுகனல் ஆகிறது;

அவனால் நான் கொண்ட மயக்கம் மருந்து உண்ணத் தெளியும்… இவனால் நான் கொண்ட மயக்க நோயும் இவனே மருந்தும் இவனே;

அவனால் என் புலன்கள் சில ஆற்றல் இழந்தன… இவனால் என் ஐம்புலனும் செயல் மறந்து நிற்கின்றன;

அவன் என்னை அண்டாமல் அகல அறிவியல் கண்ட தடுப்பூசிகள் உண்டு… இவன் என்னை விட்டு அகல அறவியல் மாண்ட திருமணம் என்ற தடுப்பூசி உண்டு;

அவன் என்னை ஆட்கொண்டால் தற்காலிக உடல் நோயாளி என உலகம் என் மேல் பரிதாபம் கொள்கிறது… இவன் என்னை ஆட்கொண்டால் நிரந்தர உள நோயாளி உலகம் என் மேல் வெறுப்பைக் கக்குகிறது;

அவன் இயல்பாக என்னைத் தீண்டினால் சில வாரங்களுக்கு மட்டுமே வனவாசம்… இவன் இயல்பாக என்னைத் தீண்டினால் பல நாடுகளில் வாணாள் சிறைவாசம்;

அடிக்கடி உருமாறும் அவனுக்கு ஏற்றவாறு உலகம் அவனைச் சமாளிக்கிறது… உருவும் திருவும் அறவே மாறா இவனுள் இருக்கும் என்னை உலகம் ஏனோ ஏற்க மறுக்கிறது;

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது…என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.

 


குறிப்பு:

– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது quilt இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டது.

– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/feed/ 0
[கவிதை] பால் புதுமையினர்? https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/ https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/#respond Wed, 25 Nov 2020 08:12:39 +0000 https://new2.orinam.net/?p=15275

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற ஓரினக் கனிமங்களின் ஓரினச்சேர்க்கையே நம் வானில் ஞாயிறாக ஒளிரக் காண்கிறோம்;

புவி மற்றும் நிலவு என்ற ஓரினக் கோள்களின் தற்பாலீர்ப்பே நம் கடல்களின் ஓதங்களாக ஆர்ப்பரிக்கக் காண்கிறோம்;

ஓரினம் சார் ‘நிம்பஸ்’ முகில்களின் தன்பால் காதற் கூடல்களே மாமழையாக இப்பூவுலகை நனைக்கக் காண்கிறோம்;

இக்காதற் கூடல்களே ஊடல்களாக மாறுமிடத்து மின்னல்களாகவும் இடிகளாகவும் அம்பரத்தில் கர்ஜிக்கக் காண்கிறோம்;

இங்ஙனம், ஞாயிறு, முகில், மழை என ஓரினர்களின் சங்கமமே நம் நீள்நெடுவானின் மாயா ‘வானவில்‘ ஓவியமாக மிளிரக் காண்கிறோம்.

ஓரினராகிய யாம்,

மெசொப்பொத்தேமியாவின் கில்கமெஷ் என்க்கீடு ஆக இருந்திட்டோம்;

இசுரயேலின் தாவீது யோனத்தான் ஆக இருந்திட்டோம்;

யவனத்தின் அலெக்ஸாண்டர் ஹெஃபேஸ்ட்டியன் ஆக இருந்திட்டோம்;

தமிழகத்தின் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் ஆக இருந்திட்டோம்;

சேரளத்தின் ஐயப்பன் வாவர் ஆக இருந்திட்டோம்;

ஹிந்துஸ்தானத்தின் மாலிக் கஃபூர் அலாவுதீன் கில்ஜி ஆக இருந்திட்டோம்;

இவ்வாறாக வரலாற்றின் முழுமையிலும் வாழ்ந்திட்ட யாம் பால் புதுமையினர் ஆவது எங்ஙனம்

காதல் தோன்றிட்ட காலம் முதல் இருந்திட்ட எம் காதல் பழைமையே அன்றி புதுமையன்று;

யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.

‘பரிசுத்த தேவாகமம்’ அங்கீகரிக்கும் உம் எதிரினக் காதலோ –

சாதி-மத-இனம் பார்க்கும்,

சந்தான பாக்கியம் தேடும்,

சொத்து சம்பத்து கடத்தும்.

‘பரிசுத்த தேவகாமம்’ ஆகிய எம் ஓரினக் காதலோ –

மாந்தரிடையே மாறுபாடு ஒழிக்கும்,
மக்கட்பேறுக்காக மட்டுமென்பதை மறுதலிக்கும்,

மாட்சிமை மனிதத்தில் மீநிறுத்தும்.

மனிதனை மெய்யுள்ளத்தோடு மனிதனாக மட்டும் நேசிக்கும் எம் ஓரினச் சேர்க்கை இயற்கையே;

சாதி-சொத்து-சந்ததி வேண்டி சமூகத்திற்காக உடன்படிக்கை செய்யும் உம் எதிரினச் சேர்க்கை செயற்கையே.

மொழிக்கிறுக்கன்.


Acknowledgents:
Image source: https://newstm.in/

]]>
https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/feed/ 0
கவிதை: காதலின் ஆற்றலால் (Tamil translation of Vikram Seth’s Through love’s great power) https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/ https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/#comments Sun, 09 Feb 2014 15:33:24 +0000 https://new2.orinam.net/?p=9813 VikramSeth_Huffpost

Image courtesy: Huffington Post

ஆங்கில மூலம்: விக்ரம் சேத்
தமிழாக்கம்: அரவிந்த்
பிழை, நயம், சீர் திருத்தம்: பூங்கோதை
ஓலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்


காதலதன் ஆற்றலில் பன்மையிழந்து,
உடல், பொருள் ஆவியும் பின்னிப்பிணைந்து,
ஒருமையாய் காதலுற் றுணையிருந்து,
சுதந்திர ஆழியில் மூழ்கித்திளைத்து,
அல்ல(து)திளைப்பாலேயே தடைதகர்த்து,
இன்புறுதலே இயல்பான நற்செயல்!

முன்பளித்த நீதியை உடைத்தெறிந்து,
நலிந்தோரை வீதியில் துகிலுரித்து,
இணைந்திட்ட ஈருயிர் பறித்தெரித்து,
விலங்கிட்டு ஈனமாய்க் கதறவைத்து,
நயமின்றி கீழ்த்தரமும் கொண்டிசைந்து,
வதைத்தலே இயல்பிலிலாத் தீஞ்செயல்!

 

ஒலி வடிவில் – Audio version

]]>
https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/feed/ 4
கவிதை: திருநங்கை தாலாட்டு https://new2.orinam.net/ta/thirunangai-thaalaattu/ https://new2.orinam.net/ta/thirunangai-thaalaattu/#comments Sat, 03 Dec 2011 20:02:29 +0000 https://new2.orinam.net/?p=5218

கனியினும் கனிந்த வுள்ளம், கனிந்து மெய்யுருகி – கண்கள்
பனிக்கவே நிற்கக்கண்டால், கல்லுமே கரைந்திடாதோ?
இனியுனக்கல்லல் இல்லை, கண்மணி கவலை வேண்டாம்
நனிதிறல் திருனர் முத்தே, செல்வி நீ கண்ணுறங்கு!

பெற்றதாய் தந்தை சுற்றம், விடுத்திட நீயும் செய்த
குற்றமும் ஏதும் உண்டோ – பாவியர் பேதை மாக்கள்
பற்றிடா துன்னை நாங்கள், அன்புடன் அரவணைத்தோம்
பெற்றி யீதெங்கட்கம்மா, தங்கமே கண்ணுறங்கு!

தஞ்சமும் உணவும்கூட தந்திடார் – வாழ்வில் நாமும்
மிஞ்சிட கல்வி தாரார், வேலைதான் தருவரோ காண்;
கெஞ்சியா பிச்சை கொள்வோம்? பாழும் இச்சூழல் மாறும்
அஞ்சிடாதமுதமே நீ, சோர்வற கண்ணுறங்கு!

தாயினும் பரிவு காட்டி , உலகறிவதனை யூட்டி
வேயினும் நல்ல தோளி, உந்தனை காத்து வெந்தே-
மாயினும் சமுதாயத்தை மாற்றுவோம், எமக்கு நீயோர்
சேயுமாய் ஆனாய் செல்வி, நன்கு நீ கண்ணுறங்கு!

]]>
https://new2.orinam.net/ta/thirunangai-thaalaattu/feed/ 4
ஆசிரியப்பா: போற்றிடுவோமே! https://new2.orinam.net/ta/aasiriyappaa-potriduvome/ https://new2.orinam.net/ta/aasiriyappaa-potriduvome/#comments Mon, 28 Nov 2011 23:43:55 +0000 https://new2.orinam.net/?p=5080

காதற் கதிரவன் ஆயிரம் கரங்கள்
நீட்டியே அன்போ டழைத்தும் அடைந்திட
இயலா நிலையில் ஏங்கிய புவிமகன்
தானும் பசலை படர பற்பல
கரங்கள் நீட்டினான் அவைதாம்
மரங்கள் அவற்றை போற்றிடுவோமே!

(பசலை: பிரிவாற்றாமையால் மேனி பசப்பு/பச்சை நிறம் அடைதல்)

ஆசிரியப்பா: ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதி உண்டு.
]]>
https://new2.orinam.net/ta/aasiriyappaa-potriduvome/feed/ 6
கவிதை: நானும் என் வலியும் https://new2.orinam.net/ta/kavithai-naanum-en-valiyum-poem-by-bessimon/ https://new2.orinam.net/ta/kavithai-naanum-en-valiyum-poem-by-bessimon/#comments Wed, 06 Jul 2011 14:09:17 +0000 https://new2.orinam.net/?p=2556 – பெசிமோன்

நிறைமாத கர்ப்பிணி போல்,
உருண்டு திரண்ட
கார்மேகம் போல்,
எப்போது வெளி வரலாம்
என்ற கேள்வியுடன்
கண்ணில் திரண்டு
நிற்கிறது கண்ணீர்

உள்ளிருக்கும் நெருப்பால்
புகைந்து புகைந்து
புகைக் கக்கும்
எரிமலைப் போல்
உன் நினைவுகளால் புகைகிறது
என் மனம்

நான்கு சுவர்களால் ஆன
சிறைக்குள்
அடைபட்டுப் போன
சிறைக் கிளிப் போல
“நீ” “நீ” “நீ” “நீ” என்ற
நான்குச் சுவர்களுக்குள்
அடைப் பட்டுக் கிடக்கிறது
என் எண்ண ஓட்டங்கள்

பத்து மாதம் கருவாய்ச் சுமந்து
தாலாட்டிச் சீராட்டி
வளர்க்கும் கனவுடன்
நோன்பிருந்து, தவமிருந்து
பெற்றடுக்கும் நாளை
எண்ணி எண்ணி கனாக் காண்கையில்
எமனாய் வந்த குறைப்பிரசவம் போல்,
பிரசவ வேதனையை விட
உச்ச கட்ட வேதனையுடன்
உன்னை இழந்த
மனவலியுடன் உடல்வலியும்
இணைய
மௌனமாய் அழுகிறேன் நான்

அழகாய் உருவானது கனவு,
உன் கைக்கோர்த்து பிடித்தப்படி நடக்க,
உன் தோள் சாய,
உன் மடியில் தூங்க,
உன் மார்பின் வெப்பம் கொள்ள,
உன் உயிரில் என்னை கலக்க,
கருவாய் உன்னை என் நெஞ்சில் சுமக்க,

அத்தனை கனவும்
கனவாகவே ஆனது இன்று,
கோபுரத்தில் நின்ற நான்
இன்று படு பாதாளத்தில்,

மனம் நிறைய அழுகை இருந்தும்
உடல் நிறைய ரணங்கள் இருந்தும்
வாய் விட்டு அழ இயலாமல்
மௌனமாய் கண்ணீர் விடுகிறேன்

அழுகைக்கு இல்லாத ஒரு சக்தி
மௌனமாய்
நான் விடும் கண்ணீருக்கு உண்டு
என்ற நம்பிக்கையில்

திரும்பி பார்கிறேன்,
பின்னால் தெரிவது
உன் நினைவுகளும்,
என் வலிகளும்,
நானும் தான்

About the author: Bessimon is an engineering graduate. He works in the hospitality industry because he prefers dealing with people to dealing with machine languages. He is gay and resides in Chennai.

]]>
https://new2.orinam.net/ta/kavithai-naanum-en-valiyum-poem-by-bessimon/feed/ 2
கவிதை: நான் – ஒரு திருநங்கையின் குரல் https://new2.orinam.net/ta/naan-oru-thirunangayin-kural/ https://new2.orinam.net/ta/naan-oru-thirunangayin-kural/#respond Wed, 22 Jun 2011 23:59:33 +0000 https://new2.orinam.net/?p=3808 எழுது மற்றும் ஒலிவடிவம்: ரஷ்மி
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்

[display_podcast]

]]>
https://new2.orinam.net/ta/naan-oru-thirunangayin-kural/feed/ 0
கவிதை: நான் – ஒரு திருநங்கையின் குரல்! https://new2.orinam.net/ta/kavithai-naan-oru-thirunangaiyin-kural/ https://new2.orinam.net/ta/kavithai-naan-oru-thirunangaiyin-kural/#comments Sat, 11 Jun 2011 16:15:54 +0000 https://new2.orinam.net/?p=2241 – ரஷ்மி, ஸ்ரீதர் சதாசிவன்

நான்..

ஆண் உடலில் அடைபட்டிருக்கும் பெண்ணுமல்ல, பெண் உடலில் அடைபட்டிருக்கும் ஆணுமல்ல! எனெனில் ‘இது இல்லையெனில் அது’ என்ற குறிகிய வட்டத்தையும் மீறிய பாலினமே எனது விழைவு.

இதே காரணத்தினால் தான், விரும்பிய அடையாளத்தை தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும், நான் பெண் உடை அணியும் ஆணோ அல்லது ஆண் உடை அணியும் பெண்ணோ கிடையாது.

நான்..

ஆதியின்றி, அந்தமின்றி விரிந்து காணப்படும் பாலின வெளிப்பாடுகளில், எனது அடையாளமும் ஒன்று.
அன்றும் இருந்திருக்கிறேன், இன்றும் இருக்கிறேன், இந்த மனித சமுதாயம் இருக்கும் வரை, என்றும் இருப்பேன்.

நான்..

ஒரு போராளி. உங்களை போலவே, இயற்கையின் சீற்றத்தையும், மனிதனால் நடத்தப்படும் பேரழிவுகளையும் சந்திக்கும் ஒரு போராளி.

பேரழிவுகள் மட்டுமின்றி சிறிய மனம் படைத்தவர்களையும், குறுகிய மனப்பான்மையையும், வேற்றுமைபடுத்துதலையும் தினமும் சந்திக்கும் ஒரு போராளி.

நான்..

இத்தனை போராட்டங்களிலும், மனம் தளருவத்தில்லை. இவையெல்லாம் இன்றைய கஷ்டங்கள், நாளைய சமுதாயம் அன்பும், அரவணைப்பும் நிறைந்தது என்பது என் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து, தளர்சியற்று மலர்ச்சியுடன் தொடர்கிறது என் வளர்ச்சி.

எனக்கு ..

ஆக்கப்பூர்வமான அறிவும், அளவற்ற நம்பிக்கையும் கொண்ட எனக்கு, கல்வியறிவும், வேலைவாய்ப்பும் பெற இருக்கிறது உரிமை!
மருத்துவர், செவிலியர், பொறியியல் வல்லுநர்், ஆசிரியர், கவிஞர், தொழிலதிபர், தலைவர் என்று பல முகங்கள் எனது பெருமை.

எனக்கு ..

வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ அழகாய் ஒரு மனை
அலுத்து சலித்து அந்த மனைக்கு திரும்பும்பொழுது, அணைக்க ஒரு துணை

எங்கள் அன்பின் சின்னங்களாய் குழந்தைகள், நான் போற்றிக் காக்கும் எங்கள் பெற்றோர்கள்
ஆதரவாய் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உற்றோர்கள்  –  என்று
உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது உரிமை.

நானும் நீங்களும்..

சிரிப்பு, அழுகை, கோபம், தாபம், மலர்ச்சி, மருட்சி என்று உங்கள் உணர்வுகளும் என் உணர்வுகளும் ஒன்று
மானமும் மரியாதையும் எனக்கும் உண்டு, என்னையும் கௌரவத்துடன் நியாயமாய் நடத்துவது நன்று

நானும் நீங்களும்..

இன்ப துன்பங்கள் கலந்த, சுதந்திரமும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை எனது கனவு
இதுபோன்ற என் கனவுகளில் நீங்களும் பங்கு கொள்ளவேண்டுமென்பது எனது விழைவு

திருநங்கை என்ற அடையாளமோ, அல்லது வெறும் உடலோ மட்டும் அல்ல நான்
நான் யாரென்று, எதுவென்று என்னிடம் கேளுங்கள் –
மனிதம் நான் !

நானும் நீங்களும்..

மனித பன்மை போற்றும் இந்த வாழ்க்கை பயணத்தில் துணை
எனக்கு நீங்கள் மட்டுமல்ல நண்பர்களே, உங்களுக்கு நானும்தான் –
எனெனில், இது என் பயணமல்ல, நம் பயணம்!
இது என் பயணமல்ல, நம் பயணம்!

Listen to audio podcast of this piece.

]]>
https://new2.orinam.net/ta/kavithai-naan-oru-thirunangaiyin-kural/feed/ 3
கவிதை: வழிப்போக்கன் https://new2.orinam.net/ta/kavithai-vazhippokkan/ https://new2.orinam.net/ta/kavithai-vazhippokkan/#comments Mon, 20 Oct 2008 13:24:20 +0000 https://new2.orinam.net/?p=3240 ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல
போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர
வேகாது கொஞ்சம் வெயிலும்தான்தான் தணிய
சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல
ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி

கோளாறு கொண்ட நெஞ்சு கொதிக்கத்தான் தொடங்க
மீளாது மறந்த எண்ணங்கள் மேலுமெழ
வீழாத கண்ணீர் வழியுந் தருவாயில்
பாரத திசையின் தோன்றி பயணி ஒருவன் வந்தான்

புன்னகை ஒன்று கண்டு பூத்தது எந்தன் நெஞ்சு
சின்னதாய் அறிமுகம் செய்து செல்திசை விசாரித்து
கண்ணதால் கண்டு கண்டு களிப்பும் சற்று கொண்டேன்
என்னைப் போல் ஒருவன் என்றான், அவனுக்கு நண்பன் என்றான்
தன்னைப் போல் இல்லை எனினும், தனக்கு மிக நெருக்கம் என்றான்

வண்ணத்தின் ஒலிகள் போல ஆயிரம் கதைகள் சொன்னான்
எண்ணத்தின் ஏக்கம் எல்லாம் ஒரு கணம் உறங்க வைத்தான்
வெள்ளத்தின் பாய்ச்சல் போலே விரைந்து விட்ட மனதில்
கள்ளத்தனமாய் ஒரு கலக்கம் காதல் தனைப்போலே
சொல்லித்தான் பயனுமென்ன, அதைவிட சொற்கள் கேட்டு நின்றேன்

எண்ணிக்கை மறந்த நொடிகள் எத்தனையோ நீங்கிவிடினும்
இன்றெல்லாம் திகட்டா அவை இன்னமும் வேண்டிடுங்கால்
சென்றிடும் இடம் செல்ல வந்தது ஓரூர்தி
தென்றலின் ஊரென்றான், தன்னது அதுவென்றான்
கண்களில் உறக்கம் என்றான், தோள்சாய்ந்து தூங்கி விட்டான்

என்னது உறங்கா மனம், எத்தனை கனாக்காண
சொன்னது நினைவின் ஒலித்தது, அவன் ஊரும் வந்து சேர
கண்டதில் களிப்பென்றும், மீண்டும் காண்போமென்றும்
சென்று வருவேனென்றும், சொன்ன கணம் மறைந்தான்
சோதியில் இரவுதனில்

யாருக்குப் பிள்ளையோ, எவளுக்குக் கணவனோ,
பாலையில் தூரல் போலே சின்னதாய் சொந்தம் தந்தான்

]]>
https://new2.orinam.net/ta/kavithai-vazhippokkan/feed/ 1